* இரவு நேரங்களில் மாநாடு, பிரச்சாரம் ஆகியவற்றை செய்தால்.. இப்படியான சம்பவம் நடக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்துதான் இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களையும் மாலை ஆறு மணிக்கு முன்பே முடித்துக்கொண்டார். Indoor நிகழ்ச்சிகள் உட்பட.
* வார நாட்களில் பிரச்சாரம் செய்தால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படும். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால்தான் சனி, ஞாயிறுகளில் பிரச்சார தேதிகளை அறிவித்தார்.
* தற்போது கரூரில்..ஒரே ஒருமுறை செய்த இரவுநேர பிரச்சாரம்.. பெரும் துயரில் கொண்டுவந்து நிறுத்தி விட்டது.
* சென்றமுறை... ஒரு ஊரில் பிரச்சாரம் செய்யுமிடத்திற்கு போய்ச்சேர மிகவும் தாமதம் ஆனதால்.. அந்நிகழ்வை ரத்து செய்தார்.
* இம்முறையும் அதேபோல ரத்து செய்துவிட்டு.. வேறொரு நாளில்.. பகல் நேரத்தில் கரூர் பிரச்சாரத்திற்கு வந்திருக்கலாம்.
* ஆனால்.. மீண்டும் பிரச்சாரத்தை ரத்து செய்தால்... காலை முதல் இரவு 7 மணிவரை தன்னைக்காண காத்திருக்கும் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகி விடுவார்கள் என்பதால்.. கரூர் சென்று இரவு 7.20 மணிக்கு பேசியுள்ளார்.
* இத்தனைமுறை அலர்ட் ஆக இருந்த விஜய்... இம்முறை அந்த எச்சரிக்கை உணர்வை மிஸ் செய்து விட்டார்.
* எனது வாகனத்தை பின்தொடர வேண்டாம். கண்ட இடங்களில் ஏறி நிற்க வேண்டாம் என பலமுறை சொல்லியும்.. பல ரசிகர்கள் கேட்கவில்லை. அத்தவறுகளை தொடர்ந்து செய்கிறார்கள்.
* உங்கள் தலைவர் சொல்வதை நீங்களே கேட்காவிட்டால்.. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்களும் பொறுப்பு.
* தவெக கூட்டங்களுக்கு கர்ப்பிணி பெண்கள் வரவேண்டாம். கைக்குழந்தைகளை அழைத்து வரவேண்டாம். டிவி அல்லது யூட்யூப் நேரலையில் வீட்டிலிருந்து பாருங்கள் என ஒவ்வொரு முறையும் தவெக சார்பில் வேண்டுகோள் விடுத்தும்... அதை பொருட்படுத்தாமல் வருபவர்களை என்ன சொல்வது?
* உங்களுக்கு பிடித்த நடிகரை காணும் ஆவலில்.. பச்சிளம் குழந்தைகளையும் அழைத்து சென்று... அக்குழந்தைகளை பறிகொடுத்தது... உங்கள் தவறில்லையா?