மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பெற்ற பிள்ளையை இழந்து நீதி கேட்டு போராடினால், வழக்கு போடுவதும், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது உறவினரை விசாரணைக்கு வர சொல்லி summon அனுப்புவதும் எந்த வகையிலும் ஏற்க முடியாதது.
மாணவன் மறைந்து 12 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக போராட்டத்தை ஒடுக்குவதிலும் - வழக்குப் பதிவு செய்வதிலும் தான் காவல்துறை குறியாக இருக்கிறது.
இந்த பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு, மாணவன் மரணத்தில் நடந்தது என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அதற்கு காரணம் யார்? என்பதை எல்லாம் எந்த குறுக்கீடும் இல்லாமல் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.
குறிப்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரணமடைந்த மாணவனின் குடும்பத்தார் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற்று, அவர்களுக்கான நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
தரைல ஒக்காந்தா Life செட்டில்மென்ட்னா ??
வானத்துல பறக்க விட்டு குக்கிராம அரசு பள்ளி மாணவர்களை அமீரகம் கூப்டுட்டு போய் உலக அரங்குல எல்லார் முன்னாடியும் காமிச்சாரு பாரு 🖤❤
@Anbil_Mahesh அண்ணன் திமுக வின் கல்விதுறை 🔥🔥
இதெல்லாம் இன்னும் நூறு தலைமுறை தாண்டி நிற்கும் 🖤❤
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.
கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!
பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!
கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!
தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் - மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்.
வாழ்க அண்ணாவின் புகழ்!
#PerarignarAnna
எச்சிலைப் பிழைப்பு பிழைக்கும் இன்ஸ்டா வாடகை வாய்கள் மற்றும் தவெக தற்குறிகளே!
லாங் வீக்கெண்டுக்காக கடந்த வியாழன், வெள்ளியன்று ஊருக்குப் போக முடியாமல் கிளாம்பாக்கத்தில் மக்கள் நடுத்தெருவில் கதறினார்கள். அரசுப் பேருந்துகள் இல்லாததால், ஆம்னி பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.5000 வரை அப்பட்டமான பகல் கொள்ளை!
இதைச் சரிசெய்ய வக்கற்ற தவெக அரசு, "இது திமுக சதி" என மடைமாற்ற, காசுக்கு வாந்தியெடுக்கும் இன்ஸ்டா கோமாளிகளை 'ஞாயிற்றுக்கிழமை' இரவு கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி "கூட்டமே இல்லை, பஸ் ஃப்ரீயா இருக்கு" என Reels போட வைத்துள்ளது!
ஏண்டா மூளை மழுங்கிய தற்குறிகளா! உங்கள் 'டம்மி' முதலமைச்சரைப் போலவே மண்டையில் களிமண்ணா? விடுமுறை முடியும் நாளுக்கு முன்பு ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா? வாங்கிய காசுக்கு இவ்வளவு பச்சையாகவா குரைத்து மாட்டுவது?
"தவறு நடந்துவிட்டது, உடனே சரிசெய்கிறோம்" எனச் சொல்லும் நிர்வாகத் திறமையோ, துணிச்சலோ இந்த ரீல்ஸ் முதலமைச்சருக்கு என்றைக்கும் வராது.
மக்களின் நிஜமான கண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய கோமாளிகளை வைத்துக் கொச்சைப்படுத்துவது மட்டும்தான் தவெக-வின் ஈனத்தனமான மாற்று அரசியல்! 🤡