விஜய் என்ன அவதாரமா?
சமூக வலைத்தளத்தில் களமாடும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணி என்ற கழக உடன்பிறப்பு ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அறிந்தும், விஜய்யை அவர் விமர்சித்து விட்டார் என்ற புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கையை மேற்கொண்டது ஈவு இரக்கம் துளியுமற்ற தவெக அரசின் காவல்துறை.
மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மாற்றுத்திறனாளி தங்கமணியை கொடூரமாக அலைக்கழித்திருக்கிறார்கள். அவருடைய நிலையைப் பார்த்து நீதிமன்றமே ஜாமீன் வழங்கி உள்ளது.
முதல்வர் பொறுப்பில் இருந்து கொண்டு விஜய் பேசிய பீப் வார்த்தைகளை விட மோசமாக இன்னொருவர் விமர்சனம் பண்ணி விட முடியுமா?
விமர்சனமே செய்யக்கூடாது என்கிற அளவுக்கு விஜய் என்ன அவதாரமா?
ஆணவத்தால் ஆடியவர்களின் கடைசி காலம் எப்படி இருந்தது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். ரொம்ப ஆடாதீங்க..
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...