தவெக ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புணர்வோடு எந்தப் பதிலும் கூறவில்லை முதல்வர் விஜய்.
தனக்கு வாக்குச் செலுத்திய கூட்டத்தைத் திருப்திப்படுத்த எந்தத் தோரணையில் பேச வேண்டுமோ, எந்த உடல்மொழியைப் பயன்படுத்த வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்.
அதனைப் பின்னணி பாடலோடும், இசையோடும் போட்டு பரப்ப Galatta, Behinwoods யூடியூப் சேனல்களும், News Tamil, Polimer காட்சி ஊடகங்களும் இருக்கின்றன. அவை அதனைச் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன.
பொதுச்சமூகத்துக்கும், அறிவுச் சமூகத்துக்கும் விஜய் எப்போதும் பதில் சொல்வதில்லை அல்லது விஜய்க்கான பதிலை எழுதிக் கொடுப்பவர், எழுதுவதில்லை.
தனக்கு வாக்குச் செலுத்தியவர்களின் எதிர்பார்ப்பின் தேவையை அறிந்து, அவர்களின் மனநிலை அறிந்தே தோரணை, உடல்மொழி, வசனங்கள், ஏற்ற இறக்கத் தொனி, நையாண்டிப் பார்வை என ஜனரஞ்சகமாகக் கொடுத்திருக்கிறார் விஜய்.
மொத்தத்தில், சட்டசபை சர்க்கஸ் கூடாரம் போல ஆகியிருக்கிறது.
பள்ளி வகுப்பறையில் குத்துப்பாடல் பாடுதல்.
நடிகைகளில் கால்ஷீட் மேனேஜர் முதல்வரின் தனி செயலாளர்..
தூய்மை பணியாளர்கள் நியமனத்தில் தனியார் மயம்..
முதல்வரின் பிறந்தநாளுக்கு பக்கம் பக்கமாக பகட்டு விளம்பரங்கள் ஊர் முழுக்க போஸ்டர்கள்..
இதுவா மாற்றம் மக்களே??
சே.பாக்கியராசன்
மாநில செய்தி தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி
மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து!
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.
கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாது, மேல்பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட கட்டுப்பானப்பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச்சிக்கலில் பின்பற்ற வேண்டிய விதி; சட்டம். இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டல்களும் உறுதிசெய்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை எல்லா விதிகளையும், சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வதும், முழுக்கத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதுமானப் போக்குகளில்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை உள்ளிட்டவை யாவும் விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாகவே கட்டப்பட்டது. விதிகளுக்கு மாறாகவே கர்நாடகத்தின் பாசனப்பரப்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாகவே, தற்போது மேகதாதுவிலும் அணை கட்டி, காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது கர்நாடக அரசு. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாறி ஆண்ட ஆண்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காவிரி உரிமை காவு கொடுக்கப்பட்டது என்றே கூறலாம்.
தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில், காவிரி நதிநீர் உரிமைகளுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு, தீர்ப்பு அரசிதழில் வெளியிடு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆணையம் எனப் பலகட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டும். அதனைத் தர மறுத்து சண்டித்தனம் செய்து வரும் கர்நாடக அரசு மழை, வெள்ளக் காலங்களில் பெய்யும் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டை இதுவரைப் பயன்படுத்தி வருகிறது. மற்றபடி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்பு என எல்லாமிருந்தும் கர்நாடக அரசு அவற்றை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்கிறது.
காவிரியாற்றின் `குறுக்கே அணை கட்டுவதையும் தடுக்கவும், தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்.
ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை, அவரது இல்லத்தில் உறவின் நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினேன்.
@Seeman4TN@NaamTamilarOrg
சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முன்வைக்கிறார்.
அதற்குப் பதில் சொல்ல வேண்டியதோ உள்துறை அமைச்சகத்தைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய். ஆனால், பதில் சொல்வது கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இதில் கூத்து என்னவென்றால், கேள்வியை சட்டமன்ற உறுப்பினர் கேட்டு முடித்ததும், 'அமைச்சர் ராஜ்மோகன் பதில் சொல்வார்' என சபாநாயகரே விஜய்யை அழைப்பதைத் தவிர்க்கிறார். அப்படியென்றால், ஏற்கனவே விஜய்யை எதற்கும் பதில் சொல்ல அழைக்கக்கூடாது எனத் திட்டவட்டமாக முடிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஊடகங்களைச் சந்திக்கத் துணிவும் இல்லை; அறிவும் இல்லை. சட்டமன்றத்துலயும் கேள்விக்குப் பதில் பேசத் தெரியாது. பொதுக்கூட்டத்துலயும் எழுதிக் கொடுத்த தாளைப் பாக்கலன்னா பேச வராது.
இப்படி ஒரு மங்குனி முதலமைச்சர வேற எந்த மாநிலத்திலயாவது பாத்திருக்கீங்களா?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நியூஸ் 18 தமிழ்நாடு சார்பாக மன்னார்குடியில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் இன்றைய அரசியல் நிலை குறித்துப் பேசியபோது, அதனைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், 'முதல்வன்' திரைப்படம் பார்த்துவிட்டு, அதில் உந்தப்பட்டு நான் வந்ததாகவும் பேசினார் ஐயா மகேந்திரன்.
இப்போது எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில் முடிவெடுத்திருக்கிற ஐயா மகேந்திரன் அவர்களே! எந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, உந்தப்பட்டு பனையூரில் ஐக்கியமாகியிருக்கிறீர்கள் ஐயா?
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி பெண் உயிரிழக்க காரணமாகியுள்ள அரசு மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். சகோதரி தமிழ்ச்செல்வி, உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருடைய குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
10 லட்சம் கோடி கடன்.
-- பாட்டாவே பாடினார் சீமான் அண்ணன்.
இலவசங்களால் தான் இவ்வளவு கடன்.
-- தேர்தல் பிரச்சாரத்தில் இதனால் நான் இலவசம் தரமாட்டேன் என சொன்னார் சீமான் அண்ணன்..
போக்குவரத்து துறையில் 75000 கோடி கடன்.
-- கடனில் துறை இருக்க யார் கேட்டார்கள் இலவச பேருந்து என கேட்டார் சீமான் அண்ணன்.
மின்சாரவாரியத்தில் 2.75 லட்சம் கடன்.
-- இவ்வளவு கடனில் எதற்கு இலவச மின்சாரம் என கேட்டார் சீமான் அண்ணன்.
பிறக்கும் குழந்தை தலையில் 1 லட்சம் கடன் இருக்கிறது.
-- நாமெல்லாம் பிறக்கும் பொழுதே கடனாளிகள் என சொன்னார் சீமான் அண்ணன்.
இதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை சீமான் அண்ணனின் தேர்தல் பிரச்சார காணொளிகள் பார்த்தாலே தெரியும்.
யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்களே! தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்?
தவெகவின் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் ஒருபுறமென்றால், தவெகவினராலே நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் மறுபுறம்! தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேனென மேடையில் வீரவசனம் பேசி, தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சியதிகாரத்திற்கு வந்த முதல்வர் விஜய் அவர்கள் இன்றைக்கு சொந்தக் கட்சியினரிடமிருந்து பெண்களைக் காக்க இயலாத கையறு நிலையிலிருப்பது வெட்கக்கேடானது.
சென்னை, ஆலந்தூரில் கணவனை இழந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தவெக நிர்வாகி வேம்புலி பாலியல் தொல்லை கொடுத்ததும், சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் ஐம்பதுக்கும் மேற்பட்டப் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, ஆபாசக் காணொளிகளை எடுத்து அலைபேசியில் வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டியதும், திருவைகுண்டத்தில் வேலைகேட்டு வந்த பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தவெக நிர்வாகிகளே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததுமான கொடுஞ்செய்திகள் தவெகவினரால் நிகழும் சமூக அவலங்களுக்கான சரிநிகர் சான்றுகளாகும். இரண்டு பெண் தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டிருக்கிறோமென மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தக் கட்சியின் உண்மையான முகம் இதுதான். பெண்களின் வாக்குகளைப் பெருவாரியாகப் பெற்று, அதிகாரத்திற்கு வந்த தவெகவாலேயே இன்றைக்குப் பெண்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி இருப்பது மிக மோசமான இழிநிலையாகும்.
திருவைகுண்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்கிய தவெக, அதில் தொடர்புடைய தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேனென யாரோ எழுதிக் கொடுத்ததை உணர்ச்சிப்பொங்க மேடையில் ஒப்பிக்கும் முதல்வர் விஜய் அவர்கள், தனது கட்சிப்பெண்ணை வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றத் துணைபோவதேன்? நீங்கள் திரையில் செய்த வீரப்பராக்கிரமங்களைத் தரையிலும் செய்வீர்களென்று நம்பி, உங்களை அண்ணனென்றும், தம்பியென்றும் விளித்து உங்களுக்கு வாக்குச் செலுத்திய பெண்களுக்கு நீங்கள் செய்கிற நன்றிக்கடன் இதுதானா? அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியே வரச் செய்த நீங்கள், குற்றமிழைத்த உங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரைப் பதவிவிலகச் செய்து, கட்சியைவிட்டு வெளியேற்ற மட்டும் ஏன் தயங்குகிறீர்கள்? எல்லாவற்றையும்விட ஆட்சியைத் தக்க வைப்பதற்கான ‘பெரும்பான்மை’ கணக்குதான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறதா? ‘எல்லாம் மேலிடத்துக்குத் தெரியும்’ எனக் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அதிகாரத்திமிரில் பேசியிருக்கிறார்களே, யார் அந்த மேலிடம் முதல்வரே? நீங்கள்தான் அந்த மேலிடமா? இல்லை! உங்களுக்கு மேலேயும் ஒரு மேலிடம் இருக்கிறதா? என்னப் பதில் வைத்திருக்கிறீர்கள்?
வழக்கம்போல, ‘பழி போடுகிறார்கள்’ எனப் பொதுமேடையில் ஒப்பாரி வைத்துப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கப் போகிறீர்களா? இல்லை! ‘சிங்கப்பெண் படை’ எனும் பல்லில்லா படையை வைத்துக் காலங்கடத்தப் போகிறீர்களா? குற்றவாளிகளைக் கைதுசெய்யும் அதிகாரமோ, குற்றத்தின் பின்புலத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரமோ, விசாரணை செய்யும் அதிகாரமோ என எவ்வித அதிகாரமுமற்று வெறும் ரோந்துப்பணி செய்வதற்கு மட்டும் எதற்கு ஒரு தனிப்படை? 4 கோடி பெண்களின் தொகையைக் கொண்டுள்ள மாநிலத்தில் 5,000 பேரைக் கொண்ட சிங்கப்பெண் படை வெறும் ரோந்துப் பணிகளின் மூலமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமென்பது ஏமாற்று வாதமில்லையா? ஏற்கனவே, காவல்துறை வைத்திருந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்பதற்கும், ‘சிங்கப்பெண்’ படைக்கும் என்ன பெரிய மாறுபாடு? சட்டவிரோதப் போதைப்பொருட்களின் புழக்கத்தைத் தடுக்கவோ, மதுக்கடைகளை முற்றாக மூடவோ, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவோ என எந்த முயற்சியும் எடுக்காதுவிட்டுவிட்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன்; பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வேன் என மேடையில் வாய்ச்சவடால் விடுவது எதற்கு முதல்வரே? குற்றமிழைக்கும் குற்றவாளிகள் எவராயினும் பாரபட்சமின்றி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் தலையாயக் கடமை. அதனை இனியாவது உணர்வீர்களா?
கட்சி உத்தரவை மீறி பேனர் வைப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவீர்களா?
சாலைகளில் பேனர் வைப்பது ஆபத்தானது என்று இதனால் தான் சொல்கிறோம். அது சட்டப்படியும் தவறு என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். நீதிமன்றமும் பல முறை பேனர் வைப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது.
ஆனால் அதிமுக - திமுக ஆட்சிகளில் நடத்திய அதே நாடகத்தை தான் TVK ஆட்சியிலும் அரங்கேற்றி வருகிறார்கள். தலைமையில் இருந்து பேனர் வைக்க கூடாது என்று ஒரு அறிக்கையை பெயரளவுக்கு வெளியிட்டு விட்டு ஊர் முழுவதும் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது.
சட்டத்தை மீறி பேனர் வைத்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கா என்றும் கேட்டு விட்டோம். பேனர் வைக்கும் சுயநல சமூக விரோதிகளே என்றும் சொல்லி விட்டோம். ஆனால் இந்த கொலைகார விளம்பர பிரியர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட உரைப்பது இல்லை.
சாலைகளில் பேனர் வைக்கும் TVK சுயநலவாதிகளே... அறிக்கை அளித்து ஊரை ஏமாற்றும் TVK பொதுச் செயலாளர் அவர்களே... இது எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் முதல்வர் அவர்களே...
என்று தணியும் இந்த கொலை வெறி பேனர் தாகம்..!!
@BussyAnand@TVKPartyHQ@TVKVijayHQ
மானாமதுரை இளைஞன் ஆகாஷைப் படுகொலை செய்தது திமுக அரசின் கீழிருந்த காவல்துறையினர். மூன்று மாதங்களாகியும் இப்போதுவரை ஆகாஷின் உடலை வாங்க மறுத்து, நீதிகேட்டுப் போராடி வருகிறார்கள் ஆகாஷின் குடும்பத்தினர்.
ஆட்சி மாறிவிட்டது. முதல்வராகிவிட்டார் விஜய். அஜித்குமாரின் காவல் மரணத்துக்கு எதிராகப் பேசிய விஜய், திமுகவின் ஆட்சியில் நடந்தேறிய ஆகாஷின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?