களத்தில் ஸ்டாலினின் மகளிர் படை!
செல்லும் இடமெல்லாம் தாய்மார்களின் முகத்தில் மலரும் புன்னகை, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தின் அடையாளம்! ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒளியேற்றும் திட்டங்களுடன் தொடர்கிறது திராவிட மாடல் நல்லாட்சி!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,
5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும்,
பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி,
மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் -
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!
#வெல்வோம்_ஒன்றாக!
#ஒரே_தலைவன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் திராவிட நாயகரின் தலைமையில் #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்நாட்டில் சமூகநீதி ஆட்சியைச் சிறப்பாக நடத்திவரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் செயல்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 13 இலட்சம் பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில் மேலும் 17 இலட்சம் மகளிரை கூடுதலாகச் சேர்த்து இன்று விரிவாக்கம் செய்கிறார்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?
நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின.
உடனே, "சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்.
நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்?
கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா?
மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா?
உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!
கழகத்தின் முப்பெரும் விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கையால் முதலமைச்சர் ஸ்டாலின் விருது பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல் காலம் தாழ்த்தாமல் திரு. @Udhaystalin அவர்களை துணை முதல்வராக்க வேண்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் அடுத்தது யார் கை காட்ட வேண்டும்.
கொற்றமே சாய்ந்து
குடையைக் கவிழ்த்தாலும்
கொள்கையே
உயிர் என்போன்
வேருக்குச் சமம் - தலைவர் கலைஞர் 🖤❤️
களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வின் போது
#கலைஞர்100
திராவிட இயக்கத்தின் தலைமைச் செயலகமாக அரை நூற்றாண்டுக்கும் மேல் தமிழ்நாட்டு அரசியலின் திசையைத் தீர்மானித்த கோபாலபுரம் இல்லத்தில் நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அவரது பிறந்தநாளான இன்று கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களோடு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
தலைவர்களுக்கெல்லாம் தலைவராக, முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக முன்னின்று ‘ஓய்வறியாச் சூரியனாய்’ அவர் படைத்த சாதனைகள் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்!
#கலைஞர்100
பிறந்தார் - நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில்,
தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்!
தமிழினத்தின் எழுச்சிக்காக உழைத்தார்!
வரலாற்றைத் தன்னைச் சுற்றிச் சுழலவிட்டார்!
முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேருழைப்பில் தமிழ்நாடு வளம் பெற்றது! தமிழினம் நலம் பெற்றது!
இந்த நூறாண்டுகளில் நிகழ்ந்துள்ள தமிழ்ப் புரட்சி - தமிழினத்தின் எழுச்சி - தமிழ்நாட்டின் வளர்ச்சி என எங்கும் எதிலும் தலைவர் கலைஞரின் முத்திரை பதிந்துள்ளது. அவரது புகழை நாளும் சொல்வது, நாளை நாம் பெற வேண்டிய வெற்றிகளுக்குப் பாதை அமைப்பதாகும்!
கலைஞர்: வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல; அந்த வானத்தை ஆளும் சூரியன்!
#கலைஞர்100
குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் #LabourDay-இல் வாழ்த்திப் போற்றுவோம்!
மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்!
#MayDay
"மக்களாட்சியில் வாக்கு என்பது வலிமைமிக்க ஆயுதம் . அதை ஏந்தி பாசிச சக்திகளை வீழ்த்துவோம் "
இன்று எனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன் .அனைவரும் வாக்களியுங்கள் .
வாக்கு உரிமை நமது
தேசத்தின் பெருமை