நான் ஒரு ஆயிரம் ரூபாய் ஏமாற்றியதாக யாரையாவது சொல்லச் சொல்லுங்கள். பார்க்கலாம். - எம்.ஆர். விஜயபாஸ்கர்
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற தொழிலதிபர், தனக்குச் சொந்தமான 100 கோடி மதிப்புடைய 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து, மிரட்டிப் பறித்துக் கொண்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்குப் புறம்பாக சொத்துச் சேர்த்ததாக இலஞ்ச ஒழிப்புத்துறையால் தொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கும் இன்னும் நிலுவையில் இருக்கிறது.
இதுவெல்லாம் கூகுளில் மேலோட்டமாகத் தேடினாலே கிடைக்கும் தகவல்கள்! எந்தத் தைரியத்துல உதார் விடுறாரு விஜயபாஸ்கர்?