அளவு கடந்த தன்னம்பிக்கை
எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் அதீத தெய்வ நம்பிக்கை கொண்ட ஒரு தலைவரால் மட்டுமே சட்டப்பேரவை நிகழ்வுகளை
அகிலமே பார்க்க நேரலை செய்யும் தைரியம் வரும்.
தமிழக அரசியல் வரலாற்றில் சட்டப்பேரவையில் முதல்வர் நம்பிக்கை கோரும் தீ��்மானத்தை நேரலை செய்த முதல் முதலமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் நம் முதல்வர் ஜோசப் விஜய்
1988 ஆம் ஆண்டு அன்னை ஜானகி எம்ஜிஆர் அவர்கள் நம்பிக்கை கோரும்போது கலவரத்தில் முடிந்து ஆட்சி கவிழ்ந்தது. ஆனால் பேரவையில் என்ன நடந்தது என்பது இன்றுவரை உலகிற்கு தெரியாது.
1989-ஆம் ஆண்டு ��ாண்புமிகு அம்மா தாக்கப்பட்டு தலைவிரி கோலமாக பேரவையில் கண்ணீருடன் வெளியே வரும்போதும் பேரவையில் நடந்த உண்மை நிலவரம் உலகிற்கு தெரியாது.
ஏன் 2017 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் சட்டையைக் கழற்றி பனியனுடன் வெளியே வந்தது மட்டும் மக்களுக்கு தெரியும். உள்ளே நடந்தது தெரியாது.
யாருக்கும் வராத அசாத்திய துணிச்சல் முதல்வர் விஜய்க்கு மட்டும் எப்படி வந்தது?
இதைத்தான் நான் பலமுறை பதிவு செய்துள்ளேன். விஜய்... இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல் ஓர் அதிசயம். இவரிடம் மோதுபவர்கள் வெற்றி பெறலாம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்க வேண்டாம்.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதையும் தெளிவாக கேட்டு Notes எடுக்கிறார். இதில் சௌமியா அன்புமணி பேசியது மக்கள் பிரச்சனை. எல்லாம் Notes எடுக்கிறார். அதை உலகம் பார்க்கிறது. சட்டப்பேரவை என்பது மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் மன்றமாக இருக்க வேண்டும். அதை பலர் சரியாக செய்தனர். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பொறாமை என்ற விஷம் கொண்டோர் இன்றைய நிகழ்வின் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் நஞ்சை விதைத்தனர். இதையும் அகிலம் கண்டது.
முதல்வர் விஜய் அமைதியாக இருந்து கடைசியில் நன்றியுரை வழங்கும்போது அனைவருக்கும் பதிலளித்து மொத்த மார்க்கையும் அள்ளி விட்டார்.
காலம் தந்த தலைவன் 🙏
@TVKVijayHQ | @CMOTamilnadu