மாரிதாஸ் கைதான காரணம். அவரே சொல்றார் கேளுங்க.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழில்கள் ஏன் ஆந்திராவுக்கு போனதுனு ஆதாரத்தோடு போட்டுடைத்ததால் கைது...
சொன்னதை கேட்டு வயிறெரியலனா நாம் தமிழர்களே இல்லை. 80000-100000 கோடி ரூபாய் ஏர்கிராஃப்ட் கம்பெனிய தூக்கிக் கொடுத்துட்டு ரீல்ஸ் போடறாங்க......
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
if a BE from PSG, MBA from IIM Lucknow, clearing UPSC Civil Services Examination in , joining the Indian Police Service and becoming a reputed officer is all considered as a failure, what will success be like?
There should be absolutely no bitterness between BJP & Annamalai…
It was Modi ji who identified, nurtured and gave Annamalai the big stage, not only in TN but across India…
Annamalai too did phenomenal work for the party to take the vote share from 3% to 18% (BJP as Head of NDA) within 3 years from 2021 to 2024…
It is my belief and Annamalai should have never left BJP and BJP should have never allowed Annamalai to leave. I have to say that BJP tried its best to retain but Annamalai seemed adamant to go and it was one of the most cordial departures. I also feel that Annamalai’s timing was wrong but I understand that he was suffocating for far too long, thanks to the toxic politics by EPS & gang within and outside TN BJP…
So no one is to blame. Not the BJP. Not Annamalai. These things happen in life when decisions are driven by circumstances which no one can help…
This bitterness and vengeful attitude towards Annamalai while a few top leaders in TN BJP are indulging in is jarring to say the least, and giving BJP a very bad name across Tamil Nadu, across party line and opponents are having a good laugh at their expense…
TN BJP is hell-bent on committing harakiri and centre is allowing them to go over the cliff. Apparently both, current TN BJP as well as the central party organisation, don’t want TN BJP to survive 😔
How else do you read this inexplicable attitude by TN BJP and inaction/indecision by centre?
@blsanthosh@NitinNabin@AmitShah
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
மதிப்பிற்குரிய அக்கா @DrTamilisai4BJP அவர்களுக்கு,
2014 - 2016: எங்கு பார்த்தாலும் மோடி அலை வீசியது, காரியகர்த்தாக்கள் கொண்டாடினர், தமிழகம் மாறத் தயாராக இருந்தது. ஆனால், உங்கள் தலைமையில் அந்த நல்வாய்ப்பு நழுவவிடப்பட்டது; அதற்கான அடித்தளம் அமைக்கப்படவில்லை.
2017 - 2019: ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பின், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது.
அதை முறியடிக்க ஒரு வலுவான மாநிலத் தலைவர் தேவைப்பட்ட போது, பிரதமர் மோடி அவர்களுக்கு எதிரான நச்சுப் பிரச்சாரம் காட்டுத்தீ போல் பரப்பப்பட்டது. அதை யாரும் கட்டுப்படுத்தவில்லை.
விளைவு: 2019 தேர்தலில் தமிழக பாஜக சரிவைச் சந்தித்தது.
அந்தப் பாதிப்பில் இருந்து பாஜக மீண்டு வர முழுமையாக 5 ஆண்டுகள் தேவைப்பட்டது!
I took some time to review the White Paper published by the TVK Govt on the state of Tamil Nadu's finances.
No surprises, as most of it was already known. In many ways, it serves as a post-mortem of the State’s fiscal mismanagement over the past five years, laying bare the extent of the deterioration and benchmarking Tamil Nadu’s key financial indicators against those of other similarly industrialised states.
-₹10 Lakh crore outstanding debt & per capita outstanding debt at ₹1,28,934
-Interest payments at 22.8% of total revenue receipts.
-State’s own tax revenue (SoTR) to GSDP ratio fell from 5.93% in 2021-22 to 5.45% in 2025-26.
-Major State PSUs in power, transport, and civil supplies hold a combined debt of ₹3.18 lakh crore.
-Revenue loss due to systemic corruption, suppressing registration revenues by undervaluing real estate prices and many more.
The shrinking working-age population in TN by 2031 leaves the state with very little time to recover and strengthen its revenue base. This is a serious issue!
The TVK Govt, therefore, has very little time at its disposal and must not treat this White Paper as an excuse for non-performance; instead, it should explore ways to repair the damage done. I propose that the government form a “functional” consultation group that includes not only academicians and economists but also experts from all fronts to find constructive ways to mitigate the crisis at hand.
தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை (White Paper) படித்துப் பார்த்தேன்.
இந்த வெள்ளை அறிக்கையில், பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு ஆவணமாகவே இது உள்ளது. மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகளை, பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகக் கூறியிருக்கிறது.
• தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது; சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது.
• தமிழகத்தின் மொத்த வருவாயில், 22.8%, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.
• தமிழகத்தின் சொந்த வரி வருவாய் (SoTR) மற்றும் GSDP விகிதம், 2021-22ல் 5.93% இருந்தது; 2025-26ல் அது 5.45% ஆக குறைந்துள்ளது.
• மின்சாரம், போக்குவரத்து மற்றும் நுகர்பொருள் விநியோகம் தொடர்பான முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உள்ளது.
• நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால், பத்திரப் பதிவுத்துறை வருவாய் இழப்பு மற்றும் அமைப்பு சார்ந்த ஊழலால் ஏற்பட்ட பெரும் வருவாய் இழப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், மாநிலத்தின் வருவாய் அடித்தளத்தை வலுப்படுத்தவும், நிதிநிலையை சீர்செய்யவும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. இது மிகவும் கவலைக்கிடமான விஷயமாகும்.
எனவே, தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டி, செயல்படாமல் இருக்கக் கூடாது. இந்த பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, பொருளாதார நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, தொழில், வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வல்லுநர்களையும் உள்ளடக்கிய,ஒரு “செயல்திறன் மிக்க” ஆலோசனைக் குழுவை அமைத்து, தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.