கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அணை நிரம்பினால்தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கார்நாடக காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் அவர்கள் கூறுவது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானதாகும்.
சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரைப் பெற வேண்டிய த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் இன்றுவரை வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.
தற்போது, 'தமிழக முதலமைச்சர்,
காவிரிப் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதலமைச்சரை சந்திக்கப் போகிறேன்' என்று சொன்ன பிறகு, 'யார் வேண்டுமானாலும் வரட்டும், யாரோடும் நாங்கள் பேசத் தயார், எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை' என்று கர்நாடகாவின் காங்கிரஸ் முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்கள் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளைக் கேட்டும்; டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தும், பிறகு அனைவரது கருத்துகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.
ஏற்கெனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, கர்நாடக அரசு காவிரியில் நமக்கு வழங்க வேண்டிய உரிய பங்கு நீரை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும். காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற வேண்டும் என்று த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் மாவட்டக் கழக வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் நிலையில், கூட்டத்திற்குள் பேசியதாக தொடர்ந்து தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருவதை ஏற்கனவே மறுத்து, இத்தகைய செய்திகளை வெளியிடும் முன் எங்களிடம் உண்மையைக் கேட்டறிந்து வெளியிடுமாறு வலியுறுத்தி இருந்தோம்.
இந்நிலையில், இன்றைய தினம், மீண்டும் ஒரு முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்றை புதிய தலைமுறை செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத்தில் கந்தன் என்ற பெயரில் எந்தப் பகுதிச் செயலாளரும் இல்லை. எனவே, இந்த பொய் செய்தியை திட்டவட்டமாக மறுப்பதுடன், ஊடகங்கள் அறம் தவறாமல் செய்திகளை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்ந்து இதுபோன்று பொய் செய்திகள் வெளியிட்டால் கழகத்தின் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பிரபல பின்னணி பாடகி திருமதி. S ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிமையான குரலால் வருடிய திருமதி. ஜானகி அவர்கள், தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுக்கும் குரலாக இருந்தவர்.
தமிழ் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் பின்னணி குரலாக ஒலித்து அவர் பாடிய கீதங்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. அவரது மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரை மற்றும் இசைத் துறைகளைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே இந்நிறுவனம் தமிழ்நாட்டில்
ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு மூலக் காரணம், மாண்புமிகு அம்மா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு துவங்கிய @Guidance_TN நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்!
Guidance TamilNadu நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?
Amateur அமைச்சரவையின் Immature அமைச்சராக உள்ள இன்றைய தொழில்துறை அமைச்சர்,
இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.
உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை FastTrack செய்து அவர்களின் முதலீடை உறுதி செய்யவேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கான நீரை விடுவிக்கவில்லை எனில், தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கர்நாடக காங்கிரஸை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் மாவட்ட வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இக்கூட்டங்களில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ சரிபார்ப்பும் இன்றி ஊடகங்கள் சில கருத்துகளை செய்திகளாக வெளியிட்டு வருவது ஏற்புடையதல்ல.
குறிப்பாக இன்றைய கூட்டத்தில் பேசிய மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அனைவரும் தகவமைத்துக் கொள்ள் வேண்டும் எனவும், இன்றைய AI காலத்திற்கு ஏற்ப கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.
இக்கருத்து @AIADMKITWINGOFL சார்பில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு வழங்கிய செயல்பாட்டு பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும்.
மேலும், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரின் தேர்தல் பணிக்கும் உழைப்பிற்கும் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்கள்.
ஆனால், இதனை வேறுமாதிரியாக திரித்து, முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது என்பது கழகத்திற்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மனதை சோர்வடையச் செய்துவிடும்.
ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் முன் எங்களைத் தொடர்புகொண்டு செய்தியை சரிபார்த்து வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தென்காசி அருகே 5000 நெல்மூட்டைகள் தீயில் எரிந்து சேதம்..
ஆனால் அங்கேயும் ரீல் மோகத்தில் ஆளும் அரசின் ஆச்சரியக்குறிகள்!
மக்களின் வேதனை ஒரு Reel Content அல்ல என்பதை எப்போதுதான் இந்த ஆச்சரியக்குறிகள் உணரப் போகிறார்களோ!
அங்க விவசாயிகள் உழைப்பு தீ-யா கொழுந்துவிட்டு எரிஞ்சுட்டு இருக்கும்போது எப்படி இவங்களுக்கு Camera Angle எல்லாம் set பண்ணி வீடியோ எடுக்க மனசு வருதோ தெரில..
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சட்டமன்றத் தொகுதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதால், இன்று தலைமைக்கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தத் தகவலைக் கட்சி தலைமையிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துவிட்டேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களால்தான் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் நான் வெற்றி பெற்றுள்ளேன்.
யாரும் எந்த வதந்திகளையும் பரப்ப வேண்டாம். சுடுகாட்டுக்குச் சென்றாலும் செல்வேனே தவிர, மாற்று இயக்கத்திற்குச் செல்ல மாட்டேன்.
- ஆற்காடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. @ADMKRanipet அவர்கள்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள் தலைமையில்,
தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு, மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
#AIADMK
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காட்டிக் கொடுத்துவிட்டு சுயலாபத்திற்காக ஆளும் கட்சியை நாடி ஓடும் ஒரு கூட்டம் கோயபல்ஸ் பாணியில் பொய்யை விதைப்பதற்கு கண்டனம்!
- கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் கழக சட்டமன்ற குழு கொறடா திரு.அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே திட்டத்தை, கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
அந்த தீர்மானத்தில் இத்திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது.
தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா @CMOTamilNadu ?
எதற்கு இந்த இரட்டை வேடம்?
மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரப்பூர்வமான கேள்விகளை அரசை நோக்கி கேட்டு மக்களுக்காக நின்றவன் நான். “மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம்” என்று சட்டப்பேரவையிலேயே முழங்கினேன் நான். இந்த வரலாறெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா?
மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களுடன் நிற்பது மட்டும் தான் @AIADMKOfficial-ன் ஒரே பணி!
அது ஒருநாளும் மாறாது!
நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதலமைச்சர் விளக்க வேண்டும்; உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
உயிர் காக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடனும், கருணையுடனும் மேற்கொண்டு வரும்
அனைத்து மருத்துவர்களுக்கும்
தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.
கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்றுக் காலத்திலும் முன்னணி வீரர்களாக நின்று பல உயிர்களைக் காத்திட்ட தங்களின் அரும்பணி நினைவுகூரத்தக்கது.
தங்களின் சேவை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வினை உறுதிசெய்திடும் வகையில் அமைந்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
மேகதாது அணைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தில் திருத்தம் செய்வது குறித்து அவையில் அறிவிக்காமல் திருத்தியது சட்டசபை விதிகளுக்கு முரணானது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள தனியார் இறால் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களைக் காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்த அரசு தொடர் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், கழகத்தின் தீவிர விசுவாசியுமான திரு. K.S. மகேந்திரன் அவர்கள் சமீபத்தில் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அவரது மனைவி திருமதி முனீஷ்வரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடம், கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 30 லட்சம் ரூபாயும்; தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் 25 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 55 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கி, ஆறுதல் கூறினார்.
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
I extend my warm birthday greetings to the Hon’ble President of India,
Tmt. Droupadi Murmu Avl.
I wish her a long life, good health, and continued success in serving the people of our nation.
@rashtrapatibhvn@AIADMKOfficial
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் போக்குவரத்துப் பிரிவு உள்ளிட்ட இணைப்புச் சங்கங்களின் மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் : 29.6.2026 முதல் 20.7.2026 வரை
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு