தூக்கி கையில் வையுங்கள் நான் மலையை தூக்குகிறேன் என்கிற செந்திலின் காமெடியை விஜய் அரசியலில் செய்து கொண்டு இருக்கிறார்.
ஓட்டு கேட்ட்கும் பொழுதும் தேர்தல் அறிக்கையிலும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று கூறிவிட்டு இப்பொழுது ஒன்றிய அரசு எடுத்த பின் இவர் கணக்காய்வு எடுப்பாராம். சாதிவாரி கணக்கெடுப்பை மறுக்கும் ஒன்றிய அரசின் மேல் பழியை போட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறது தவெக அரசு.
மக்களை இதிலும் ஏமாற்றிவிட்டார் விஜய்.
#TVKFails #PoliticalDisaster
அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்!
அஜித்குமாரின் படுகொலைக்கு நீதிகேட்டு பேசிய முதல்வர் விஜய் அவர்கள், ஆகாஷின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவதா?
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கடும் கண்டனம்
• மானாமதுரையில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷின் மரணத்துக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து, மூன்று மாதங்களுக்கு மேலாகக் குடும்பத்தினரும், உறவுகளும் போராடி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணமாகக் காட்டி, பெற்றோரைக் கைதுசெய்து, உடலைக்காவல்துறையினரே அடக்கம் செய்திருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்.
• நல்ல உடல்நலத்தோடு திடகாத்திரமாக இருந்த ஆகாஷ் காவல்துறை விசாரணைக்குப் பின்னர், ஒரேநாளில் உயிரிழக்கிறாரென்றால், அம்மரணத்துக்குக் காவல்துறையினர்தான் முழுப்பொறுப்பு. இதனை நீதிமன்றம்கூட கேட்க மறுத்திருப்பது ஏமாற்றமும், வேதனையுமளிக்கிறது.
• தவெக ஆட்சியில் சூலூர் சிறுமி, கும்மிடிப்பூண்டி சிறுமியைத் தொடர்ந்து ஆகாஷின் உடலையும் பெற்றோர், குடும்பத்தினர் இல்லாது அடக்கம் செய்திருக்கும் காவல்துறையின் போக்குகள் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா? இல்லை! உத்திரப்பிரதேசத்தில் வாழ்கிறோமா? எனும் கேள்வியை எழுப்புகிறது.
#TVK #Mannarkudi #AkashCustodialDeath #CMJosephVijay #NaamTamilarKatchi #Seeman #TNGovt #TNPolice #TamilnaduPolitics #BreakingNews
என்னது.. விஜய்ய பாராட்டுனாரு. Tvk வ புகழ்ந்தாரா?
அரசியல் அறிவு அணுவளவுகூட கிடையாதா? @galattadotcom
மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும் என்பது மரபு. தவெக தரப்பு எழுதிக் கொடுத்தத அப்படியே வாசிச்சு இருக்காரு ஆளுநர்.
இது எப்படி பாராட்டு, புகழ்ச்சி ஆகும்?
‘தூய அரசியலின் நேர் வடிவம்’ நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய மாமனிதர்..!
காவல்துறை அமைச்சராக இருக்கிறபோதே அரசுப் பேருந்தில் பயணம் செய்த எளிமையானப் பெருமகன்..!
தன்னுடைய மகன், தன் சொந்த முயற்சியால் காவல்துறைக்குத் தேர்வாகி வரும்போது, நான் சொல்லித்தான் கிடைத்தது என்று யாராவது சொல்லக்கூடும், எனவே அது வேண்டாம் என்று விலகச் சொல்லி, ஊழல், இலஞ்சம் என எவ்வித முறைகேடுகளும் அண்ட முடியாத பெருநெருப்பாக வாழ்ந்த பெருந்தகை..!
பெருந்தலைவர் காமராசருக்கு இத்தனைப் பெருமைகள் இருக்கிறது என்றால், அதற்கு ஐயா கக்கனைப் போன்ற பெருந்தகைகளும் பெரும் காரணம். தன்னுடைய அமைச்சரவையில் இருந்த எல்லோரையும் நேர்மையாளர்களாக வைத்திருந்ததால்தான் பெருந்தலைவரின் நேர்மை போற்றப்படுகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. தாத்தா கக்கன் அவர்களுடைய வாழ்க்கை, வரலாறு, வழித்தடம் ஆகியவை நம்மைப் போன்ற பிள்ளைகளுக்கு ஆகப்பெரும் படிப்பினை.
அவரைப் போலவே உண்மையும், நேர்மையும், எளிமையுமாக அரசியல் பணியாற்றுவோம் என்கிற உறுதியை பேரப்பிள்ளைகளாகிய நாம் இன்றைய நாளில் ஏற்போம்.
பெருமைமிகு தமிழர் இன அடையாளமாக, மதிப்புமிக்க ஆளுமைகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்திருக்கிற ‘தூய அரசியலின்’ நேர்வடிவம் நம்முடைய தாத்தா கக்கன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி பெண் உயிரிழக்க காரணமாகியுள்ள அரசு மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். சகோதரி தமிழ்ச்செல்வி, உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருடைய குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
திரைக்கலைத்துறையில் தம்முடைய ஒப்படைப்பு மிகுந்த நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகராக மக்கள் மனதில் நீங்காது நிலைத்திருக்கும், என் பேரன்பிற்குரிய அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு, இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும் உயரிய விருதான 'யுவ புரோஸ்கர்' விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.
கலைத்துறையில் அளப்பரிய சாதனைகள் புரிந்துள்ள அண்ணன் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
தளபதியா ஆட்சியில் தவறு செய்தவர்களை
கைது பண்ணிட்டாங்க.!?
கைது பண்ணிட்டாங்க.!?
யாரை.??
ஆகாஷை அடித்துக் கொன்ற காவலர்களையா.??
இல்லைங்க.!?
அப்புறம் யாரை கைது பண்ணாங்க.=??
நியாயம் கேட்டு போராடிய ஆகாஷ் பெற்றோர்களை..!!
😂😂😂
தவெகவின் வெள்ளை அறிக்கை எனும் வெற்று அறிக்கை !
முழுக்காணொளி :
தவெகவின் வெள்ளை அறிக்கை | கடன் வாங்கி வைத்த திமுக ? | கடனை அடைக்கப்போகும் தவெக |
https://t.co/bDU1BwrN7N