மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உடனான நேற்றைய (16.06.26) சந்திப்பின் போது, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 65 ஈழத்தமிழர்களின் விடுதலை கோரிக்கையினை முன்வைத்தேன்.
ஈழத்தமிழர்கள் சிறுவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டாலோ, பிணையில் விடுவிக்கப்படாமல் சிறையிலிருந்து வழக்கை நடத்தி நிரபராதி என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலோ அல்லது ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருந்து வெளிவரும் பொழுதோ மீண்டும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- தங்களை அகதிகளாகப் பதிவு செய்து கொண்ட ஈழத்தமிழர்கள் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அகதிப்பதிவு ரத்தானவர்களுக்கும், அகதிப்பதிவு இல்லாதவர்களுக்கும், புதிய பதிவுகள் வழங்கப்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும்
- திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி பாஸ்கரன் த/பெ. குமாரசாமி என்பவருக்கு எதிரான நாடுகடத்தல் உத்தரவு திரும்பப்பெறப்பட்டு, அவர் விரும்பும் நாட்டிற்கு செல்வதற்கு ஆவன செய்ய வேண்டும்
- அண்மைக்காலங்களில் ஈழத்தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட கடவுச்சீட்டு வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு அவர்களுக்கு அகதிப்பதிவுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சமர்ப்பித்தேன்.
குறிப்பாக, ஒன்றிய அரசின் 01.09.2025 தேதியிட்ட Immigration and Foreigners (Exemption) Order, 2025 - (2)படி, ஜனவரி 9, 2015 முன்னர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு, Immigration and Foreigners Act. 2025 பொருந்தாது என்றும், அவர்களுக்கு அதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சிறப்பு முகாமில் உள்ள 15 நபர்கள் உடனடியாக விடுதலை செய்வதற்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். எமது கோரிக்கையினை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.
@CMOTamilnadu