🔔 | தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மொத்தம் 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு !
• இதற்காக ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது !
தமிழ்நாட்டில் போதை பொருளை ஒழிக்க 65 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு படை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போதை ஒழிப்பிற்காக ரூ.264 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது
Godavari a mighty river, seen peak sustained discharge ~35lakh cusecs.
For TN to understand this Colossal flow, it can fill Mettur dam just in 7 hours!
Godavari Cauvery link can cost 3 lakh crore. Even diverting 1% of flood water will be game changer during Cauvery drought.
காவிரி நதியைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பினால், இந்தப் பதிவைப் பொறுமையாக படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
இதுதான் காவிரி நதியின் பயணம்!
The Journey of #CauveryRiver
காவிரி என்றாலே, கர்நாடகாவில் இருக்கும் ஏதாவது ஓர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அது நேராக தமிழ்நாட்டின் மேட்டூர் #Mettur அணைக்கு வந்துவிடுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் காவிரியின் உண்மையான பயணம் அவ்வளவு எளிமையானதல்ல.
காவிரி ஒரே நீர்ப்பிடிப்பை மட்டும் சார்ந்த நதி அல்ல. அது பல துணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், துணையாறுகள், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இணைந்த மிகப்பெரிய ஆற்றுப்படுகை.
ஒவ்வொரு துணை நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் பெய்யும் மழையின் அளவு வேறுபடும். அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்து, அணையின் கொள்ளளவு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவும் வேறுபடும்.
காவிரியின் பயணம் கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரியில் தொடங்குகிறது.
ஹாரங்கி #Harangi, ஹேமாவதி #Hemavathi மற்றும் லட்சுமண தீர்த்தா ஆகியவை தனித்தனி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உருவாகின்றன. இவற்றின் நீர் வெவ்வேறு இடங்களில் காவிரியுடன் இணைந்து, இறுதியாக கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் #KRS அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.
ஆனால் கபினியின் பயணம் வேறு. #Kabini
கபினி கேரளாவின் வயநாடு பகுதியில் உருவாகி, கர்நாடகாவிலுள்ள கபினி அணையில் சேமிக்கப்படுகிறது. பின்னர் T.நரசிபுரா அருகே காவிரியுடன் இணைகிறது.
அதாவது, கபினி அணையிலிருந்து வெளியேறும் நீர் முதலில் KRS அணைக்குச் செல்வதில்லை. KRS அணையிலிருந்து வெளியேறும் காவிரியும், கபினி அணையிலிருந்து வரும் நீரும் T.நரசிபுரா பகுதியில் தான் ஒன்றாக இணைகின்றன.
இதற்குப் பிறகு சிம்ஷா, அர்க்காவதி, சுவர்ணவதி மற்றும் வழியிலுள்ள பிற சிறிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வரும் நீரும் காவிரியில் சேர்கிறது.
இவ்வாறு பல்வேறு ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சேர்ந்த மொத்த காவிரி நீர், கர்நாடகா–தமிழ்நாடு எல்லையிலுள்ள பிலிகுண்டுலுவில் #Biligundlu அளவிடப்படுகிறது.
பிலிகுண்டுலு ஓர் அணை அல்ல. அது மத்திய நீர்வள ஆணையத்தின் முக்கிய நீர் அளவீட்டு நிலையம். (CWC Water Gauge)
கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை மட்டும் கூட்டிப் பார்த்து, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் கிடைத்தது என்று கூற முடியாது. வழியிலுள்ள துணையாறுகளின் நீர்வரத்து, மழை, பயண நேரம் மற்றும் ஆற்றின் உண்மையான ஓட்டம் அனைத்தும் இதில் அடங்கும்.
அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த உண்மையான நீரின் அளவு பிலிகுண்டுலுவில் பதிவாகும் நீரோட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
பிலிகுண்டுலுவைக் கடந்த காவிரி, தமிழ்நாட்டிற்குள் நுழைந்து ஒகேனக்கல் #Hogenakkal வழியாக மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூரில் சேமிக்கப்படும் நீர், தேவையின் அடிப்படையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கீழே திறக்கப்படுகிறது.
01.08.2026 நிலவரப்படி முக்கிய அணைகளின் நீர்மட்டம் மற்றும் மொத்த கொள்ளளவில் உள்ள நீர் இருப்பு:
✅Harangi: 127.55/129 அடி – 94%
✅Hemavathi : 100.98/117 அடி – 64%
✅KRS: 91.80/124.80 அடி – 34%
✅Kabini: 56.28/65 அடி – 74%
✅Mettur: 73.82/120 அடி – 39%
✅Bhavani Sagar: 55.32/105 அடி – 18%
✅Amaravati: 28.54/90 அடி – 9%
“சதவீதம்” என்பது அந்த அணையின் மொத்த கொள்ளளவில் தற்போது எவ்வளவு நீர் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
ஒவ்வொரு அணையின் உயரமும் கொள்ளளவும் வேறுபடும். எனவே, அணைகளின் நீர்மட்டத்தை மட்டும் நேரடியாக ஒப்பிடக் கூடாது.
மேட்டூர் அணைக்குக் கீழே பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன.
எனவே, இந்த ஆறுகளின் நீர் மேட்டூர் #Mettur அணையை நிரப்பாது. ஆனால் மேட்டூருக்குக் கீழே காவிரியின் ஓட்டத்திற்கும், டெல்டா பகுதிகளின் தேவைக்கும் அவை கூடுதல் பங்களிப்பை வழங்குகின்றன.
அதன்பிறகு முக்கொம்பு மேலணைப் பகுதியில் காவிரி–கொள்ளிடம் நீர்ப் பிரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரி டெல்டாவின் பல்வேறு கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
எனவே, காவிரி டெல்டாவிற்குக் கிடைக்கும் நீர் என்பது ஏதாவது ஓர் அணையின் இருப்பை மட்டும் சார்ந்ததல்ல.
அது பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரோட்டம், மேட்டூர் அணையின் இருப்பு மற்றும் வெளியேற்றம், தமிழ்நாட்டின் பவானி–நொய்யல்–அமராவதி துணையாறுகள், உள்ளூர் மழை மற்றும் நீர் மேலாண்மை ஆகிய அனைத்தையும் சார்ந்துள்ளது.
சாதாரண நீராண்டில், ஜூன் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை மொத்தம் 177.25 TMC நீர் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட வேண்டும். இது ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையிலான மொத்த அளவு.
சுருக்கமாக காவிரியின் பயணம்:
பல மழைப்பகுதிகள்
→ தனித்தனி துணை நீர்ப்பிடிப்புகள்
→ துணையாறுகள் மற்றும் அணைகள்
→ KRS–கபினி நீர் இணைப்பு
→ பிலிகுண்டுலு அளவீடு
→ ஒகேனக்கல்
→ மேட்டூர்
→ தமிழகத்தின் துணையாறுகள்
→ முக்கொம்பு
→ கல்லணை
→ காவிரி டெல்டா.
ஒரே காவிரி ஆற்றுப்படுகை; ஆனால் அதற்குள் பல துணை நீர்ப்பிடிப்புகள்!
இந்த வரைபடத்தின் நோக்கம், அந்த நீண்ட மற்றும் சிக்கலான காவிரிப் பயணத்தை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளச் செய்வதே.
ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் நீர்த்தேக்கக் கண்காணிப்புத் தளம், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால், கருத்துப் பகுதியில் கேளுங்கள். என்னால் முடிந்தவரை அதுகுறித்த தகவல்களைத் தேடி, உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
@praddy06@tamilnadu_wrd@CWCOfficial_GoI
#Cauvery #Tamilnadu #Karnataka #Monsoon #Kerala
#BREAKING | தமிழ்நாடு அரசின் வருவாயை உயர்த்துவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அறிக்கை அளிக்க திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு
6 பேர் கொண்ட இக்குழு 3 மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவிப்பு
#SunNews | #TNGovt | #Finance
சத்தமில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தியமாக புகார்: மின்வாரியம் விளக்கம் திருநெல்வேலியில் மீட்டர் மற்றும் பில்லிங் குறைபாடுகளால் வீட்டு மின்நுகர்வோருக்கு கூடுதல் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்பதை நெல்லை மின்வாரிய தலைமை பொறியாளர் ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அவர் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில்,மீட்டர் கணக்கீடு (Meter Reading) அல்லது பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளே இந்த அதிகப்படியான கட்டணத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த அசாதாரண பில்லிங் முறையால் பொதுமக்களுக்கு தேவையற்ற நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் மின் கட்டண கணக்கீட்டை காலமுறைப்படி திடீர் ஆய்வு (Surprise Inspection) செய்ய வேண்டும். விரைவான மற்றும் பிழையற்ற மின் கட்டண கணக்கீட்டை நுகர்வோருக்கு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்வாரியத்தின் 24×7 இலவச உதவி எண்ணான 1912-ஐ மக்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகாரின் போது உங்கள் நுகர்வோர் எண் (Consumer Number), தற்போதைய மீட்டர் ரீடிங் மற்றும் கட்டண விவரங்களை வழங்க வேண்டும். உங்கள் புகார் பதிவானதும் அதற்கான குறிப்பு எண்ணை (Reference Number) கண்டிப்பாக கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். புகாரின் பேரில் அதிகாரிகள் உங்கள் மீட்டரை ஆய்வு செய்து, தவறு இருக்கும் பட்சத்தில் கட்டணத்தை திருத்தம் செய்வார்கள்
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres