ஒரு ‘அரசியல் தற்குறி ’
‘தேர்ந்தெடுக்கப்பட்ட மூடராக’ உருவெடுத்து ‘நிர்வாகத் திறனின்றி’ பண்பாடற்ற அநாகரிகமான நடவடிக்கையோடு நடந்து கொண்டால்: விளைவுகள் என்னவாக இருக்கும்?
A ‘political illiterate’ turned into an ‘elected idiot’ who suffers ‘administrative incompetence‘, coupled with uncivilised and awkward behaviour. What will be the recipe?
தேர்தல் ஆணையத்தை வைத்து பாஜக RSS போடும் திட்டத்தை முறியடித்தே ஆக வேண்டும். நம் எதிரிகள் யாரும் நேர்மையானவர்கள் அல்ல @mkstalin தலைவரே. பாஜகவால் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது. அதனால் அதனுடைய அடிமைகளை களத்தில் இறக்கிவிட்டு தமிழ்நாட்டை அழித்து கொண்டு இருக்கிறார்கள்.
தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர்
மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ அறிக்கை
கழகத் தலைவரின் சார்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணைக்கு வந்தன. இன்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஒரு ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பு குறித்த பல விமர்சனங்களை இணைய தளத்தில் பார்த்தேன். அதற்கான விளக்கமே இந்த அறிக்கை.
இந்த இரண்டு வழக்குகளுமே, கழக சட்டத்துறையின் சார்பில் தலைவரிடம் இதற்கான சாதக பாதகங்களை எடுத்துச் சொல்லி, நீதி மன்றம் என்ன தீர்ப்பு தந்தாலும், தேர்தல் ஆணையம் மற்றும் வாக்கு பதிவு இயந்திரங்களின் உள்ள குறைப்பாட்டை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்லவும், முறையாக பதிவு செய்யவும் இந்த முன்னெடுப்பை செய்யாமல் விடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் , தலைவர் தந்த ஒப்புதலால் தாக்கல் செய்யப்பட்டவை.
WP 34884/2026- தேர்தல் ஆணையத்தின் EVM-களை சரி பார்ப்பதற்க்கான வழிகாட்டு நடைமுறை - SOP உச்ச நீதிமன்ற உத்திரவிற்க்கு எதிரானதாக உள்ளதால் அதனை நீக்கறவு செய்ய வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்டது. அது தனி நபருக்கான மனு அல்ல. இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடிய வழக்கு. 2024 வழிகாட்டு நடைமுறை - SOP யை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.ஆனால் 2025 வழிகாட்டு நடைமுறை - SOP வந்து விட்டதால் அதனை எதிர்த்து மனு செய்யும் உரிமையுடன் அந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது.
2024 ல் உச்ச நீதி மன்றம் EVM கருவிகளில் சந்தேகம் இருந்தால் 2 ஆம் அல்லது 3 ஆம் இடம் பெறும் வேட்பாளர்கள் 5% கருவிகளை தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தை செலுத்தி EVM கருவிகளின் BURNT MEMORY ஐ சரி பார்க்கலாம் என உத்திரவிட்டது.
திராவிட முன்னேற்ற கழக சட்ட துறையின் சார்பில் நான் கழகத்தலைவரிடம் இந்த நிலையை சொல்லி, கொளத்தூர் தொகுதியில் EVM களை சரி பார்க்க வேண்டும் என வலியுறுத்தினேன். தலைவரும் ஒப்புதல் தந்தார்.
29.07.2026-லிருந்து 05.08.2026 வரை Checking and Verification நடைபெற்றது. 14 தேர்ந்தெடுக்கப்பட்ட கருவிகளில் சோதனையில் 5 கருவிகள் செயல்படவில்லை அல்லது தலைவரின் பெயர் இருந்த வாக்கு செலுத்தும் கருவி(Ballot Unit)-ஐ வாக்கு பதிவு இயந்திரத்தால் (Control Unit) அடையாளம் காண இயலவில்லை. ஒரு வாக்கு இயந்திரத்தில் பாதுகாப்பு சீல்கள் புதியவையாக , நிரப்பபடாமல் இருந்தது.
தேர்தல் ஆணையம் இந்த பழுதுகளை குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி விளக்கங்களை தரவில்லை.
1. 1951 மக்கள் பிரதிநிதி சட்டத்தின் படி தேர்தல் முடிவுகளுக்கு பின் 45 நாட்களில் தேர்தல் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
2. அதுவும் பிரிவு 100ல் கூறப்பட்டுள்ள காரணங்களுக்கு மட்டுமே தேர்தல் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
3. யூகங்களின் அடிப்படையில் தேர்தல் மனுவை தாக்கல் செய்ய முடியாது.
4. வாக்கு இயந்திரங்களை ஏறக்குறைய 3 மாதங்களுக்கு பிறகே சரிபார்க்க ,தேர்தல் ஆணையம் , உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்து போகச்செய்யும் வகையில் நடத்தியது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து உயர் நீதி மன்றத்தில் முறையிட வேண்டும் என கழக சட்டத்துறை, தலைவரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டது. தலைவர் அவர்கள் முதலில் வேண்டாமென்று நினைத்தார். பின் இது குறித்து விளக்கங்களை கேட்டறிந்து ஒப்புதல் தந்தார்.
கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்கு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் மற்றும் VVPAT ல் உள்ள வாக்கு சீட்டுகளை சரி பார்க்க வேண்டும். இதனின் முடிவு அனைவருக்கும் தெரிந்ததே.வாக்கு இயந்திரங்களினால் மட்டுமே கொளத்தூரின் தேர்தல் முடிவு மாறியது.
Article 329(b)ன் படி தேர்தல் வழக்கின் மூலமாக மட்டுமே தேர்தலை செல்லாது என்றும் வேறொரு வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும், ஏன் EVM இயந்திரங்களை அறிமுகப்படுத்தியபோதும் இது போன்ற நிகழ்வுகளை சட்டமியற்றுபவர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
2024 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே வாக்கு பதிவு இயந்திரங்களை சரிபார்க்க உரிமை தரப்பட்டது. வாக்கு பதிவு இயந்திரங்கள் முறையாக இல்லையென்றால் என்னவாகும் என்பதற்கு நீதிமன்றங்களே தீர்ப்பளிக்க வேண்டும்.எனவே ஏற்கனவே நடந்த பரிசோதனையில் 30% சதவிகித இயந்திரங்கள் பழுதானவை என்றால் அனைத்து இயந்திரங்களையும் சோதித்தால் கழக தலைவர் அவர்களே வெற்றி பெறுவார் என்பதில் அய்யமில்லை. சட்டத்தில் இடமில்லை என்கிறது தேர்தல் ஆணையம், இதற்க்கான சட்டம் உருவாக்கப்படவில்லை அதனை ஆய்ந்து, நீதியை வழங்கிடத்தான் நீதிமன்றம் என்கிறோம் நாம்.
தமது தீர்ப்பில் உயர் நீதி மன்றம் இறுதியாக “ஏற்புடைமை (Maintanability) குறித்த மேற்கண்ட முடிவைக் கருதி, சரிபார்ப்பு நடைமுறைக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் தகுதி குறித்தோ, 05.08.2026 தேதியிட்ட எதிர்க்கப்பட்ட உத்தரவின் சரியான தன்மை குறித்தோ ஆராய வேண்டிய அவசியம் இல்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது; எனவே அது குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. விதி 49-T மீறப்பட்டதாகக் கூறப்படுவது, VVPAT கருவிகளின் செயலிழப்பு, மற்றும் வாக்குச்சாவடி எண்.208-இல் வாக்குப் பதிவு அலகு கண்டறியப்படாதது ஆகியவை உள்ளிட்ட, தகுதி சார்ந்த அனைத்து வாதங்களும், தேவைப்பட்டால் உரிய மன்றத்தின் முன் எடுத்துரைக்கப்படுவதற்காக அனுமதி தரப்படுகிறது. அதன்படி, ரிட் மனு ஏற்புடையதன்று எனத் தள்ளுபடி செய்யப்படுகிறது; சட்டப்படி தனக்குக் கிடைக்கக்கூடிய தீர்வை நாடுவதற்கு மனுதாரருக்கு உரிமை வழங்கப்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளது.
நீதிக் கட்சி கொண்டு வந்த இட ஒதுக்கீட்டை உயர் நீதி மன்றமும் உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொள்ளவில்லை. தொடர் சட்டப்போரட்டமும் , போரட்டங்களுமே , இட ஒதுக்கீட்டை , அரசியல் அமைப்பு திருத்தமாக கொண்டு வந்தன. வாக்கு பதிவு இயந்திரங்களும் அப்படித்தான், நீதிமன்றம், இது எங்கள் எல்லைக்கு உட்பட்டதில்லை என்று சொன்னாலும்கூட வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், தேர்தல் முடிவுக்குப்பின் அதனை சோதனை செய்யும் நடைமுறை, அந்த சோதனையில் இயந்திரங்கள் தவறாக இருந்தால் அதற்க்கான தீர்வு ஆகியவற்றிக்கான விடை கிடைக்க வேண்டும்.
இந்தியாவில் இது போன்ற நிலை ஏற்பட்டதும், வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் இதுவே முதல் முறை. சட்டமும், நீதியும் நல்ல விடையினைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
ஆங்கில கருத்தொன்றுதான் நினைவுக்கு வருகிறது.
“I MAY BE WRONG, BUT I AM CLEAR”
கொளத்தூரின் தேர்தல் முடிவுகள் , வாக்கு பதிவு இயந்திரங்களினால் வந்ததே என்பதே , அந்த தெளிவு.
@nrelango_dmk என்ன நடந்தாலும் இந்த வழக்கில் எப்படியாவது ஜெயிச்சே ஆக வேண்டும். EVM இயந்திரத்தை ஒழித்தால் மட்டுமே நம் கழகம் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் அடுத்தடுத்த தேர்தலில் நம்முடைய பங்களிப்பை குறைப்பார்கள். அது தான் RSS பாஜக வின் திட்டம். @mkstalin@dmk_raja
@mkstalin உங்கள தான் நம்பி இருக்கிறோம் விட்ராதீங்க தலைவரே.. இந்த சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய மோசடி. அதை மக்கள் மேடையில் நிருபித்துக் காட்டுங்கள். EVM இயந்திரத்தை ஒழித்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் @nrelango_dmk@arivalayam@dmk_raja
#BREAKING | கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரின் வெற்றி -செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
#MKStalin | #Kolathur | #KalaignarSeithigal
@mkstalin 108 தொகுதிகளையும் சரிபார்க்கனும் சொல்லி வழக்கு போடுங்க தலைவரே. நாம் தோற்க வாய்ப்பில்லை. நாம் EVM இயந்திரத்தால் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறோம். மோடி, அமித்ஷா, தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் தான் இங்கே தவெக வெற்றி பெற்று இருக்கிறது. @nrelango_dmk@arivalayam@dmk_raja
இப்ப நடக்குற எல்லா அராஜகமான சம்பவத்திற்கும் காரணம் வேற யாரும் இல்ல @mkstalin நீங்க மட்டும் தான் தலைவரே.
நீங்க செய்த தவறுக்காக நம் கழக உடன்பிறப்புகள், நமது எம்எல்ஏக்கள் தான் கஷ்டப்படுறாங்க.
@TRBRajaa அவதூறு பேச விட்டுட்டு ஒரு நடவடிக்கையும் இல்லாமா வேடிக்கை மட்டும் பார்க்குறது
கொளத்துர் தொகுதி மட்டுமல்ல தவெக வென்ற 108 தொகுதிகளிலும் EVM இயந்திரத்தை சரி பார்க்கனும். VVPAD சரிபார்க்க வேண்டும். EVM இயந்திர கோளாறு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் @nrelango_dmk நம் கழகம் தோற்க்கவில்லை தோற்க்கடிக்கப் பட்டியிருக்கிறது.@mkstalin@arivalayam
@Parithabangal_ ஒரு அரசாங்கத்த எதிர்த்து பேச ஒரு துணிச்சல் வேணும் டா. அந்த பையன் எதிர்த்து பேசி சிறைக்கு போய் இருக்கான்.அரசாங்கத்து மேல இருக்குற குறைகளை கேள்வி கேட்க துப்பு இல்ல. எதிர்த்து கேள்வி கேட்கிறவன உருவ கேலி பண்ற. சோறு தின்னா இந்த மாறி உருவ கேலி பண்ண மாட்டீங்களே
@mkstalin களையை புடுங்கி எறியாமல் வளரவிட்டதன் விளைவு தான் இப்பொழுது இருக்கிற தமிழ்நாடு.நீங்கள் செய்த தவறை சரி செய்யுங்கள் தலைவரே. எப்படியாவது தமிழ்நாட்டை காப்பாற்றிடுங்கள் தலைவரே. பெரியார் மண்ணை RSS மண்ணாக மாற்ற துடிக்கிறார்கள். RSS எப்படி திட்டம் போட்டு செயல்படுகிறது.