ஒரே துறையில் (ஃபீல்டில்) பணியாற்றியவர்கள் அல்லது ஒன்றாக வளர்ந்தவர்கள் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் நல்லுறவுடன், மரியாதையுடன் ஒன்றாக இருப்பது இயல்பான விஷயம். அதற்கு தேவையில்லாமல் அரசியல் கண்ணோட்டத்தில் பல்வேறு கருத்துக்களை கூறுவது சரியல்ல.
பல தருணத்தில் சந்திப்பு நடக்குமா? என ஏங்கிய நாட்கள் உண்டு.
இது போன்ற கடினமான நேரத்தில் தான் நடந்துள்ளது. இரு துருவங்கள் ஒன்றாக இணைவதை காணும்போது உடன் யார் இருந்தால் நமக்கென.
சோகத்தையும் மீறி மலர்ந்த முகத்துடன் வரவேற்ற AKவின் பண்பை விளக்க வார்த்தைகள் இல்லை.
Long Live Thala & Thalapathy ❤️♾️
ஒரே துறையில் (ஃபீல்டில்) பணியாற்றியவர்கள் அல்லது ஒன்றாக வளர்ந்தவர்கள் சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் நல்லுறவுடன், மரியாதையுடன் ஒன்றாக இருப்பது இயல்பான விஷயம். அதற்கு தேவையில்லாமல் அரசியல் கண்ணோட்டத்தில் பல்வேறு கருத்துக்களை கூறுவது சரியல்ல.
நடிகர் அஜித் குமார் அவர்களின் தாயார் மறைவையடுத்து திரை மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வரும் அவரின் வீட்டிற்கு வெளியே மட்டுமே தொலைக்காட்சி கேமிராக்கள் இயங்கி வருகின்றன. கதவை தாண்டி வீட்டினுள் வேறு எந்த காட்சியும் இல்லை. இது போன்ற பல சமயங்களில் பின்னணியில் ஒரு சோக கீதம் ஒலிக்க இறந்தவர்களின் உடலையும், குடும்ப உறுப்பினர்களையம் வளைத்து வளைத்து காண்பிக்கும் நிகழ்வுகள் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு குடும்ப நிகழ்வாக கடைபிடித்திருப்பது நெகிழ்வை தருகிறது. அஜித் அவர்களின் கட்டுக்கோப்பான வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், இறுதி ஊர்வலம் குடும்ப நிகழ்வாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஊடகங்கள் இதை ஒரு முன்னுதாரணமாக கொண்டு செயல்பட வேண்டும். அஜித் அவர்களின் தாயாரின் மறைவுக்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள்.
நாரயணன் திருப்பதி.
திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் காலமானதையறிந்து வேதனையடைகிறேன்.
அம்மாவை இழந்துவாடும் அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
திருமதி மோகினி மணி அம்மையார் அவர்களுக்கு விசிக சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்!
இவண்
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விசிக.
தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், பிரபல கார் பந்தய வீரருமான அன்பு சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.மோகினி மணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்த கடினமான நேரத்தில் திரு.அஜித்குமார் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், மனதைரியத்தையும் ஆண்டவன் வழங்க வேண்டும் என வேண்டுகிறேன்.
தனது தாயை இழந்து வாடும் திரு.அஜித்குமார் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@SureshChandraa
#AjithKumar
அன்புச் சகோதரர் நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.மோகினி மணி அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
சமூக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ள தனது பெற்றோரின் நினைவாக திரு.அஜித்குமார் அவர்கள் நிறுவிய மோகினி-மணி அறக்கட்டளை (Mohini-Mani Foundation) என்ற அமைப்பு வாயிலாக என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கட்டும்.
அம்மையாரை பிரிந்து வேதனையில் வாடும் திரு.அஜித்குமார் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ரா.சரத்குமார்
ராதிகா சரத்குமார்
இன்றைய தினம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!
அன்புச் சகோதரர் திரு. அஜித் குமார் அவர்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தாயை இழக்கும் துயரம் ஈடு செய்ய முடியாதது; ஒரு மகனின் வாழ்வின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருக்கும் ஊக்கசக்தி அன்னையின் ஆசிகளே.
வாழ்வின் சிகரங்களைத் தொட்ட உங்களைப் பார்த்து உங்கள் தாயார் பெருமைப்பட்ட தருணங்கள், உங்கள் இதயத்தில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். பிரிவின் துயர் பெரிது என்றாலும், அன்னையின் நற்பண்புகளும் அவர் உங்களுக்கு ஊட்டிய துணிச்சலுமே இந்த சோதனையான காலக்கட்டத்தில் உங்களை தாங்கிப் பிடிக்கும்.
உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வரவும், தாயாரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுகிறேன். எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#ajithkumar
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான்.
அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினிமணி அம்மாள் அவர்கள் இயற்கை ஏய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஒரு குடும்பத்தின் ஆணிவேராக திகழும் தாயின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
எளிமையும் அன்பும் நிறைந்த தாயாரை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#RIP
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இந்திய கார் பந்தய வீரருமான திரு. அஜித்குமார் அவர்களது தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தாயாரை இழந்து வாடும் திரு. அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு, அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி..!
தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகரும், கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கின்றது.
தன் உயரங்களை கண்டு
வியந்த, மகிழ்ந்த உயிரான தாயை பிரிவதென்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
பாசமிகு அன்னையை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்! 🙏🏿
#RIP
சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.