தற்குறிகளின் தலைமையும் தற்குறியா?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பெரம்பூர் தொகுதியில் #தவெக#TVK தலைவர் திரு.விஜய் @TVKVijayHQ போட்டியிட திட்டமிட்டு��்ளதாகவும், அந்த தொகுதியிலிருந்து தனது பரப்புரையை தொடங்கவிருப்பதாகவும், ஊடகங்களில் செய்தி வெளியானது. அதற்காக பெரம்பூர் தொகுதியில் விஜய் பரப்புரை வாகனத்தில் சென்று மக்களை சந்திக்கவும், முக்கிய சாலை சந்திப்பு ஒன்றில் 3000 பேர் வரை கூட்டி தெருமுனை பரப்புரை கூட்டம் நடத்துவதற்கும் அனுமதி கேட்டு தவெக சார்பில் தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
கடந்த திசம்பர் மாதம�� இந்திய தேர்தல் ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதினார் நடிகர் விஜய். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டங்களுக்கு தவெக நிர்வாகிகளையும் அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். சட்டமன்ற தேர்தலை நடத்துவது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அலுவலகம் கொண்டுள்ள 'தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி'. மாநிலத்தின் உள்ளாட்சி அ���ைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவது கோயம்பேடு எதிரே அலுவலகம் கொண்டுள்ள 'தமிழ்நாடு தேர்தல் ஆணையர்'. நடிகர் விஜயோ தமிழ்நாடு தேர்தல் ஆணையரின் அலுவலக முகவரியை குறிப்பிட்டு, அவருக்கும் அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார் என்பது தான் வேடிக்கை செய்தி.
இப்போது அதே போன்ற வேடிக்கையான, ஆனால் திட்டமிட்டு விஷமத்தனமான நடவடிக்கையில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளார்.
தனது பெரம்பூர் தெருமுனை தேர்தல் பரப்புரை கூட்டத்துக்கான அனுமதியை திமு���வின் 'காபந்து அரசு' தாமதித்து, மறுத்துவிட்டது என்று நேற்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். 'ஜனநாயகத்தின் மீது பாசிசத் தாக்குதல்' என்று அவருக்கு தெரிந்த 'பாயாசத்தை' அவரது தற்குறி தொண்டர்களுக்கு கிண்டியுள்ளார். அவர்களும் தங்கள் தலைவரின் பரப்புரையை திமுக அரசு திட்டமிட்டு தடுத்து வருகிறது. எங்களைப் பார்த்து திமுக அரசு பயந்துவிட்டது என்று இப்போதே வெற்றி மிதப்பில் இருக்கின்றனர்.
'காபந்து அரசு' என்றால் என்னவென்று தவெக தொண்டர்களுக்கு தெரியுமா? மார்ச் 15ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 'தேர்தல் நடத்தை விதிகள்' (Model Code of Conduct) அமலுக்கு ��ந்துவிட்டன. இதன் பிறகு மாநில அரசினால் எந்தவொரு உத்தரவையோ, நடவடிக்கையோ எடுக்க முடியாது. முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சென்றுவிடும். தலைமை செயலாளர் உள்பட IAS & IPS அதிகாரிகள் தொடங்கி அனைத்து நிலை அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தான் நடைமுறைப்படுத்த வேண்டும்.
நேற்று மாலை காஞ்சிபுரம், தஞ்சாவூர், பெரம்பலூர் ���ற்றும் தென்காசி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்தும்படி இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதான் 'காபந்து அரசு' செயல்பாட்டில் இருக்கும்போது இருக்கும் நடைமுறை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவிலோ, தேர்தல் நிர்வாக நடைமுறைகளிலோ நடிகர் விஜய் சொல்வது போன்று திமுகவால் தலையிட முடியாது. அப்படி தலையிடுவதை ஒன்றிய பாஜக அரசின் கூலிப்படையாக செயல்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அமைதியாக வேடிக்கை பார்ப்பாரா? மறந்துகூட இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதோ அதன் அதிகாரிகள் மீதோ எந்தவொரு குற���றச்சாட்டையும் விமர்சனத்தையும் நடிகர் விஜய் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் கொண்டாட்டத்தின் போது நெரிசலில் மக்கள் இறந்ததையடுத்து, பொது கூட்டங்களை நடத்துவதற்கு உரிய நெறிமுறைகளை வகுத்து தனி சட்டம் கொண்டு வந்தது கர்நாடக அரசு. அரசியல் கட்சி கூட்டங்களை நடத்துவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரி தவெக நீதிமன்றத்தை அண���கியது. கர்நாடக அரசு போன்று தமிழ்நாடு அரசும் 5000 பேருக்கும் அதிகமாக கூடும் நிகழ்வுகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வகுத்தது. கரூரில் தனது பரப்புரை கூட்டத்தில் 41 உயிர்கள் பலியான போது, பனையூர் பங்களாவுக்குள் ஓடி பதுங்கிக் கொண்டார் நடிகர் விஜய். அடுத்தடுத்து மக்களை சந்திக்க திராணி இல்லாத நடிகர் விஜய் அதை மறைப்பதற்கும், தற்குறி தொண்டர்களை திசைதிருப்புவதற்கும், நீதிமன்ற வ���ிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நடைமுறைகள் மீது குற்றச்சாட்டை வைத்தார். தனது கட்சி கோரிய வழிகாட்டு நடைமுறைகளுக்கு எதிராகவே மீண்டும் உயர் நீதிமன்றம் சென்றார் நடிகர் விஜய். இந்த வழக்கு பிப். 26ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 'தமிழக அரசின் வழிகாட்டு விதிகளில் என்ன தவறு? என்று தவெக தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதெல்லாம் தவெக தொண்டர்களுக்கு தெரியுமா?
சென்னை மாவட்டத்தின் தேர்தல் அதிகாரி திரு.குமரகுருபரன் IAS அவர்கள் நேற்று காலை ஊடகச் சந்திப்பின்போது, 'அரசியல் கட்சியினர் தங்கள் பொது கூட்டங்கள், பரப்புரை நிகழ்வுகளுக்கு 'Suvidha' இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும், அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிடுவது நடைமுறை அல்ல. க��றிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறையினர் பிறப்பித்த தடையில்லா சான்று (NOC) உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருந்தால் 3-4 மணிநேரத்துக்குள் ஒப்புதல் வழங்கப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்டால் அதற்குரிய காரணங்களும் அதே தளத்தில் தரப்படுகிறது' என்று தெளிவாக விளக்கினார். ஆனால் நடிகர் விஜயோ தம்மீது உள்ள தவற்றை மறைக்க, வழக்கம் போல தற்குறி கூட்டத்தை ஏமாற்ற இல��லாத புது கதையை அவிழ்த்துவிட்டார்.
தேர்தல் ஆணைய நடைமுறைக்கு திமுகவை குற்றஞ்சாட்டி நடிகர் விஜய் நடத்திய நாடகம் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.
பெரம்பூர் பரப்புரை நிகழ்வுக்கு தடை ஏற்படுத்த அந்த சாலையில் அரசால் பள்ளம் தோண்டப்பட்டது என்ற விஜயின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி, 'சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபார்க்கும் பணி' மட்டுமே நடைபெற்றது, வேறு எந்த புதிய பணிகளும் நடக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும், ப���ரம்பூரில் 3000 பேர் கூடும் பரப்புரை கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணத்தை விரிவாக குறிப்பிட்டு தவெக மாவட்ட செயலாளருக்கு பெரம்பூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்த பதிலின் நகலும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நகலில், தவெக தரப்பில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரப்பட்ட முல்லை நகர் சந்திப்பு என்பது சிறிய அளவு பரப்புரைக்கான இடம் என்று தேர்தல் ஆணையத்தால் வகைப்பட��த்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தில் 3000 பேர் கூடுவதற்கு அனுமதி தர இயலாது' என்று அப்பகுதி காவல்துறை அளித்த அறிக்கையின்படி தான் தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்துள்ளார். மாற்று இடம் ஏதேனும் தந்தால் அவற்றை பரிசீலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுதியில் எந்தெந்த இடங்களில் அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் வாகன பரப்புரை செய்யலாம், எந்த இடத்தில் ஊர்வலமாக செல்லலாம், தெருமுனை பரப்புரை கூட்டங்களை நடத்தலாம், அந்த இடங்களில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவர் போன்றவை தேர்தல் ஆணையத்தால் முன்கூட்டியே திட்டமிட்டு அறிவிக்கப்படும். அதனடிப்படையில் தான் அரசியல் கட்சிகள் பரப்புரையை திட்டமிடுவர். ஆனால் தவெக தரப்போ தங்கள் தலைவர் விஜயின் இயலாமையை மறைப்பதற்கு திமுக மீதும், அதிகாரிகள் மீதும் கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஜோஸ் தங்கையா அவர்களை மாற்ற வேண்டும் என்று மார்ச் 16 மதியம் பாஜக அண்ணாமலை பேட்டியளிக்க, அன்று மாலையே கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை மாற்றியது தேர்தல் ஆணையம். பாஜக போன்று பொய்யான அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தவெக @TVKPartyHQ அழுத்தம் கொடுக்கிறது.
தவெக தொண்டர்கள் ��ற்குறிகளாக இருக்கிறார்கள் என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர், ஆனால் தலைமையே தற்குறியாக இருப்பது அம்பலமாகியுள்ளது. அரசியலுக்காகவும்
சுய மகிழ்ச்சிக்காகவும் ரசிக கும்பலை தற்குறிகளாக வழிநடத்துவது தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் பேராபத்தாகும்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலை��் சிறுத்தைகள் கட்சி
28.3.2026