"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
அரசு பேருந்து பயணி ஒருவரின் பதிவு : சமீபத்தில் கரூரில் இருந்து சென்னை செல்வதற்கு SETC-ல் Bus முன்பதிவு செய்து இருந்தேன். அது ஒரு semi-sleeper Ultra Deluxe bus. அடுத்த நாள் சிரமமின்றி வேலைக்கு செல்ல வேண்டும் என்பதாலும், தூங்குவதற்கு வசதியா இருக்கும் என்பதாலும் Ultra Deluxe முன்பதிவு செய்து இருந்தேன்.
ஆனால் பஸ் ஏறச் சென்றபோது அங்கு இருந்தது 2×3 பேருந்து. அதாவது நேரான இருக்கைகள் கொண்ட சாதாரண பேருந்து.முன்பதிவு செய்தோர்களும் எதுவும் கேட்காமல் ஏறிக்கொண்டு இருந்தனர். இது எனக்கு சற்று அதிர்ச்சியாகவும், புரியாததாகவும் இருந்தது.
மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கெள்ள நடத்துனரிடம் விசாரித்தபோது அவர் Deluxe வாகனம் கடைசி நேரத்தில் பழுதாகிவிட்டதாலும் இதுதான் இருக்கிறது என்றும் 3×2 பேருந்தை காட்டினார். கடைசி நேர சிக்கலினால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இந்த பேருந்துக்கு என்ன கட்டணமோ அதை மட்டுமே வசூலிப்பதாகவும், முன்பதிவு செய்த மீத பணத்தை கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்தார். எனக்கு இது ஏற்புடையதாக இல்லை.
எனவே எனக்கு இந்த பேருந்தில் செல்ல விருப்பம் இல்லை எனவும், டீலக்ஸ் பஸ் என்பதாலே புக் செய்தேன், 8-9 மணி நேரம் இதில் நேராகவே உட்க்கார்ந்து சென்றால் அடுத்த நாள் காலை வேலைக்கு செல்வதில் எனக்கு சிரமம் ஏற்ப்பட்டுவிடும் என்று அந்த பேருந்தில் ஏற மறுத்துவிட்டேன்.
இதற்கு தீர்வாக அடுத்து உள்ள Ultra Deluxe பேருந்தில் எனக்கு ஒரு இருக்கை வேண்டும், அது முடியாத பட்சத்தில் என்னுடைய முழு பணமும் திருப்பி தரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இது சம்பந்தமாக துறை அதிகாரிகளிடம் பேசவும் தயார் என நடத்துநரிடம் தெரிவித்தேன்.
ஆனால் அவரே தங்கள் மேல்அதிகாரிகளிடம் பேசிவிட்டு வேறு பேருந்தில் இருக்கை இல்லை என்பதால் முன்பதிவு பணத்தை கொடுத்து விடுவதாக கூறி அடுத்த நிமிடமே முழு பணத்தையும் (Refund) திருப்பி செலுத்தினார்.
'இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' என்பது போல் "தமிழக போக்குவரத்து கழக" வரலாற்றில் முதல் முறையாக பேக்குவரத்துதுறையின் துரிதமான நடவடிக்கையை கண்டு ஆச்சரியமும் வியப்புமாக இருந்து.
இதுவே திமுக, அதிமுக ஆட்சியில் இருந்திருப்பின்
" இந்த பஸ்தான் இருக்கு, இஷ்டம்னா ஏறு இல்லாட்டி போ" ,
"யார்கிட்ட பேசிறியோ பேசிக்கோ"
என்பது போன்றே பெரும்பாலும் பதில்கள் வந்திருக்கும்.
ஆனால் இன்று எந்தவொரு அலட்சியமும் இன்றி உடனடியாக தீர்வு காணப்பட்டது.
இது ஒரு நல்ல மாற்றமாக கருதுகிறேன். சிறு சிறு மாற்றங்களே நாளை பெரிய மாற்றங்களுக்கான வழியாக அமையும். அதிகாரிகள் ஆட்சியர்களுக்கு கீழ்படிந்து நடப்பது மக்களுக்கு தேவையான நேரடி பலன் கொடுக்கும்.
இந்த மாற்றம் பார்ட்டுதலுக்கு உரிய மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான அறிகுறியாக தென்படுகிறது.