#WATCH | Chennai | Tamil Nadu CM Vijay meets Indian Grandmaster R Praggnanandhaa and awards him Rs 50 lakh on behalf of the Sports Development Authority of Tamil Nadu after the chess player won the Norway Chess 2026 title.
(Source: TNDIPR)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
What made Shreyas Iyer’s catch so special was not just the athleticism, but the awareness behind it.
He had to judge the speed of the ball, the height, where the boundary rope was, how close he was to stepping on it, and get his jump absolutely perfect.
Then, while still in the air, he caught the ball and released it to a teammate before landing, all the while knowing exactly where that fielder was positioned.
To process all of that in a split second takes unbelievable awareness, timing, fitness, and composure.
@ShreyasIyer15 got everything spot on. One of the best catches I’ve ever seen live!
டியர் TVK விர்சுவல் வாரியர்ஸ்..
"எங்கோ அடித்தால் யாருக்கோ வலிக்கும்" என்பார்கள். இன்று தமிழகத்தில் நடப்பதும் அதுதான். திமுகவின் சட்டவிரோதச் செயல்களையும், மக்கள் விரோதப் போக்குகளையும் நாம் தகுந்த ஆதாரங்களோடு கேள்வி கேட்கும் போது, ஆளுங்கட்சியின் அடிமட்டம் முதல் மேலிடம் வரை அதிர்ந்து போகிறார்கள்.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்கள், உண்மையை மறைக்கப் பல்வேறு "அரசியல் தரகர்களை" ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அந்தத் தரகர்கள் இன்று களத்தில் குதித்துச் செய்யும் நகைச்சுவைகளைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம்தான் ஏற்படுகிறது.
திசைத்திருப்பும் நோக்கில் அவர்கள் எத்தனை அவதூறுகளைப் பரப்பினாலும், தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது.
ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பும் இந்த வாட்சப் யூனிவர்சிட்டி கோமாளிகளை மக்கள் நன்றாகவே அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். மக்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
யார் குரைத்தாலும், யார் நம்மை வம்புக்கு இழுத்தாலும் நாம் சலனப்படப் போவதில்லை. அவர்களின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு நாமும் அதே பாணியில் பதில் அளிப்பது நமது நேரத்தை வீணடிக்கும் செயல்.
"யானை வரும் பின்னே,
மணி ஓசை வரும் முன்னே" - தமிழக அரசியல் மாற்றத்திற்கான மணியோசை.. இல்லையில்லை விசிலோசை ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அது சிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் செய்ய வேண்டியது.. இதில் கவனம் சிதறவேண்டாம். வாடகை வாய்களின் வன்ம பொய்ப் பிரச்சாரங்களை ஒதுக்கித் தள்ளுங்கள். மக்கள் விரோத திமுக அரசின் தோல்விகளையும், மக்களின் வலிகளையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்வோம். களத்தில் இறங்கி மக்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.
எத்தனை தரகர்கள் பொய்பிரச்சாரங்களுடன் ஏவப்பட்டு குறுக்கே நின்றாலும், நீதியின் பாதையில் நமது பயணம் தொடரும். தமிழக மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நண்பா நண்பிஸ்.. பொய் பிரச்சார ஊடகச் செய்திகளை, வன்ம வாடகை வாய்களை, சகல கட்சி அரசியல் தரகர்களை புறந்தள்ளுங்கள். மக்களுக்கான பிரச்சினைகளை மட்டுமே கவனம் செலுத்தி களமாடுவோம்!.