மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கிவரும், நாளொன்றுக்கு 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ரூ.5814.57 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கிவரும், நாளொன்றுக்கு 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ரூ.5814.57 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கிவரும், நாளொன்றுக்கு 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ரூ.5814.57 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
இது ஒரு பள்ளியின் அவலநிலை மட்டுமல்ல; பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பதற்கான சாட்சியம்!
முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் ஒரு நேரடியான கேள்வி:
கழிப்பறை இல்லை, உடற்கல்வி ஆசிரியர் இல்லை, கணினி ஆசிரியர் இல்லை, பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் மண்டித் கிடக்கின்றன... இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாத அரசுப் பள்ளிகள் இருந்தபோது, உங்களுடைய முன்னுரிமை எங்கே இருந்தது?
இன்று இந்த நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, இந்த அவலநிலை ஏன் உருவானது என்பதற்கு மக்களுக்குப் பதில் சொல்லுங்கள்.
நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்.
நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது!
தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது.
மேலும் ஒரு விஷயம்...
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவை எடுத்தது எங்கள் குழு அல்ல; என்னுடன் வந்திருந்த ஊடகங்கள்தான் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்தன. ஆகவே, வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதல்ல இங்கே கேள்வி; அந்த வீடியோவில் ஏன் அப்படிப்பட்ட அவலநிலை இருந்தது என்பதுதான் உண்மையான கேள்வி!
என் மீது பொய்யான கதைகளைக் கட்டி, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதை விடுத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதே இப்போதைய தேவை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலிலும், மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்களுடனும் இணைந்து, இந்த நிலையை மாற்றுவதற்காகவே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.
அரசியல் என்பது உண்மையை மூடிமறைப்பது அல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதுதான்!
மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் விஜய்!
Just look at CM ‘s involvement 🫡
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் - 2013ல் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், செட்டிநாடு குழுமத்தின் தலைவர் டாக்டர் MAMR. முத்தையா அவர்கள் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், Deccan Chronicle நாளிதழின் தலைவர் திரு. வெங்கட் ராம் ரெட்டி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
தன் முரட்டுக் குறட்டை ஒலியை, கீபேடில் கிழிந்து தொங்கும் ஒரு பிழையங்கமாக வெளியிட்டுள்ளது முரசொலி. தீயசக்தி திமுகவின் தீப்பிடித்துக் கருகிய வாசனையில் எழும் விரக்தியின் வெளிப்பாடாக இருக்கிறது, தலையங்கம் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள முரசொலியின் ஜனநாயகக் கொலையங்கம்.
த.வெ.க. தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு உறுதி என்று அறிவித்த பின்னரும் தன் குழப்பக் குளறுபடி வேலையைக் காட்டியது முரசொலி. தன் கோழைத்தனக் கோழிமூட்டல் குழிக்குள் தள்ளப்பட்டுப் புதைக்கப்பட்டதால், கயமைத்தனம் கவிழ்ந்துபோன இயலாமையில், முட்டாள்தனமாக மூக்குச் சிந்தி அழுது வடிந்துள்ளது.
மக்கள் விரும்பும் த.வெ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழும் என்று நப்பாசையில் கூறி, தன் அற்ப ஆசையை வெளியிட்டு, தன் பின்னணியில் இருப்பது யார் என்பது அம்பலப்பட்டு, தன் முகமூடியைத் தானே கிழித்துக்கொண்டுள்ளது, முரசொலி என்னும் முட்டாள் சொதப்பல் ஒலி.
கொளத்தூரிலேயே கவிழ்ந்து, நட்டு போல்ட்டு எல்லாம் கழன்று போய், கலகலத்துக் கிடக்கிறது திமுக. இந்த லட்சணத்தில் கவிழும் கவிழும் என்று கத்தி, தானே தலைகுப்புறக் கவிழ்ந்து, மூக்குடைந்து, முக்கால்வாசி மண்டை உடைந்து, மண்ணைக் கவ்விக் கிடக்கிறது திமுக. இந்நிலையில், லஞ்ச ஊழலற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நிர்வாகத்தால், இற்றுப் போன தன் அரசியல் கொள்ளைச் சூத்திரம் இன்னும் சுக்குநூறாகிப் போய்விட்டதே எனும் விரக்தியில் வெடித்து அழுது, தன் திருட்டுத் தீட்டொலியைக் கொட்டி முழக்கி உள்ளது முரசொலி.
இப்படியே போனால், கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலி, மூன்றாவது பிள்ளையைப் போலவே முட்டுச் சந்தில் விழிபிதுங்கி நிற்கும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், புதுதில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டி. சாந்திஸ்ரீ அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay