ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) திரு. கே.சி. வேணுகோபால் அவர்கள் அறிவித்தபடி, ராகுல் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் வருகிறார்.
அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தி அவர்களின் இந்த வருகை, தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்.
தமிழக மக்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2029-ல் ராகுல் காந்தி அவர்களை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்!
#RahulGandhi #RGinTamilNadu #Congress #JaiHind
நம் தலைவர் @RahulGandhi அவர்களின் கோரிக்கைகள்:
1. மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.
2. தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கத் தவறிய மத்திய அரசின் பொறுப்பின்மை குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்த வேண்டும்.
3. டெல்லியில் மாணவர்கள் மீது நேற்று பதிவு செய்யப்பட்ட அனைத்து FIR-களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பிரதமர் அலுவலக அமைச்சரிடம் சொன்னது
After the brutal action against students yesterday, the shameful ill-treatment of Leader of Opposition Rahul ji in the Lok Sabha today is disgraceful.
The BJP government has torn democracy and the Constitution to shreds.
Shame shame Modi
@kharge@RahulGandhi@priyankagandhi@kcvenugopalmp@INCIndia
கல்வித் துறையில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து போராடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தில்லியில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்து முடக்க நினைக்கும் இந்த அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்! ✊
#RahulGandhi @INCIndia@RahulGandhi #Chennai @RajeshKumarSMLA@Viswanathan_INC@kcvenugopalmp@INCTamilNadu
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, "லஞ்சம் தர மாட்டோம், லஞ்சம் பெற மாட்டோம்" என்ற உறுதிமொழியை ஏற்று, அதனை உறுதிப்படுத்தும் வகையில் கைரேகை பதித்து, ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், MP அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்களும் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு. சின்னதம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் OBC பிரிவு தலைவர் திரு. டி.ஏ. நவீன், மாநில மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்றனர்.
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் ஒரு வார மக்கள் இயக்கத்தின் தொடக்க நிகழ்வாக, சென்னை மெரினா கடற்கரையில் பெருந்தலைவர் காமராஜரின் உலக சாதனை மணல் சிற்பத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி., அவர்கள் திறந்து வைத்தார். இந்த மணல் சிற்பம் ஜூலை 19 வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத் துறை சார்பாக, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பொதுமக்களின் கைபேசிகளில் காமராஜர் Logo Sticker ஒட்டும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. எஸ். ராஜேஷ்குமார், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் திரு. கே.வி. தங்கபாலு, திரு. கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. நிவேதித் ஆல்வா, திரு. அறிவழகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. பிரவீன் சக்ரவர்த்தி, எம்.பி., திரு. விஜய் வசந்த், எம்.பி., திரு. சசிகாந்த் செந்தில், எம்.பி., திரு. எம்.கே. விஷ்ணு பிரசாத், எம்.பி., மூத்த காங்கிரஸ் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், பொருளாளர் திரு ரூபி மனோகரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
#பெருந்தலைவர்காமராஜர்
#TamilNaduCongress
#kamarajar
@nivedithalva@iamvijayvasanth@pravchak@s_kanth@ruby_manoharan@DrAChellaKumar@PeterAlphonse7@RajeshKumarSMLA
மதுரை மேலூர் கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் மற்றும் அவசர நிவாரணங்களை உடனடியாக வழங்க மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டு பேசி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளேன்.
#Madurai #Melur #BusAccident @Viswanathan_INC