பிரபல தெய்வீக ஓவியர் திரு. கொண்டையா ராஜு அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் ஶ்ரீ முருகனின் திருவுருவத்தை இப்படித்தான் வரைந்திருப்பார்கள்.
Artificial Intelligence மூலம் வரையப்பட்டது.
#கொண்டையா_ராஜு#முருகா
வரும் அக்டோபர் 15, 2026 அன்று, ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளன்று, கோயம்புத்தூரில் "Abdul Kalam Centre for Ethics and Politics" பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும். அடுத்த ஒரு ஆண்டுக்குள், 1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கும்.
வந்தேமாதரம் பாடல் எந்த மதத்தை குறிக்கின்றது... இதில் எங்கே மதவாதம் உள்ளது.. தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் இவருக்கு நண்பர்களா??? எதிர்த்து ஒரு குரல் கேட்பதில்லை.. தேசத்தை ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் அரசியல் செய்ய தெரியவில்லை.. வந்தே மாதரம் எங்கள் சுதந்திர முழக்கம்.. வந்தே மாதரம் என்றால் தாய் நாட்டுக்கு வணக்கம் என பொருள்.. இவரின் இந்த மதவாத பிரிவினை கருத்துக்கு இவரை கைது செய்ய வேண்டும்..
தன்னை பற்றிய செய்தியை தினகரன் பத்திரிக்கையில் கண்டு மகிழ்ந்த திருச்செந்தூர் அன்னதானத்தில் மாட்டுக்கொண்டு பிரபலமான நபர்
#DinakaranNews | #Thiruchendur
https://t.co/Kr3gQb1zkk
"எங்க அப்பா பாரம்பரிய திராவிட கட்சி.. ஆனா 2024க்கு அப்பறோம் வீட்டில் கலைஞர் போட்டாவை எடுத்துட்டு அண்ணாமலை போட்டாவை மாட்டினாரு.. அவரால நான் மாறி இருக்கிறேன்.."
"ஒரு மனிதனாக இந்த இடத்தில் நின்று பேச அண்ணாமலை தான் காரணம்.. அவரின் நேர்மையான பேச்சு, துணிவான செயல்.. அவருக்கு மகத்தான ஆதரவு இருக்கு.. 2031ல் எங்கள் எதிர்பார்ப்பு இதுதான்.." - '𝗪𝗲 𝗧𝗵𝗲 𝗟𝗲𝗮𝗱𝗲𝗿𝘀' அமைப்பின் முதல் மாநாட்டிற்கு வந்த உறுப்பினர்கள் பேட்டி
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
உள்ளே கட்டுக்கடங்காத கூட்டம்.. 'We The Leaders' அமைப்பின் மாநாட்டு நிகழ்வை வெளியே தரையில் அமர்ந்து எல்ஐடி திரையில் பார்த்து உற்சாகம்..
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
கருர் கோவில் சொத்துக்கள் விவகாரத்தில், @annamalai_k அவர்கள், @jothims அவர்கள் உள்ளிட்டோர், பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். அது கோவில் நிலங்கள் அல்ல என்றும், அதை பராமரித்த மனிதர்களுக்கு மன்னர்களால் வழங்கப்பட்ட இனாம் நிலங்கள் என்றும் ஒரு கருத்தை முன்வைத்து வருகிறார்கள். அவை ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.
அது தனியாருக்கு வழங்கப்பட்ட இலவச நிலங்கள் என்றால் இன்று வரை ஆவணங்களில் அது ஏன் கோவில் பெயரால் குறிப்பிடப்பட்டு வருகிறது என்கிற முக்கிய கேள்வி எழுகிறது. இதை சுயஅறிவும், நியாய உணர்வும் உள்ள அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும்.
எப்போதும் ஒரு கோவில் கட்டப்படுகிறது என்றால் மன்னர்கள் அதுசார்நத பராமரிப்பிற்காக சில ஏற்பாடுகளை செய்வார்கள். யாரெல்லாம் அந்த கோவிலை பராமரிக்கிறார்களோ அவர்கள் குடும்ப ஜீவனத்திற்கென்று ஒரு சில நிலங்கள் ஒதுக்கப்படுகிறது. அவர்கள் அந்த பராமரிப்பை மேற்கொள்ளும் வரை அந்த நிலத்தை உபயோகித்துக்கொள்ளலாம். அவர்கள் அந்த கோவில் பராமரிப்பு பணிகளை கைவிட்டுவிட்டால் அந்த நிலத்தை உரிமைகொள்ள தகுதி இல்லை. அடுத்து அந்த பராமரிப்பு பணிகளை யார் மேற்கொள்கிறார்களோ, அவர்களிடம் சம்பந்தப்பட்ட நிலம் ஒப்படைக்கப்படும். இதுவே அப்போதைய நடைமுறை!
உதாரணமாக, சில நாட்களுக்கு முன் ஆனைமங்கலம் செப்பேடுகளை பாரத பிரதமர் @narendramodi அவர்கள் நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து மீட்டு கொண்டுவந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அந்த ஆனைமங்கலம் சூடாமணியில் இருந்த அந்த ஆலயத்தை பராமரிப்பதற்காக ராஜராஜசோழனால் தரப்பட்டது. அதாவது அந்த ஊரின் வருமானம், சூடாமணி ஆலயத்தை பராமரிக்க பயன்படுத்தப்படவேண்டும். ஆனைமங்கலம் ஊரை அந்த கோவிலுக்காக எழுதிவைக்கிறான் சோழன்.
இப்படித்தான், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, கோவில் பராமரிப்பு, பூஜை, விளக்கு போன்ற பணிகள் நின்று விடக்கூடாது என்பதற்காக, கோவிலை பராமரிக்கும் குடும்பங்களுக்கு தரப்பட்டது. கோவிலை பராமரிக்கும் வரைதான் அந்த குடும்பங்கள் அந்த நிலத்தை பயன்படுத்தவேண்டும். பின்பு அந்த நிலம் கோவிலுக்குத்தான் சொந்தம்.
1963 இனாம் abolition act கொண்டுவரப்பட்டதும் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டதும் வெறும் கோவில் சொத்துக்களுக்காக அல்ல. அது ஜமீன்களால் வழங்கப்பட்ட இனாம்களுக்காகவே முக்கியமாக கொண்டுவரப்பட்டது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிலங்கள் மேல்வாரம் நிலங்கள் எத்தனை?! குடிவாரம் எத்தனை?! ரயத்துவாரி கோவில் பட்டா எத்தனை? ஆக்கிரமிப்பு நிலங்கள் எத்தனை? என்று முழுமையான எந்த விவரமும் அரசால் வெளியிடப்படவில்லை. ஆளுக்கொரு விதத்தில் அவரவர் கருத்தை பேசுகிறார்கள். ஆனால் பறிபோவது என்னவோ இந்து கோவில்களின் சொத்துக்கள்!
கருர் விவகாரத்தில் குத்தகைக்கு வழங்கப்பட்ட கோவில் நிலங்களும் அடங்கியுள்ளன. இந்த நிலங்களில் எவை எவை எந்த வகைப்பாட்டில் உள்ளன என்பது கூட அரசால் சர்வே செய்யப்படவில்லை. எதோ இவையெல்லாம் அரசு சொத்துக்களைப் போல, அரசு முடிவெடுக்கிறது. அதுவும் ஒரு நாளில்!
இஸ்லாமியர்களுக்கு சொந்தமான வக்ப் சொத்துக்களை இப்படி கையாளுவதை கனவில் கூட நினைக்கமுடியுமா இவர்களால்?!
ஆகவே, இப்போதும் மீண்டும் சொல்கிறேன். கோவில் நிலங்கள் உங்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல @RameshOffcl!, தமிழக அரசு @TVKVijayHQ இந்த முடிவை திரும்ப பெறவேண்டும்.
@blsanthosh@NainarBJP
பாரத பிரதமர் மோடிஜி பாராளுமன்ற வளாகத்திற்குள் செல்வதற்கு முன்பு இதை செய்த பிறகு தோல்வியை சந்திக்காமல் இன்று வரை வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார் அதேபோல் அண்ணாமலையாரும் வருகின்ற காலத்தில் வெற்றியை மட்டும் அடைவார் 🔥🔥🔥