ஒரு மாநிலத்தோ மிகப் பெரிய வருவாய்
மாநில GST (SGST)
பெட்ரோல், டீசல் மீதான VAT
மதுபானம் மீதான Excise Duty மற்றும் VAT (TASMAC தொடர்பான வருவாய்)
முத்திரைத் தீர்வை (Stamp Duty)
சொத்து பதிவு கட்டணம் (Registration Fees)
வாகன வரி (Road Tax / Motor Vehicle Tax)
மின்சார வரிகள்.. இது போகத்தான் மத்திய அரசு பகிர்மானம் , நிதித்திட்ட உதவிகள் எல்லாம்..
இதுல டாஸ்மாக் வழியா கிடைக்குரது 20-30 % வருவாய்.. அத தனியார்கிட்ட கொடுத்துடலாம்ன்னு சொல்ர அளவுக்கு தான் இருக்கு நிதித்துறை அறிவு.. அப்பிடி கொடுத்துட்டா அந்த 30% வருவாய எது வழியா எடுப்பாங்க..
அரசின் நேரடி கட்டுப்பாடு குறையும் இப்போது மொத்த விற்பனையும் சில்லறை விற்பனையும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தனியார்மயமாக்கினால் கடைகளின் எண்ணிக்கை, விற்பனை முறைகள் போன்றவற்றில் அரசின் நேரடி பிடி குறையும்.
வருவாய் கசிவு அபாயம் தனியார் கடைகள் விற்பனையை குறைத்து கணக்குக் காட்டுவது, வரி ஏய்ப்பு செய்வது போன்ற அபாயங்கள் அதிகரிக்கும்.. . இதுவே 2003-க்கு முன் தனியார் முறையில் இருந்தபோது அரசுகள் கூறிய முக்கிய காரணங்களில் ஒன்று.
தனியார் கார்டெல்கள் உருவாகும்.. சிண்டிக்கேட் மாதிரி பெரிய வணிகக் குழுக்கள் சந்தையை கட்டுப்படுத்தி விலை, பிராண்டுகள் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும்...
சமூக பாதிப்புகள் தனியார் நிறுவனங்கள் லாபத்தை நோக்கமாகக் கொண்டிருப்பதால் அதிக விளம்பரம், அதிக விற்பனை முயற்சிகள் மூலம் மதுபான நுகர்வு அதிகரிக்கும்...