குறிப்பு:
இந்த பதிவு MGR , VIJAY பற்றியது அல்ல….😊
இயற்கை ஒருவனை
ஏதோ ஒரு தலைவனாக்கலாம்
என நினைத்தால்…
சுற்றி உள்ள சக்திகள் எல்லாம்
அவனை தேவை இல்லாத
இடையுறு செய்து மகா மக்கள் தலைவனாக்காமல்
விட மாட்டார்கள் போலிருக்கிறது🧐
வரலாறு என்னும்
திருட்டு பயலின்
விளையாட்டே விளையாட்டு…
வாழ்க வரலாறு…
வளரட்டும் வரலாறு..
தொடரட்டும் வரலாறு…
💐💥🙏🏻
நாம் புரிந்து கொள்ள வேண்டிய
இரகசிய குறிப்பு யாதெனில்;
வரலாற்றை படிப்பவர்களில்
பெரும்பாலானவர்கள்..,
வரலாற்றை படிக்கிறார்கள்
ஆனால்,
அதிலிருந்து பாடம் கற்று கொள்வதே இல்லை😁
மேலும்,
வரலாறு திரும்பி கொண்டே தான் இருக்கும் என்பதே உண்மை🤔
#JanaNayagan
Morattu First Half 😭🔥🔥🔥🔥 , Athum Emotional Scenes lam 🥹🥹🥹 romba connect Achu
Interval block lam 🗿🗿🗿 Chad D na ✅ , inime everything into 2nd half let's see
#IdliKadai@dhanushkraja
இந்த Situation யார் என்ன சொன்னாலும் எத்தனை வதந்தி அவதூறுகளை அள்ளி அண்ணனின் மீது வீசினாலும் கூடவே அரணாக நிற்போம்...
நீங்க தைரியமா இருங்க அண்ணா.. கேவலமான பிண அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க... @TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.
நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.