திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் திரு. @Dayanidhi_Maran எம்.பி., அவர்களுடன், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு. @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பொழுது.
#DMK#DMKSportsWing
Script paper-ஐ மட்டும் படிக்கும் Dummy CM அவர்களே தினமும் News paper படிங்க.
Sofa model ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அனைத்து நியூஸ் பேப்பரும் இலட்சணத்தைச் சொல்கிறது.
#TVKFails
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பனையூர் பாபு அவர்கள் தனது ஆதரவாளர்கள், 1200 பேருடன் நமது தலைவர் @mkstalin அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது அதில் நாம் பங்கேற்றோம்.
கழகத்தில் இணைந்த தோழர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
கொள்கை அரசியலை, கவர்ச்சி அரசியலை வைத்து வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
ஒற்றுமையுடன் கரம் கோத்து தமிழ்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடச் செய்வோம்.
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!
உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
உண்மையின் பின்னணி இதோ:
நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!
இப்போது எழும் கேள்வி?
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]
குறிப்பு:
மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் திமுக பக்கம்தான்!
- கழகத் தலைவர், திரு @mkstalin அவர்கள்
#DMK#MKStalin#DMKSDWing
நம் உயிருக்கு நிகரான கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. குடியிருப்பு இல்லங்களில், தலைவர் @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னணியினருடன் சென்று கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
#KalaignarForever
மாநில உரிமைகள், மாநில வளர்ச்சி என திராவிட நாயகர் செய்தது எல்லாம் வரலாற்றுச் சம்பவங்கள். மறுபுறம் கருணையுள்ளம் கொண்ட தாயுமானவராக தமிழ்நாட்டு மக்களைக் காத்தவர்!
#DMK4TN
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever