Today, I went to Lok Bhavan and, in the absence of the Governor, handed over my resignation letter from the post of Chief Minister to the Governor’s Special Secretary.
As someone who was born and brought up in a small village, I had never imagined that one day I would become an MLA, a Minister, the Leader of the Opposition, and serve twice as the Chief Minister of Karnataka. A dream this big became possible only because of the Constitution written by Babasaheb Dr. B. R. Ambedkar.
Buddha, Basavanna, Babasaheb Ambedkar, and Mahatma Gandhi have always shown me the path. Through my forty-eight years in public life, I have always tried to stand with honesty beside the poor, the oppressed, the neglected, and those who were denied opportunities in society. That is the greatest satisfaction of my life.
I will forever remain grateful to the party legislators who trusted me and chose me to lead, to my cabinet colleagues who walked with me through every challenge, and to Smt. Sonia Gandhi, Shri Rahul Gandhi, and AICC President Shri Mallikarjun Kharge for believing in me and giving me this responsibility.
But above all, I bow my head before the people of Karnataka, the lakhs of affectionate hearts who treated me as one among their own, blessed me, encouraged me, corrected me, stood by me in difficult times, and held my hand throughout this long journey. Whatever I am today is because of you.
The Constitution is my religion, and the people are my God. My resignation is only from the Chief Minister’s post, not from public life or from my commitment to the people.
Till my last breath, I will continue to fight for social justice and stand against divisive communal forces that go against the spirit of our Constitution.
Thank you for your love, trust, and companionship through every step of this journey. ❤
IMPORTANT: Gurmeet Ram Rahim Singh (Dera Sacha Sauda chief) granted parole once again, this time for 30 days. It’s the 16th time he has been out on parole since his conviction in August 2017.
He is serving a 20-year sentence for rape. Meanwhile likes of Umar Khaled have stayed in jail for almost 6 years without even a trial commencing. Yeh hai JUSTICE system: Wonder what our Lordships would pontificate on next! 🙏
Classic retrospective myth-making. This over-intellectualizes what was largely an organic political shift.
A war room can build the pipeline, but it cannot manufacture the fuel. The real force behind @TVKVijayHQ
rise is @actorvijay's enormous cultural capital and a genuine anti-incumbency sentiment among the people.
Organization can channel charisma, but it can never replace it. Data may be the accelerant — but the leader and the people are the actual fire.
@tnrags@ptrmadurai Everyone has their biases and you've this intimidatory/arrogant bias on PTR. When someone's offering a plenty of refreshingly compelling notice of his services and of course some not so likeable things then, I'd choose to highlight the overall goodness than personal dislikes.
"இங்கு கட்சி பேதங்களைக் கடந்த ஒரு எச்சரிக்கை இருக்கிறது. தங்களிடம் இருக்கும் அதிகாரம் நிரந்தரமாகி விட்டது தன்னை யாரும் வீழ்த்த முடியாது என்று ஏதாவது கட்சி கருதத் தொடங்கினால், அந்த மாயையைத் தகர்த்தெறிய ஏதாவது ஆயுதத்தை வாக்காளர்கள் தேடத் தொடங்குவார்கள்."
தவெகவுக்கு வாக்களித்தவர்கள் எல்லாரும் தற்குறிகள், பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் எல்லாரும் சங்கிகள், திமுகவுக்கு வாக்களிப்பவர்கள் அனைவரும் குடும்பக் கொத்தடிமைகள்...
இப்படிப்பட்ட narratives எல்லாமே அறிவுச் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடுகள். Intellectually and analytically lazy. உண்மை என்ன?
இதுதான் உண்மை என்று ஒரே ஒரு வரியில் அடக்கி விட இயலாது. அது கொஞ்சம் சிக்கலானது.
திமுகவின் ஆட்சி மீதான பல விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருந்தன. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டாக பல வகைகளில் அதிருப்திகள் வெளிப்பட்டுக் கொண்டுதான் வந்தன. தொடர்ந்து ஆதரித்து எழுதிக் கொண்டிருந்த நானே கூட அதனை சுட்டிக் காட்டினேன். சென்ற அக்டோபர் மாதம் எழுதிய ஒரு பதிவில் 'இப்படியே போய்க் கொண்டிருந்தால் மறுபடி கூப்பில் உட்கார வைத்து விடுவார்கள்,' என்றும் எழுதினேன். அது விமர்சனமல்ல. கவலையின் வெளிப்பாடு.
ஆனால் அதைக் கூட தாங்க இயலாமல் இணைய திமுகவினர் என் மீது பாய்ந்து பிராண்டினார்கள். என் எச்சரிக்கைகள், கவலைகள் ஓதுக்கித் தள்ளப்பட்டன. கரூர் சம்பவத்திற்குப் பின் சமஸ்சுடன் பேசிக் கொண்டிருந்த போது 'இவர்கள் எல்லாரும் சேர்ந்து இன்னொரு எம்ஜியாரை உருவாக்கி விடுவார்கள் போல இருக்கிறது ஸ்ரீதர்,' என்று சொன்னார். அந்த அளவுக்கு விஜய்க்கு ஆதரவு பெருகிக் கொண்டு வருகிறது என்று கள நிலவரத்தை வெளிப்படுத்தினார்.
வட இந்தியாவில் வசிக்கும் எல்லாருமே 'சங்கிகள்' என்று சொல்லும் சோம்பேறித்தன வாதத்துக்கு நிகரானது 'தவெக வாக்காளர்கள் எல்லாருமே தற்குறிகள்' எனும் வாதமும்.
பாஜகவுக்குப் பெருகி வரும் ஆதரவுக்கு இந்துத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், பல்வேறு காரணிகள் களத்தில் செயல்படுகின்றன. பெங்கால் தேர்தல் குறித்து இன்றைய ஹிண்டுவில் அரசியல் ஆய்வாளர் சயந்தன் கோஷ் பின்வருமாரு எழுதுகிறார்:
'The nearly seven percentage point shift from the Trinamool to the BJP cannot therefore be read simply as religious consolidation. It was anti-incumbency finding its most effective electoral vehicle.
The BJP would be mistaken if it chose to read this verdict as a sweeping ideological embrace of Hindutva in Bengal....This was less an affirmation of the BJP's grand ideological project than a fierce indictment of a regime that appeared, to many, to have grown distant, complacent, and convinced of its own permanance.'
அதாவது தனது நிரந்தரத்தன்மை குறித்து பெரும் திமிர் கொண்டு விட்ட திரிணாமுல் காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த கோபமும், இயலாமையும் அவர்களை - வேறு வழியில்லாமல் - பாஜகவிடம் அடைக்கலம் கொள்ள வைத்து விட்டன என்கிறார் கோஷ்.
அந்த இயலாமை அவர்களை காங்கிரஸ் அல்லது இடதுசாரிகளிடம் கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால் அவை இந்த மக்களுக்கு வழிகாட்ட இயலாமல் போய் விட்டன என்றும் குற்றம் சாட்டுகிறார்:
'Those who once looked to the Left or Congress for protection increasingly found those structures incapable of defending them.'
தமிழ்நாட்டிலும் ஏறக்குறைய இதுதான் நடந்திருக்கிறது. என் போன்ற தொடர் திமுக ஆதரவாளர்களைக் கூட உதாசீனப்படுத்தி அவமதிக்கும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது. 'மக்களிடம் உரையாடும் போது அவர்களை அவமதிக்காதீர்கள். அவர்களுடன் அன்புடன் உடையாடி நம் நிலைப்பாடுகளை விளக்குங்கள்,' என்று ஸ்டாலின் பேசிய ஒரு காணொளித்துணுக்கு ஒன்று நேற்று பார்த்தேன். அது எப்போது பேசியது என்று தெரியவில்லை. ஆனால் அந்த அறிவுரையை ஐடி விங்குக்கு வழங்கி ஒரு பயிற்சிப் பட்டறை நடத்துங்கள், என்று சென்ற அக்டோபரிலேயே எழுதினேன். ஸ்டாலின் அட்வைஸ் கொஞ்சம் லேட்டாக வந்திருக்கிறது.
இருப்பினும் இந்தத் தோல்வி திமுகவினரை கொஞ்சம் பூமிக்குக் கொண்டு வந்து, தரையில் நிற்க வைக்கும் என்று நம்பினேன். ஆனால் இன்னும் மோசமாக்கி வைத்திருப்பது போலத் தெரிகிறது. அப்துல்லாவில் ஆரம்பித்து ஆ ராசா வரை அவல விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன. Once again DMK proves they are sore losers.
சயந்தன் கோஷ் தனது கட்டுரையைப் பின்வருமாறு முடிக்கிறார்:
'There is a warning here that extends beyond party lines. In politics, the moment power begins to imagine itself invincible, the electorate begins to search, desperately if necessary, for the sharpest available instrument with which to puncture that illusion. In Bengal, for many voters, the BJP became that instrument.'
'இங்கு கட்சி பேதங்களைக் கடந்த ஒரு எச்சரிக்கை இருக்கிறது. தங்களிடம் இருக்கும் அதிகாரம் நிரந்தரமாகி விட்டது தன்னை யாரும் வீழ்த்த முடியாது என்று ஏதாவது கட்சி கருதத் தொடங்கினால், அந்த மாயையைத் தகர்த்தெறிய ஏதாவது ஆயுதத்தை வாக்காளர்கள் தேடத் தொடங்குவார்கள். அவசரத்துக்குக் கிடைக்கும் ஆயுதம் மிகவும் தீவிரமானதாகவும் கூர்மையானதாகவும் இருக்கக் கூடும். வங்காளத்தில் பாஜக-வே அந்த ஆயுதமாக பல வாக்காளர்களுக்கு மாறியது.'
தமிழ்நாட்டில் பல வாக்காளர்களுக்குக் கிடைத்த அந்த ஆயுதம் தவெகவாக இருந்திருக்கிறது.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
ஜோதிடம் பற்றி நான் முன்பு எழுதிய ஒரு பதிவை மீள் பதிவிடுகிறேன். Because it needs to be said.
======================
ஜோதிடம் என்பது ஒரு pseudo-science. ஒரு வசீகரமான கற்பனை. மனித பலவீனங்களுக்கு துணை போகிற, ஆறுதல் சொல்கிற கற்பனை. எங்கோ கோடிக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கும் சில கோள்களின் நகர்வில்தான் நமது சொந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்கிறது என்று நம்புவது கொஞ்சம் மனிதத் திமிருக்கு ஊக்கம் கொடுப்பதுவும் கூட. இந்தப் பிரபஞ்சமே மனிதர்களின் நலனுக்காகவே கடவுள் படைத்தார் என்று பைபிள் சொல்வது போல, நமக்காகவே அங்கே கோள்கள் சுற்றுகின்றன என்று நம்புவது heights of human arrogance.
நெப்டியூன் அருகில் இருந்து பார்த்தால், நமது பூமியே ஒரு சிறிய புள்ளி போலத்தான் தெரியும்.(1) அந்தச் சின்னஞ்சிறிய புள்ளிக்கு உள்ளே, அந்தப் புள்ளியை விட பல கோடி மடங்கு சின்னப் புள்ளியாக வாழ்வது நான். அப்படிப்பட்ட எனது வாழ்வு குறித்து அந்தக் கோள்கள் கவலைப்படுகின்றன. என் திருமணம், தொழில், எனக்கு வரும் நோய்கள் போன்றவை குறித்து அக்கறை கொண்டு அவை சில முடிவுகளை எடுக்கின்றன என்பது மனித மடமை மட்டுமல்ல; மனித அகங்காரம். Bloated perception of anthropocentrism.
நமது வாழ்வு என்பது ஒரு பிரபஞ்ச விபத்து. Just a cosmic accident. அந்த விபத்தில் உருவாகும் நமது பிரச்சினைகள் என்பன நமது வாழ்வியலின் விளைவுகள். நமது சமூகமே கூட நமக்கு நாமே கட்டமைத்துக் கொண்ட ஒரு மாபெரும் கற்பனைக் கோட்டைதான். திருமணம், பொருளாதாரம், காதல், உறவுகள் போன்ற எல்லாமே கடந்த பத்தாயிரம் வருடங்களில் நாம் உருவாக்கிய கட்டமைப்புகள். நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக நாமே கருதி, அவற்றை சீரியசாக அணுகுவதற்காக நாம் செயல்படுத்திக் கொண்ட நீண்ட நாவல். An elaborate fiction.
அப்படி இருக்கும் பொழுது அவை சார்ந்து வரும் பிரச்சினைகளும் நம்முடையதுதான். எனவே அவற்றுக்கான தீர்வும் கூட நம்மிடையேதான் இருக்கிறது. அந்தப் பெரும்பான்மையான தீர்வுகளை கொண்டு வந்ததும், கொண்டு வந்து கொண்டு இருப்பதும் நவீன அறிவியல்-சார்ந்த துறைகள்தான். Physics, Chemistry, Astrophysics, Economics, Humanities, Social Sciences, Statistics, Psychology, Engineering, Technology, போன்றவைதான் நமது வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்தவை. போலியோ முன்ஜென்மப் பாவம் என்றது நமது மதம். அதனை மறுதலித்து போலியோவை ஒழித்தது நவீன அறிவியல். புயல், வறட்சி போன்றவை கடவுளின் சாபங்கள் என்றன உலகின் புனித நூல்கள். அவற்றை மறுதலித்து நவீன கட்டமைப்புகளை ஏற்படுத்தி, உணவுப் புரட்சி கொணர்ந்து இவற்றில் இருந்து நம்மைக் காப்பாற்றியது நவீன அறிவியல்.
ஜோதிடம் இந்த எல்லாவற்றையும் மறுதலிக்கிறது. அப்படி செய்வதன் மூலம் அது மானுட குலத்தை இழிவுபடுத்துகிறது என்று நான் நம்புகிறேன். மானுடப் பரிணாம வளர்ச்சியை அவமதிக்கும் துறைகளில் ஜோதிடத்துக்கு முதலிடம் இருக்கிறது. (மதங்கள் எல்லாம் கூட லிஸ்டில் ரொம்பப் பின்னால்தான் வருகின்றன.) Astrology is an affront to human endeavour and human cognitive evolution.
ஆயினும் அதனை நம்புபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அப்படி நம்பி அதனை பின்பற்றுபவர்கள் மேல் எனக்கு தனிப்பட்ட முறையில் புகார் எதுவும் இல்லை; ஆனால் அப்படிப்பட்ட ஒருவர்தான் எனக்காக கொள்கை முடிவுகளை எடுக்கப் போகிறார் என்பதை நினைக்கும் போதுதான்...
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
(மீள் - 5 டிசம்பர் 2020)
(கடைசி பாரா திருத்தி எழுதியது - 12 மே 2026.)
@tnrags I think, DMK doesn't just see this as an election defeat but foresee as a crisis to their existence in the future.
I can confidently say with the evidence of TVK's victory and public mind space, there is a good chance for a new political entrant or formation in TN.
உறைந்த சாதியமும் அதை உருக விடாத சுப. வீரபாண்டியன்களும்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் கருஞ்சட்டைத் தமிழர் இணைய இதழில் இன்று எழுதியுள்ள குறும் கட்டுரையில், த.வெ.க பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியிருக்கும் பிரதிநித்துவத்தை பாஜக வழங்கியிருக்கும் பிரதிநித்துவத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார். “இவற்றை நாமும் பாராட்டுகிறோம்” என்று ஒரு வரியில் குறிப்பிட்டுவிட்டு, அந்த மாற்றத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆதங்கமும் அதில் வெளிப்படுகிறது.
நீதிக்கட்சி காலத்திலிருந்தே, வெள்ளாளர் மற்றும் இடைநிலைச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்திற்கு எதிராக நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். அதன் நீட்சியாகத்தான் திமுகவையும் விமர்சிக்கிறோம். திமுக என்பது ஒரு தேர்தல் அரசியல் அதிகாரம். நம் விமர்சனத்தை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாதது போல தோன்றினாலும், அந்த விமர்சனங்கள் அவர்களது அரசியலில் தாக்கம் ஏற்படுத்தாமல் போவதில்லை. குறிப்பாக இந்தத் தேர்தலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், பழைய திமுக அரசியலுக்கு ஒரு முக்கியமான படிப்பினையாக அமைந்துள்ளன. பழைய குறுநில மன்னர் அரசியலைத் தாண்டி, பிரதிநித்துவ அரசியலை மேலும் விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உருவாகியுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டின் OBC அரசியலை சமூகநீதி அரசியலாக முன்வைத்து வந்த பல முற்போக்கு வட்டாரங்கள், அந்த அரசியலின் எல்லைகளை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் தற்போதைய த.வெ.க பிரதிநித்துவத்தை கூட, நேரடியாக எதிர்கொள்ளாமல் பாஜக அரசியலோடு ஒப்பிட்டு பேச வேண்டிய நிலை உருவாகிறது.
சுப.வீரபாண்டியன் அவர்களிடம் சில கேள்விகள்:
பிரபஞ்ச அளவில் ஒப்பிட்டுப் பார்த்தாலும், “எங்கள் சமூகநீதியே சிறந்த சமூகநீதி” என்று நம்பும் திமுக, ஏன் இதுவரை இப்படியான பிரதிநித்துவத்தை சாத்தியப்படுத்தவில்லை?
தேசிய காங்கிரஸ் கட்சி, அகில இந்திய தலைவராக ஒரு தலித்தை தேர்வு செய்து அவருக்கு உரிய அதிகாரத்தையும் வழங்கியிருக்கிறது. ஆனால், திராவிட இயக்க அரசியலில் தலித்துகள் தலைமை நிலைக்கு வருவது ஏன் இன்னமும் சாத்தியப்படவேயில்லை?
தேசிய காங்கிரஸ் தன் குடும்பத்திற்கு வெளியிலிருந்து பல பிரதமர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் குடும்பத்திற்கு வந்த அதிகாரம், ஏன் அங்கேயே தேக்கம் கண்டிருக்கிறது?
அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்கள் உட்பட ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் திமுகவில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மட்டுமே துணை முதல்வராக முடிகிறது. இது எந்த வகையான ஜனநாயக மாதிரி?
கருணாநிதி மாவட்ட அளவில் தலித்துகளுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கும் திருத்தத்தை கொண்டு வந்தார். ஆனால் அந்த அமைப்பிலிருந்து, துரைமுருகன், பொன்முடி, MRK பன்னீர்செல்வம், ஐ. பெரியசாமி, எ.வ.வேலு, கே. என்.நேரு, ஆவுடையப்பன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, கதிர் ஆனந்த், கௌதம சிகாமணி, த.மோ அன்பரசன், பெரியகருப்பன் , RD சேகர், சேகர் பாபு போன்ற மாநிலம் முழுக்க அறியப்பட்ட ஆளுமைகள் உருவானது போல, எத்தனை ஆளுமைமிக்க வட்டார தலித் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள்?
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க பங்காக இருக்கும் பட்டியலின மக்களிலிருந்து, 72 மாவட்ட செயலாளர்களில் பத்து பேரைக் கூட திமுக தொடர்ந்து உருவாக்க முடியவில்லையென்றால், இந்தக் கட்சியின் சமூகநீதி அரசியல் யாருக்காக செயல்படுகிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இது போன்ற ஏராளமான கேள்விகளை வரலாற்றின் பல பக்கங்களில் இருந்து முன்வைக்க முடியும். அவற்றை ஆரோக்கியமான விமர்சனமாக எடுத்துக்கொண்டு, ஆதிக்கச் சாதிகளிடம் குவிந்து கிடக்கும் அதிகாரத்தை உடைத்து, புதிய மாற்றங்களை நோக்கி நகர வேண்டிய தேவை இருக்கிறது.
பாஜகவை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி எல்லா விமர்சனங்களையும் திசைதிருப்பும் அரசியல் நீண்ட காலம் நீடிக்காது. நேர்மையான விமர்சனங்களையும், புதிய தலைமுறையின் பிரதிநித்துவக் கோரிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய காலம் இது.
முன்முடிவுகளற்ற ஒரு புதிய பிரதிநித்துவ அரசியல் உருவாகத் தொடங்கியுள்ளது. அதுவும் இத்தனை ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களின் விளைவே. அந்த மாற்றங்களை வளர்த்தெடுக்க வேண்டும். முற்போக்கு அரசியலுக்குள்ளேயே உறைந்து கிடக்கும் சாதி மனநிலைகளை, புதிய தலைமுறை உருவாக்கும் மாற்றங்கள் கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியிருக்கின்றன.
பாரதிய ஜனதா என்கிற ஒரு வார்த்தையை நீக்கி விட்டால், உங்கள் கட்டுரை ஆதிக்கச் சாதியின் குமுறல் மட்டுமே, அதன் பொருட்டே இந்த ஒப்பீடு உங்களுக்கு தோன்றுகிறது என்பதை லட்சக்கணக்கான தலித் இளைஞர்கள் அறிவர். அவர்களது நம்பிக்கையை பெற முன்முடிவுகளற்று பேசும் நேர்மையை பெறுங்கள்.
முதலாளித்துவ அமைப்பில் முழு வேலைவாய்ப்பு ஒருபோதும் சாத்தியமில்லை; முதலாளிகள் அதை விரும்பவும் மாட்டார்கள்.
சந்தையில் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வேலை இல்லாமல் இருக்க வேண்டும். இந்த வேலையற்றோரின் கூட்டம்தான் "தொழில் சேமநல படை" (Industrial Reserve Army). இவர்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்குத் தந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.
மானுட விடுதலைக்கு வித்திட்ட பேராசான் தோழர் கார்ல் மார்க்ஸ் #KarlMarx #Marxism #Communism #Socialism #QuoteOfTheDay
@chockshandle இரண்டே இரண்டு கேள்விகளை மட்டும் தான் முன் வைத்தேன், அதற்கு பதில் இல்லாமல் என்னைப்பற்றி நீங்களே எல்லா முன்முடிவுகளையும் கொண்டு "விசில் வாக்காளர்" "த.வெ.க ஆதரவாளர்" "கட்சி சார்புடையவர்" மேலும் ஒருபடி சென்று தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்டு தங்களை வெளிப்படுத்தியதிற்கு நன்றி! வணக்கம்!!
@babu13091974@chockshandle Rather than answering the questions in front, affliating someone with as you like but not the truth will do no good for anyone. Chill down.
@chockshandle கூட்டணிக்கட்சிகளுக்கு அதிகார பகிர்வை இன்னாள் வரையில் தரமறுத்ததிற்கு மக்களும் கூட்டணிகட்சிகளும் புகட்டிய பாடம்னு புரியலையா ?
அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தாவது த.வெ.க ஆட்சி அமைப்பதை தடுக்க திட்டம் போட்டுவிட்டு கூசாமல் கொள்கை முகமூடி எதற்க்கு?
#WhyDMKfailed
@EDWINS61 Are you trying to instigate hatred by advocating for one community?
This election results clearly indicate, people across communities have voted TVK by supporting the change, then why are single out one community of your own choice?