பாரதிராஜா இறுதி சடங்கில் முட்டிக் கொண்ட உறவுகள்.
நமக்கு அதில் நிறைய பாடங்கள் இருக்கிறது..!!
மனோஜ் நடிகை நந்தனாவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரு மகள்கள். பாரதிராஜவின் மகள் ஜனனி திருமணத்திற்கு பின் மலேசியாவில் குடியேறி உள்ளார்.
மனோஜ் மறைவிற்கு பிறகு உடைந்திருந்த பாரதிராஜா மிகவும் தளர்ந்து போனார். மனைவி தேனி போய்விட்ட நிலையில் மகளும் மலேசியாவில் மருமகளும் உடனில்லாது பாரதிராஜாவை கவனித்து கொண்டவர்கள் நியமிக்கப்பட்ட நர்சுகள்.
பாரதிராஜா மரணத்திற்கு பிறகு அவரை நல் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தான் மேற்படி முட்டல் மோதல்கள் நடந்தேறி உள்ளது.
மருமகள் நந்தனாவையும் பேத்திகளையும் பாரதிராஜாவின் மகள் ஜனனி அந்த நிகழ்வில் பங்கேற்கவிடாது தகராறு செய்திருக்கிறார். சேரில் அமர்ந்திருந்த நந்தனாவின் கைகளை முறுக்கி எழுப்பி விட.. நந்தனாவின் மகள்கள் அழுதபடி நின்றிருக்கிறார்கள். ராதிகா ஓடி வந்து இரு தரப்பிடமும் கைகளை கூப்பி மன்றாடி பிரச்னை பெரிதாகாமல் தடுத்திருக்கிறார்.
ஏற்கனவே தனது பெயரில் பாரதிராஜா வாங்கியிருந்த அபார்ட்மெண்ட்டில் வசித்து வரும் நந்தனாவை காலி செய்யுமாறு ஜனனி போலீசில் புகார் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
பாரதிராஜா இறுதி சடங்கை ஒட்டி வெளியே வந்த குடும்பத் தகராறுகளை பார்த்த போது ஒரு விஷயம் மட்டும் மீண்டும் மீண்டும் தோன்றியது.
உலகத்துக்கே காதல், பெண் முன்னேற்றம், பெண் சொத்துரிமை, ஜாதி மறுப்பு என்று பாடம் எடுத்த பலரது குடும்பங்களில���ம் கூட இறுதியில் வந்து நிற்பது மனித உறவுகளின் சிக்கல்கள்தான்.
இங்கே யார் சரி? யார் தவறு?
என்று நமக்கு தெரியாது,தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால் வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது.
மனிதர்கள் சண்டை போடுவது பெரும்பாலும் கொள்கைகளுக்காக அல்ல.
உரிமைகளுக்காக... பாதுகாப்புக்காக.. எதிர்காலத்திற்காக.. சில நேரங்களில் பணத்திற்காக.
சில நேரங்களில் ப��ம் என்ற பெயரில் கிட��க்கும் அங்கீகாரத்திற்காக.
ஒரு மனிதன் வாழ்நாள் முழுக்க ஒரு ராஜ்ஜியத்தை கட்டியிருக்கலாம்.ஒரு தலைமுறையையே பெரிய அளவில் பாதித்திருக்கலாம். "சூப்பர்ஸ்டார்" என்று கொண்டாடப்பட்டிருக்கலாம்.
ஆனால்... அவருக்கு பிறகு அவருடைய குடும்பம் அமைதியாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை அவையெல்லாம் கொடுக்காது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால்... 'புகழ்' என்பது எப்போதும் தனிப்பட்ட சொத்து."நிம்மதி" என்பது குடும்ப சொத்து.
ஒன்று இருந்தால் மற்றொன்றும் இருக்கும் என்று எந்த விதியும் இல்லை.
நிறைய நேரங்களில் உலகம் அறிந்த வெற்றியாளர்கள்...வீட்டுக்குள் தோற்றவர்களாக இருக்கிறார்கள்.
அதேபோல்...
உலகம் அறியாத சாதாரண மனிதர்கள்...
தங்களுக்கு பின்னால் சண்டையில்லாத குடும்பத்தை விட்டுச் செல்கிறார்கள்.
ஒரு மனிதன் எவ்வளவு சம்பாதித்தான் என்பது முக்கியமான கேள்வி இல்லை.
அவன் போன பிறகு... அவ���் சம்பாதித்ததை வைத்து அவனுடைய பிள்ளைகள் அடித்துக் கொண்டார்களா?அல்லது ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்களா? என்பதே முக்கியமான கேள்வி.
ஏனென்றால்...ஒரு மனிதனின் உண்மையான உயில் அவன் எழுதி வைத்த பத்திரம் மட்டும் அல்ல.அவன் உயிரோடு இருக்கும்போது உருவாக்கி வைத்த குடும்ப சமநிலையும் தான். அதை சட்டத்தால் எழுத முடியாது.பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது.வாழும் காலத்திலேயே கட்டமைக்க வேண்டும்.
#Bharathiraja
𝗕𝗔𝗖𝗞-𝗧𝗢-𝗕𝗔𝗖𝗞 #𝗧𝗔𝗧𝗔𝗜𝗣𝗟 𝗙𝗜𝗡𝗔𝗟��. ❤️🔥
Every chant. Every cheer. Every moment of support from the 12th Man Army brought us here. 🥹❤️
One last dance awaits in Ahmedabad. ✊
பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க நாட்டு மக்களை வலியுறுத்தியிருந்த பிரதமர் மோடி, தனது கான்வாயில் உள்ள கார்களை குறைத்துள்ளார்
#SunNews | #PMModi | #Fuel
So Nanbargalae! The moral of the story is...
The Politicians and celebrities, for whom we so often fight, will always find a way to reconcile with one another.
So keep debating respectfully but never sacrifice your real relationships defending people who barely know you exist :)