பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
அண்ணாமலை மீதான திமுக பதிவு செய்த அவதூறு வழக்கை வாபஸ் பெறக்காரணம் என்ன? 2021-26 ஆண்டுகாலத்தில் அண்ணாமலை மீது Piyush Manush கொடுத்த வழக்கின் மீதும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அவர் இன்றளவும் சுட்டிக்காட்டுகிறார். தீவிர ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கல்யாணராமன் என்பவர், பெரியார் சிலையை உடைப்பேன் என தொடர்ந்து பேசியவர், குண்டர் சட்டத்தில் கைதானவர், அண்பாமலை செய்த ஊழல்கள், மோசடிகள் குறித்து ஆதாரங்களோடு 2 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தார். அவை இன்றளவும் பொதுவெளியில் உள்ளது. இவற்றின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அண்ணாமலையின் மதவெறி தூண்டும் பிரச்சார பயணத்திற்கு எவ்வுத தடையுமில்லாமல் அனுமதியளித்தது மட்டுமல்லாமல், அண்ணாமலைக்கான உதவிகளை திமுகவின் மூத்த பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு பலமாக தோழர்கள் பலர் முன்வைத்தார்கள். இன்று தவெகவை எதிர்கிறார்கள் என்பதற்காக , திராவிடத்தை இழிவு செய்த மாரிதாஸ், சாட்டை துரைமுருகன் போன்றோரின் வீடியோக்களை திமுக ஐ.டி விங் குடுவின் மூத்தவர்கள் பலர் ஆதரிக்கிறார்கள், பரப்புகிறார்கள், பகிர்கிறார்கள். இது என்னவகையான அரசியல்?
இதே ஆதரவை இங்குள்ள முற்போக்கு இயக்கங்களுக்கு திமுக கொடுத்ததில்லை. மே17 இயக்கம் இன்றளவும் அதிமுக-பாஜக ஆட்சிகாலத்து வழக்குகளை சுமக்கிறது. ரவுடிப்பட்டியலில் என்னுடைய பெயரை கடந்த 5 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் வைத்திருந்தது திமுக. என்மீதான அநீதியான சிறப்பு விசாரணைகளை தொடர்ந்து நடத்தியது. இதுபோல பல செயற்பாட்டாளர்கள் போராட்ட வழக்குகளைச் சுமக்கிறார்கள். ஆனால் அண்ணாமலைக்கு முழு பாதுகாப்பை கொடுக்கிறார்கள், ஆதரவு கொடுக்கிறார்கள்.
தன் கழுத்துக்கு கத்தி வைப்பது ராஜதந்திரம் ஆகாது. திமுகவின் எதிர்கால தலைவரை வீழ்த்தும் வலிமையை அண்ணாமலைக்கு ஊட்டி வளர்க்கிறது திமுக. இதுகுறித்து நாம் கவலைபப்டப்போவதில்லை. ஆனால், தமிழ்நாட்டின் சீரழிவு சக்தியான அண்ணாமலையை எதிர்த்து நின்று போராடுவது மிக முக்கியமானது. ஆர்.எஸ்.எஸ்சின் கள்ளக்குழந்தையை ஆதரிப்பது, பாம்புக்கு பால்வார்க்கும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானது. திமுக பைல்ஸ், அறிவாலயத்தை செங்கல்-செங்கல்லாக பிரிப்பேன் எனும் அண்ணாமலையின் கருத்துகளை திமுக ஏற்கிறதா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளையும் தலித்முரசுவும், காட்டாறு அதிதீவிர பெரிதாரிஸ்டும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? சாதியை ஒழிக்கும் வழியை அண்ணாமலை வாயிலாக நடைமுறைப்படுத்துகிறார்களா? திமுக் ஆட்சிகாலத்தின் போது கைகட்டி மெளனம் காத்து திராவிடத்தை காக்கிறோம் என்ற சான்றோர்கள் அண்ணாமலை குறித்து வாய்திறக்காமல் மெளனம் காத்தது எதனால் என தெரியாது. ஆனால் மே17 இயக்கம் பெரியாரிய-திராவிட அரசியலுக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தே வருகிறது, இனிமேலும் முன்னெடுக்கும். ஆளும்வர்க்கத்தின் தொங்குசதையல்ல பெரியாரியமும், திராவிடமும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மே17 இயக்கத்தினர்.
அண்ணாமலை மீதான வழக்குகளை திரும்பபெற்று, அவருக்கு சாதகமான நகர்வுகளைச் செய்யும் திமுகவின் முடிவுகளுக்கு மே17 இயக்கத்தின் வன்மையான கண்டனங்கள்.
ஒரு கட்சியோட தலைவர் மாதிரி எதுவும் பேசுறார் பாருங்க
தலித் மக்களை குறிப்பிட்ட வழியாக வரகூடாது கோவில்களில் வழிபடகூடாது என்று பொதுவெளியில் பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் இவரை எப்படி காவல்துறை @tnpoliceoffl அனுமதிக்கிறது…?
என் மகன் ஓரளவுதான் படிப்பான். அதனால் பத்தாம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ படிக்க வைத்தேன். அதிலும் பெயிலாகிவிட்டான். அதற்குப் பிறகு சும்மா ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ஒரு இடைத்தரகர் மூலம் அமைச்சரை ஒரு முறை சந்தித்தேன்.
"உங்க பையன் பொறியியல் படிக்கலன்னா என்ன, டிப்ளமோ கூட முடிக்கலன்னா என்ன? 23 லட்சம் நான் சொல்லுற அக்கவுண்ட்ல போடுங்க. உங்க பையனை போக்குவரத்து துறையில் Junior Engineer (JE, Civil) ஆக்குவது என்னோட பொறுப்பு" என்று உறுதிமொழி கொடுத்தார். அமைச்சரே சொல்கிறார் என்று நம்பி பணம் கொடுத்தேன். ஆனால் இன்று வரை வேலை மட்டும் வரவில்லை.
டிப்ளமோ கூட முடிக்காமல் கொத்தனார் வேலைக்குப் போக வேண்டிய என்னுடைய பையனை, "கவலைப்படாதீங்க சார்... நாளைக்கே சிவில் இன்ஜினியர் ஆக்கிடுறேன்" என்று சொன்ன அந்த நிமிடத்திலேயே எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனாலும் "அமைச்சர் சொல்றாரே" என்று நம்பிவிட்டேன். இப்போது பணமும் போய், வேலையும் போய், ஏமாந்து நிற்கிறேன் :
சீனிவாசன், கண்ணீர் மல்க பேட்டி
ஒரு சாதாரண குடும்பத்தில் டிப்ளமோ முடித்த மாணவர்களே வேலைக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறார்கள். ஆனால் டிப்ளமோ கூட முடிக்காதவரை, பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் ஆகாத வரை லட்சக்கணக்கில் பணம் வாங்கி Junior Engineer ஆக்கிவிடலாம் என்று யாராவது வாக்குறுதி கொடுத்திருந்தால், அது ஒரே ஒரு நபரின் ஏமாற்று சம்பவமா, அல்லது பெரிய அளவில் நடந்த வேலைவாய்ப்பு மோசடியா என்ற கேள்வி எழுகிறது.
இப்படி எத்தனை ஆயிரம் பேர் பணம் கொடுத்து ஏமாந்தார்கள்? எத்தனை ஆயிரம் பேர் பணம் கொடுத்து உண்மையிலேயே வேலையில் சேர்ந்தார்கள்? இது தனிப்பட்ட புகாரா, இல்லை பல ஆண்டுகளாக நடந்த அமைப்புசார்ந்த முறைகேடா? இந்தக் கேள்விகளுக்கான பதில் முழுமையான விசாரணையில்தான் தெரிய வரும்.
திமுக ஆட்சியில ஒரு மா நகராட்சி தூய்மை பணியாளர்கள் தனியார்மயமாதலை எதிர்த்து கிட்டத்தட்ட 100 நாட்கள் மேல் போராட வேண்டியது இருந்தது!! தவெக ஆட்சியில் மீண்டும் அதை நடைமுறை படுத்தும் நோக்கத்தை எதிர்த்து போராடிய பணியாளர்கள் மற்றும் இடது சாரிகளின் கோரிக்கையை ஏற்ற தவெக அரசுக்கு நன்றி!
Big news: FIR filed by DVAC against former Minister EV Velu and others in Arappor's Karur state highways complaint
அறப்போர் புகார் விவிரம்:
கரூரில் சாலை போடாமலேயே ரூ 4.68 கோடி வரை சங்கர் ஆனந்த் ஒப்பந்ததாரருக்கு மாநில நெடுஞ்சாலை துறையில் மார்ச் 2022இல் பணம் கொடுக்கப்பட்டு விட்டது.
சாலை போட்டது போல Measurement புத்தகமும் மோசடியாக மார்ச் 2022 இல் எழுதப்பட்டு விட்டது.
இந்த ஊழல் வெளிவந்த பிறகு, அப்போதைய அமைச்சர் எ வ வேலு பார்வைக்கும் போன பிறகு , FIR போட்டு நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையை குவித்து சாலையை ஏப்ரல் மாதம் போட முயற்சி செய்தார்கள். ஒப்பந்ததாரரை காப்பாற்ற செய்யப்பட்ட அப்பட்டமான செயல்.
அப்பட்டமாக ஆதாரங்களை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார்கள்.
கரூர் சாலை ஒப்பந்தங்களில் 2021-22 ஆம் ஆண்டில் போடப்பட்ட 170 கோடிகளில் 110 கோடி ஒப்பந்தம் சங்கர் ஆனந்த் ஒப்பந்ததாரருக்கு மட்டும் சென்றுள்ளது. 20 out of 31 tenders went to him alone!
அறப்போர் அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையில் 2022 ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொடுத்தது.
முரசொலியில் வன்மத்தை கக்கியுள்ள ப.திருமாவேலன் மார்க்சிஸ்டுகளுக்கு தத்துவப் பாடம் எடுக்க வேண்டாம்…! முடிந்தால் திமுகவுக்கு எடுக்கட்டும்!
‘புதிய அரசியல் சூழலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்’ என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் எழுதியதை தத்துவ தலைப்பு என்று கிண்டலடித்துள்ளார்.
8 மணி நேர வேலை நேரத்தை திமுக அரசாங்கம் திருத்திய போது ப.திருமாவேலன் எங்கிருந்தார்?
கலைஞர் தொலைக்காட்சியில் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் மார்க்சிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்தனர்.
வேலை நேரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும் செய்ய வைத்தனர். அதனால் தத்துவப் பாடம் எடுக்க வேண்டாம். முடிந்தால் இது எல்லாம் வர்க்கப் பிரச்சனை திமுக செய்தது தவறு என்று திமுகவிற்கு பாடம் எடுக்கட்டும். #CPIM #முரசொலி #DMK #TamilNadu #TNPolitics