மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu
மக்கள் நீதி மய்யம்
எண்பது ஒரு சூப்பர்
@ikamalhaasan Brand.
எப்போதோ கட்சியை
விட்டு போனவர்கள் கூட இன்றும் அதனால்
பலனும் பிரபலமும் ஆகிறார்கள்
இங்கே #MNM ல் உள்ளவர்கள் வழக்கு
பொய், பித்தலாட்டம்,
பணத்தாசை இல்லாத
அப்பழுக்கற்ற 💎 Gem மட்டும் தான்
#KamalHaasan@maiamofficial
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
@CMOTamilnadu
ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!
தங்கள் அரசின் அடிப்படைப் பணிகள் என்னவாகயிருக்கும் என்பதன் தொகுப்பாகத்தான் ஆளுநர் உரை அமைந்துள்ளது. உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அரசானது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்றத்தின் அமர்வை சென்னையில் அமைத்தல், உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமூச்சுடன் பாடுபட வேண்டும். பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது.
ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதிப்பகிர்வை சட்ட ரீதியாகப் போராடிப் பெறுவதற்கு சட்ட வல்லுனர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்பது அவசியமானதொரு நடவடிக்கையாகும். அதேசமயத்தில் நிதிப்பகிர்வு உள்ளிட்ட ‘‘கூட்டாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகள்” குறித்து மறுஆய்வு செய்து தீர்வுகளைத் தருவதற்காக 2025ல் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை தவெக அரசு பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
நகரமயமாதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் குடிநீர், உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் நிதி மற்றும் கிராம சபைகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தக்குறிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.
ஆளுநர் உரையில் காவிரிப்பிரச்னை, போதை கலாச்சாரம் ஒழிப்பு, பாலியல் வன்முறை போன்றவற்றைக் கையாள்வதில் மென்மையான போக்கே காணப்படுகிறது. இவற்றில் கடுமையான நிலைப்பாட்டை - செயல்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஆளுநர் உரை நிறைவேற்றவில்லை.
ஆ. அருணாச்சலம் MA., BL., @Arunachalam_Adv
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு (தவெக) தனது அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – @maiamofficial வலியுறுத்தல்!
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் டெல்டா பகுதி விவசாயிகளின் தற்போதைய அவல நிலையைக் கண்டு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் தற்போதைய தமிழக அரசு (தவெக) காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
1. மேட்டூர் அணை மூடல் & மின்வெட்டு துயரம்:
வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு (2026) அணையில் முழு கொள்ளளவு எட்டப்படாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் டெல்டா பாசனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, நிலத்தடி நீரை (போர்வெல் மூலம்) இறைத்து பாசனம் செய்யலாம் என்று விவசாயிகள் முயன்றால், டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான மும்முனை மின்சார (Three-Phase Connection) மின்வெட்டு அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது. போதிய மின்சாரம் இல்லாததால் போர்வெல் மூலமும் அவர்களால் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
2. போதாத 'குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு':
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை ஈடுகட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளில் முந்தைய திமுக அரசு விவசாயிகளுக்குக் கூடுதல் நிதியுடன் கூடிய குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பை வழங்கியிருந்தது.
ஆனால், தற்போதைய தவேக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு வெறும் ரூ. 134.83 கோடி மட்டுமே. இது முந்தைய அரசு வழங்கிய தொகையை விட மிகவும் குறைவானதாகும்.
முக்கியக் குறிப்பு: இந்த ஆண்டு 'எல் நினோ' (El Niño) விளைவினால் 90% மழைப்பொழிவு குறைந்துள்ளது. வறட்சி அதிகமாக இருக்கும் இந்த ஆண்டில்தான் தண்ணீருக்கான தேவையும், விவசாயிகளுக்கான நிதி உதவியின் தேவையும் மிக அதிகம். இத்தகைய சூழலில், அரசு மிகக் குறைந்த தொகையை அறிவித்திருப்பது டெல்டா விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
3. தேர்தல் வாக்குறுதியும், ஏமாற்றமும்:
தேர்தல் அறிக்கையில் "விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்" என்று தற்போதைய ஆளுங்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், நடைமுறையில் அது முழுமையாகச் செய்யப்படவில்லை.
பல்வேறு கடுமையான நிபந்தனைகளை (Terms and Conditions) விதித்து, ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த விவசாயப் பெருங்குடி மக்களையும் ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கைகள்:
தமிழக விவசாயிகளின் நலனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் தற்போதைய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்:
குறுவை சிறப்புத் தொகுப்பு நிதியை வறட்சிக் காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக உயர்த்த வேண்டும்.
டெல்டா பகுதிகளில் போர்வெல் பாசனத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரத்தை (3-Phase Power) தடையின்றி வழங்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், இந்த அறிவிப்புகள் அனைத்தையும் தவெக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
#MakkalNeedhiMaiam
#KamalHaasan_MP
#cheifministerofTamilnadu
#deltafarmers
Ethanol-Blended Fuel — Consumer Rights & Transparency
As India advances its ethanol-blending programme, the transition must remain informed, transparent, fair, and consumer-conscious.
1. Mandatory Disclosure at Point of Sale
Petrol bunks must prominently display clear signage whenever ethanol-blended fuel is being dispensed. Consumers have a fundamental right to know what fuel they are purchasing and whether it is compatible with their vehicles.
2. Public Awareness on Technical Risks
Ethanol is hygroscopic — it absorbs moisture from the atmosphere. Legitimate concerns persist among motorists regarding:
Water contamination in fuel systems
Impact on fuel injectors and fuel pumps
Long-term vehicle maintenance implications
Public awareness campaigns and transparent, accessible information are essential to address these concerns responsibly.
3. Clarity on Warranty, Insurance & Liability
There must be unambiguous frameworks governing warranty, insurance, and liability in cases where fuel contamination or fuel-related damage occurs. Consumers must not be left in uncertainty about who bears responsibility when problems arise — the fuel supplier, the distributor, the retailer, or the manufacturer.
Our leader and honourable MP @ikamalhaasan also had raised this question on 19 Dec 2025 in the parliament.
Makkal Needhi Maiam @maiamofficial calls upon the Government of India and relevant regulatory authorities to mandate.
Strong, defensible disclosure standards at all fuel retail points
Clear warning labels on blended fuel dispensers
Explicit guidance on warranty and insurance coverage for fuel-related damage
A defined liability framework protecting consumer interests.
Consumers deserve clarity, not ambiguity, as India navigates this energy transition.
#E85 #Ethanol
@nitin_gadkari@HardeepSPuri@PetroleumMin@Secretary_MoPNG@neerajmittalias
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
1960 ல் ஒன்றிய அரசின் அஞ்சல் துறை வெளியிட்ட திருவள்ளுவர் அஞ்சல் தலையில்,காவியாடை,பட்டை,பூநூல் ஏதுமில்லாமல்,தூய வெண்ணிற ஆடையில் மிகவும் எளிமையான தோற்றத்தில் உள்ளார்.
வள்ளுவருக்கு பட்டை அடித்து,காவி உடுத்தி பூநூல் போட்டுள்ள கவர்னரின்
செயல் அறமற்றது
#KamalHaasan@maiamofficial
*இன்று (30.05.2026) பிறந்தநாள் காணும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்களுக்கு நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.. 🎂💐*💐💐💐
ஜெர்மனியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் தொடரில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் தங்கம் வென்றார்.
மக்கள் நீதி மய்யம் வாழ்த்து !
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam#EshaSingh
சூலூர் அருகே 10 வயது நிரம்பிய சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மனம் கொதிக்கச் செய்கிறது. குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். தங்கள் செல்லமகளுக்கு நிகழ்ந்த கொடுமையை எண்ணி உருக்குலைந்து போயிருக்கும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
சென்னை மட்டுமல்ல தமிழ் நாடு முழுவதும் மின் வெட்டு.
மின் பயன்பாடு அதிகரிப்பு தான் காரணம் என்றாலும்,தொடர்ந்து பணியாற்றி வரும் அதிகாரிகள்,மின் தேவையை
கணிக்காமல் விட்டது ஏன்?
Hon @TVKVijayHQ அரசு உடனடி நடவடிக்கை எடுத்து திறமையை நிரூபிக்க வேண்டும்.
#KamalHaasan@maiamofficial
"Sacrifice cannot be expected only from citizens; governments too must share the burden"
Makkal Needhi Maiam President and Rajya Sabha MP Thiru. Kamal Haasan @ikamalhaasan Calls for action from all leaders of State beyond political borders.
#KamalHaasan#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam