சட்டமன்றத்தில் நடக்காத ஒரு விஷயத்தை உண்மை சம்பவம் போல பத்திரிகையாளர்களிடம் விஷத்தை கக்கியுள்ளார் தவெகவின் நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா.
அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன் உடன் இருந்த திருநாவுக்கரசர் அப்படி எந்த ஒரு சம்பவமும் சட்டமன்றத்தில் நடக்கவில்லை என்று தெளிவாக சொல்லியுள்ளார் மங்குனி அமைச்சரே!
#TVKLies
முன்னாள் அமைச்சர் - கழக விவசாயத் தொழிலாளர் அணித் தலைவர் திரு. உ. மதிவாணன் அவர்களது இல்ல மணவிழாவில் பங்கேற்று மணமக்கள் மதி.கதிரவன் - மௌனிகா ஆகியோரின் இல்லறம் மகிழ்ச்சி நிரம்பிய நல்லறமாக விளங்கிட வாழ்த்தினோம்!
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!
இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி #VPSingh அவர்கள் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.
தி.மு.க.வைப் போலவே, 'ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்' என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார்.
நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்!
மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தின் மீது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் உரை வருமாறு:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, அமைச்சர் பெருமக்களே, சட்டமன்ற உறுப்பினர்களே!
நம் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க, முயற்சிக்கின்ற மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதுதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.
அனுமதிக்கக் கூடாது
காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. காவிரி நடுவர் மன்றம், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட அனைத்திற்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கழக அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்தான் முழுகாரணம். அதை, இந்த அவையில் இருக்கின்ற மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் நடத்தித்தான், நாம் காவிரியின் மீதான நம் உரிமையைப் போராடிப் பெற்றிருக்கிறோம். ஆனால், அதனைப் பறிக்கும் வகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த முயற்சியை அவர்கள் எடுத்தபோது, அந்தச் சமயத்தில், எங்கள் கூட்டணியில் இருந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சி செய்தபோதிலும், அதனைப் பற்றிக் கவலைப்படாமல், மேகதாது அணைத் திட்டத்தை எங்களுடைய தலைவர், அப்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இன்றைக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக இந்த தீர்மானத்தை, இன்றைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, நாங்கள் மனதார வரவேற்கிறோம். மேகதாது அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசிற்கு எதிராக, எங்கள் தலைவர், எங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகள் சிலவற்றை ஆளுங்கட்சிக்கும், முதலமைச்சருக்கும், அவைக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தீர்மானம் நிறைவேற்றினோம்!
2021-ஆம் ஆண்டு மே மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே, அதாவது ஜூன் 17, 2021 அன்று `மேகதாது அணை கட்ட அனுமதியளிக்கக் கூடாது’ என்று எங்கள் தலைவர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினார். பிறகு, அதே கருத்தை வலியுறுத்தி, ஜூலை மாதத்தில், ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சருக்கும் எங்கள் தலைவர் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள். இதனையடுத்து, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, `மேகதாது அணையை எந்தக் காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது’ என்ற தீர்மானத்தையும் நாங்கள் நிறைவேற்றினோம். ஜூலை மாதத்தில் அதையே ஒன்றிய அமைச்சரிடமும் நேரில் வலியுறுத்தினோம்.
கடந்த 2022-2023 நிதியாண்டில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த விஷயம் தெரிந்ததும், இதே அவையில் அதைக் கண்டித்து, அரசின் தனித் தீர்மானத்தையும் எங்கள் அரசு அன்று நிறைவேற்றியது. அன்று “தமிழ்நாட்டின் உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்” என்று எங்கள் தலைவர் பேசினார்கள்.
திருப்பி அனுப்பப்பட்டது
மேகதாது அணை கட்டுவது குறித்தான விரிவான திட்ட அறிக்கையை விவாதிக்க வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் வைத்த அஜெண்டாவை நீக்க, எங்கள் தலைவர் தலைமையிலான அரசு அன்றைக்குக் கடுமையாக வலியுறுத்தியது. இதற்காக, அன்றைய முதலமைச்சரான எங்கள் தலைவர் அவர்கள் ஜூலை மாதம், 2022-ஆம் ஆண்டு பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதினார். அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சிக் குழுவினர், ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள். இப்படி, நமது தொடர் எதிர்ப்பின் காரணமாக, மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report), பிப்ரவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும், கழக அரசின் எதிர்ப்பால், மேகதாது அணையின் நிபந்தனை விவரங்களை (Terms of Reference-ஐ) தன்னுடைய `திட்டப் பட்டியலில்’ இருந்து, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் நீக்கியது. அதுமட்டுமில்லாமல், 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் எங்கள் அரசின் நீர்வளத்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தில், `இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகத் தீர்வு எட்டப்பட்ட பிறகுதான், Terms of Reference அனுமதி பற்றி ஆலோசிக்கப்படும்’ என்று சொல்லியிருந்தார்.
கழக அரசும், எங்கள் தலைவரும்
மேகதாது அணை தொடர்பாக, கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை’ (Detailed Project Report) சமர்ப்பிக்கவில்லை என்பதுதான் எங்கள் கழக அரசு இருந்த வரையிலான நிலை ஆகும். திராவிட முன்னேற்றக் கழக அரசும், எங்கள் தலைவரும் தைரியமாகத் தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்ததால்தான் இது சாத்தியமானது என்பதை இந்த மாமன்றத்தில் மீண்டும் பதியவைக்க விரும்புகிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மத்திய நீர்வள ஆணையம் (Central Water Commission), 22-11-2018 தேதியிட்ட கடிதத்தின் மூலமாகக் கர்நாடக அரசுக்குச் சில முக்கியமான நிபந்தனைகளைத் தெரிவித்திருந்தது. அதில் முதலாவதாக, மேகதாது அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் நிபந்தனையற்ற அனுமதி எதுவும் கொடுக்கவில்லை. இரண்டாவதாக, அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரிப்பதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு தெரிவிக்கும் பல்வேறு ஆட்சேபணைகளை அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். மூன்றாவதாக, மத்திய மின்வாரிய ஆணையத்திடமும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருக்கின்ற மத்திய நீர்வள ஆணையப் பிரிவிடமும் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
ஒரு புதிய விவாதம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, `காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய’த்தின் (Cauvery Water Management Authority) முன் அனுமதியையும் பெற வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். எனவே, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு இவற்றைல்லாம் ஒன்றிய அரசிடம் உறுதியாக எடுத்துப் பேசி, காவிரியில் நம் தமிழ்நாட்டின் உரிமையை நாம் அனைவரும் சேர்ந்து நிலைநாட்ட வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயத்தை, இங்கு நான் பதியவைக்க விரும்புகிறேன். மேகதாது பிரச்சினை தொடர்பாக, கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகு, 04.03.2026 அன்று அன்றைய முதலமைச்சரான எங்கள் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி, தமிழ்நாடு நீர்வளத்துறை அரசுச் செயலாளர் ஒன்றிய ஜல் சக்தி துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், `கர்நாடக மாநிலத்தின் மேகதாது அணை கட்டும் பிரச்சினை ஒரு புதிய விவாதம் (New Dispute) என்பதால், நதிநீர் தாவா சட்டம்-1956-ன் படி (The Inter-State River Water Disputes Act, 1956) அடிப்படையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்று ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம். ஆகவே, இந்த அரசு இப்போது கொண்டு வந்திருக்கின்ற தீர்மானத்தில், `மேகதாது அணை கட்டுவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, மார்ச் 4, 2026 அன்று எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம்-1956, பிரிவு 4-ன் கீழ், அந்த அடிப்படையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது’ என்கிற திருத்தத்தைச் சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தடுத்து நிறுத்துவோம்
கர்நாடகா மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க, சட்டரீதியாகவும், பிரதமர் மூலமாகவும் இந்த அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக துணைநிற்கும். மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம் என்று கூறி, இந்தத் தீர்மானத்துக்கு எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதே மாதிரி இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்காததால் டெல்டா விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து நடக்கவிருக்கின்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் (Cauvery Water Management Authority), இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நம் தரப்பு நியாயங்களையெல்லாம் எடுத்து வைத்து, நமக்குரிய நீரை விரைவாகப் பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக இந்த அவையில் கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக, எங்கள் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு முக்கியமான வேண்டுகோளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வைக்க விரும்புகிறேன்.
மிக முக்கியமான தீர்மானம்
இன்று நாம் நிறைவேற்றுகின்ற இந்தத் தீர்மானம் மிக முக்கியமான தீர்மானம். இந்த தீர்மானத்தைக் கடிதம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்குப் பதிலாக, தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, ஒன்றிய அரசிடம் கொடுத்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயல்பட இந்த அரசும் முன்வர வேண்டும் என்று எங்கள் தலைவரின் சார்பில் கேட்டுக்கொண்டு, தீர்மானத்தை முழுமனதாக ஆதரித்து அமைகிறேன்.
நன்றி, வணக்கம்.
#TNAssembly #MekedatuDam #Cauvery
மாற்று கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்…!
தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திரு.குழந்தை பாண்டி, மாவட்ட செயலாளர் வெயிலாட்சி, மாநகர தலைவர் சக்தி செல்வன், மாவட்ட துணை செயலாளர் அருண்குமார், மாநகர துணை செயலாளர்கள் முருகேசன், உமையலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கமர்தீன் பாய், செயற்குழு உறுப்பினர் சத்யா மற்றும் கட்சியினர் சுமார் 40 பேர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
நேத்து பெய்த மழையில் இன்னைக்கு முளைத்த விஷக்காளான் நீங்க!
மக்கள் போராட்டங்களுக்காக ஒரு நாள் கூட வெயிலில் நின்று பழகாத, வியர்வையைப் பார்த்தாலே 'அய்யய்யோ' எனப் பதறும் ஒருவர் திடீரென்று 'அரசியல்' வேஷம் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்.
சொந்தமாக 118 சீட்டுகளைக் கூட வெல்ல வக்கில்லாமல், அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, ஆட்சியைப் பிடிக்கக் கூட்டணி கட்சிகளிடம் பிச்சை எடுத்த சோபாவின் புகழ் "குதிரை பேர சி.எம்" தானே நீங்க! உங்களுக்கு எங்களைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?
அட்மினிஸ்ட்ரேஷனில் 'அ' கூடத் தெரியாத, எந்த அடிப்படை அரசியல் அறிவும் இல்லாத ஒரு தற்குறியின் கையில் அதிகாரம் சிக்கியிருப்பதால்தான், இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து மாநிலம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது!
அரசியலமைப்பு நெறிமுறைகளோ, மாநில உரிமையோ கொஞ்சமாவது தெரிந்திருக்கிறதா உங்களுக்கு?
முதலமைச்சராகப் பதவியேற்கும் முதல் நாளிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 'வந்தே மாதரத்தை' முதலில் வாசிக்க விட்டு, கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்த சுயமரியாதையற்ற சி.எம் தானே நீங்க!
அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் இதே அவமானம் இரண்டு முறை தொடர்ந்ததே, அதைத் தட்டிக்கேட்கத் துப்பில்லாத தொடைநடுங்கி சி.எம் தானே நீங்க?
வழக்கம்போல மைக்கைப் பிடித்து ஆடியோ லான்ச் மாதிரி கத்த வந்தப்போ, ஆளுநர் "ஜஸ்ட் வெயிட்" என்று முகத்திலேயே அடித்த மாதிரி சொன்னபோது, ரோஷமில்லாமல் வாயடைத்து நின்ற நபர் தானே நீங்க!
மாநில மானத்தை ஆளுநரிடம் தான் அடகு வைத்தீர்கள் என்றால், மாநில உரிமையைக் கர்நாடகாவிடம் பறிகொடுத்து நிற்கிறீர்கள்!
"தமிழ்நாட்டில் இப்போது உட்கார்ந்திருப்பது ஒரு டம்மி சி.எம்; அவரால் எங்களை எதுவும் எதிர்க்க முடியாது, நாங்க மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்" என்று கர்நாடகா துள்ளிக் குதித்துக் கொக்கரிக்கிறது.
தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரி உரிமையைக் காக்கத் துப்பில்லாமல், அண்டை மாநிலத்துக்காரன் முகத்தில் கரியைப் பூசும்போதும் திருப்பிப் பேசத் தைரியமில்லாத கையாலாகாத சி.எம் நீங்க!
மாலை ஆறு மணிக்கு மேல் கேரவனுக்குள்ளும் ஏசி ரூம்குள்ளும் ஒளியும் உங்களுக்கு மக்களின் வலி என்ன தெரியும்? புயல், வெள்ளம் என்று மக்கள் தவித்தபோதோ, உரிமைக்காகப் போராடியபோதோ ஒரு நாளாகிலும் களத்திற்கு வந்தீர்களா?
சொகுசு வாழ்க்கையில் காலத்தைக் கழித்துவிட்டு, திடீரென்று 'ரட்சகர்' மாதிரி வரும் இந்த 'டூரிஸ்ட் அரசியல்வாதி'க்கு மற்றவர்களைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?
சொந்தப் பொறுப்புகளையே தட்டிக்கழிக்கும் ஒரு சோம்பேறியால் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற முடியுமா வெட்டி சி.எம்?
தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற குறைந்தபட்ச சட்ட விதிகளோ, அறிவோ கூட இல்லாத மக்கு சி.எம் நீங்க! கொள்கையை வைத்து ஓட்டுக் கேட்க வக்கில்லாமல், பிஞ்சுக் குழந்தைகளைத் தூண்டிவிட்ட உங்களது அரசியல் வறுமையும் கோழைத்தனமும் தான் உங்களது அக்மார்க் 'நாறசக்தி' அரசியல்!
ஆட்சியைப் பிடிப்பதற்காக நீங்க செய்த குதிரை பேர அரசியலையும், உங்களது காப்பி-பேஸ்ட் அரசியலையும் மூடி மறைக்க எங்களை வம்புக்கு இழுக்காதீங்க!
இந்தச் சோம்பேறித்தனமான சொகுசு அரசியலையும், மாநில உரிமையை அடகு வைக்கும் கோழைத்தனத்தையும் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால், மக்கள் உங்களை அரசியலை விட்டே அடித்து விரட்டுவார்கள்.
அள்ளிவிட்ட வாக்குறுதிகளை உருப்படியாகச் செய்யப் பாருங்கள்; இல்லையென்றால் உங்களது வக்கற்ற, திறமையற்ற அரசு வெகு விரைவில் மக்களால் தூக்கியெறியப்படும்!
#TVKFails