பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை (ம) கட்டுப்பாட்டு மையத்தில் புயல் - கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் புகார் விவரங்களை தொலைபேசியில் கேட்டறிந்தார்!
#DyCMUdhay
#DitwahCyclone
எம் இனத்தின் தலைவரின் வாழ்த்துகளையும் சேர்த்து
எம் இளந்தலைவரிடம் நேரில் பிறந்தநாள் வாழ்த்து பெற்று அக மகிழ்ந்தேன்✨✨
தாய்மொழியாம் அன்னைத் தமிழ் மொழி...
தாய்நிலமாம் தமிழ்நாடு...
சமத்துவ தத்துவமாம் திராவிடம்...
சுயமரியாதை, மாநில சுயாட்சி காக்கும்...
தி.மு.கழகத்தின் பெரும் லட்சிய பயணத்தில்..
சிறுதுரும்பாய் அரசியல் பணிசெய்யப் பணித்த எம் இனத்தின் தலைவர் @mkstalin அவர்களின் கட்டளையை காப்பதே
எம் அகவை தினத்தின் உறுதி..!
#தமிழ்வெல்லும்
புனலூரில் ஓணம் திருநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது 500 நபர்களுக்கு ஓணம் பண்டிகை தொகுப்பு வழங்கினோம், ஆட்டோ ஓட்டுனர்கள் 100 நபர்களுக்கு காக்கிச் சட்டையும் கழக வேட்டியும் வழங்கினோம்..
#dmkkerala
தேர்தல் ஆணையத்தை, ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள். 65 லட்சம் பீகார் மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, ஜனநாயகப் படுகொலை! சொந்த மண்ணில், பிறந்து வாழ்ந்த மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதைவிட, பயங்கரவாதம் இருக்க முடியுமா?
பீகாரில் நடைபெறும் வாக்காளர் உரிமை யாத்திரையில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#VoteAdhikarYatra
உங்களை எல்லாம் பார்ப்பதற்காகத்தான் இரண்டாயிரம் கிலோ மீட்டர் கடந்து நான் இங்கே வந்திருக்கிறேன்.
பீகார் என்றாலே, மரியாதைக்குரிய லாலு பிரசாத் யாதவ் அவர்கள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார்.
சமூகநீதி - மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளம் அவர்!
தலைவர் கலைஞர் அவர்களும் - லாலு அவர்களும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள்.
எத்தனையோ வழக்குகள் - மிரட்டல்கள் வந்தாலும், பா.ஜ.க.விற்கு பயப்படாமல் அரசியல் செய்த காரணத்தினால், இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார், லாலு பிரசாத் அவர்கள்.
அவரின் வழித்தடத்தில், அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் தேஜஸ்வீ அவர்கள்.
கடந்த ஒரு மாத காலமாக, இந்தியாவே பீகாரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் பீகார் மக்களின் பலம்! ராகுல் காந்தியின் பலம்! தேஜஸ்வீயின் பலம்!
இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கான போர்க்குரலை பீகார் எழுப்பியிருக்கிறது. இதுதான் வரலாறு!
‘லோக்நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள், ஜனநாயகத்தின் குரலை, சோசலிசத்தின் குரலை எதிரொலித்தார். அதற்காக மக்கள் சக்தியை அவர் திரட்டினார்.
அந்தப் பணியைத்தான், அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களும், தம்பி தேஜஸ்வீ அவர்களும் இங்கு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் செல்லும் இடம் எல்லாம், மக்கள் - கடல் போல திரண்டு வருகிறார்கள்.
அதிலும், தேஜஸ்வீ அவர்கள் கார் ஓட்ட, அதில் ராகுல் காந்தி பயணம் செய்த காட்சியைப் பார்த்தேன். ஏன், மோட்டார் சைக்கிள் பயணத்தையும் நான் பார்த்தேன்.
உங்களின் நட்பு, அரசியல் நட்பு மட்டும் கிடையாது; இரண்டு உடன்பிறப்புகளின் நட்பு!
ஜனநாயகத்தை காக்க - மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள்.
பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தர இருப்பதே இந்த நட்புதான்.
பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கப் போகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது!
அதனால்தான் இந்த வெற்றியைத் தடுக்க பார்க்கிறார்கள்.
நியாயமாக - முறைப்படி வாக்குப்பதிவு நடந்தால், பா.ஜ.க. கூட்டணி தோற்றுவிடும் என்று, மக்களான உங்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தை, ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள்.
65 லட்சம் பீகார் மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, ஜனநாயகப் படுகொலை!
சொந்த மண்ணில், பிறந்து வாழ்ந்த மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதைவிட, பயங்கரவாதம் இருக்க முடியுமா?
அனைத்து அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும், அவர்களை அட்ரஸ் இல்லாதவர்கள் போன்று ஆக்குவது அழித்தொழிப்புதானே?
சகோதரர்கள் ராகுலும் - தேஜஸ்வீயும் பெற இருக்கும் வெற்றியை தடுக்க முடியாத பா.ஜ.க., கொல்லைப்புற வழியாக இந்த வேலையைப் பார்க்கிறது.
இதற்கு எதிராக என்னுடைய சகோதரர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தை வாழ்த்துவதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.
அதிலும் குறிப்பாக, ராகுல் காந்தி அவர்கள், தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடிகளையும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தால், முறையான ஒரு பதிலைக்கூட சொல்ல முடியவில்லை!
ஆனால், ராகுல் காந்தி அவர்கள் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சொல்கிறார்.
இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா?
ராகுல் காந்தியின் வார்த்தைகளிலும் - கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது!
ராகுல் காந்தி அவர்களைப் பொறுத்தவரைக்கும், சும்மா அரசியலுக்காக - மேடைகளுக்காக பேசுபவர் கிடையாது. தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் - மிகுந்த கவனத்துடன் பேசுபவர் அவர்.
இப்போது ஏன் பா.ஜ.க. அவர் மேல் பாய்கிறார்கள் என்றால், பா.ஜ.க. - தேர்தலை எப்படி கேலிக்கூத்தாக்கிவிட்டது என்று ராகுல் காந்தி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில், பா.ஜ.க. அவர் மேல் பாய்கிறார்கள்.
மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க.வின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள். அதைத்தான் பீகாரில் இப்போது கூடியிருக்கும் இந்தக் கூட்டம் எடுத்துக் காட்டுகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளத்தை இங்கிருக்கும் பாட்னாவில்தான் விதைத்தோம். எங்களுக்கு சமமான அரசியல் எதிரிகளே இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்று நினைத்த பா.ஜ.க.வின் கர்வத்தை தகர்த்த இடம்தான் இந்த பீகார்.
400 இடம் என்று கனவு கண்டவர்களை, 240-இல் அடக்கியது இந்தியா கூட்டணி.
மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள், மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். மக்கள் சக்திக்கு முன், எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்று, மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும்.
அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களே… நீங்கள் இன்றைக்கு இந்தியாவிற்கான வழக்கறிஞராக இருக்கிறீர்கள். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும்!
மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை என்று சகோதரர் தேஜஸ்வீ காட்டிக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் இரண்டு பேரும் பீகாரில் பெறப்போகும் வெற்றிதான், இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் வெற்றிவிழா கூட்டத்திலும் நிச்சயமாக - உறுதியாக நானும் பங்கேற்பேன்.
நன்றி! வணக்கம்!
வயிற்றுப்பசியோடு, அறிவுப்பசி போக்கும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்று அடுத்தக்கட்டத்தை எட்டி இருக்கிறது!
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் @BhagwantMann அவர்கள் முன்பாக, நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், மயிலாப்பூர் புனித சூசையப்பர் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவளித்து தொடங்கி வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம்.
விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் பயனாளிகளான மாணவச் செல்வங்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
#CMBreakfastScheme
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் உத்தரவுப்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாநிலக் கல்விக் கொள்கையின் சிறப்புகள் குறித்த கருத்தரங்கம்.
- திமுக மாணவர் அணிச் செயலாளர் திரு @rajiv_dmk அறிவிப்பு
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையின் சிறப்புகளையும் - தேசியக் கல்விக் கொள்கையின் தீமைகளையும் மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கில் சென்னை ”அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்” ஆகஸ்ட் 23 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு “எங்கள் கல்வி எங்கள் உரிமை” என்ற தலைப்பில் ”கருத்தரங்கம்” நடைபெறவுள்ளது.
மேலும் விவரம்: https://t.co/wqYOo6HD3X
#DMK4TN
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மருதமுத்தூர் ஊராட்சி கண்டபட்டியில் இளம் தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைத்து பரிசு வழங்கி சிறப்பித்தோம்..
இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு வயலுக்கு சென்று வயலில் பயிரிட்டுள்ள பயிர்களை பார்த்தேன்,வயல்களை சுற்றிப் பார்க்கிற பொழுது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வயல்களுக்கு சென்று பணி செய்த நினைவு வந்தது.
மனசு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..
அத்தியூத்தில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற தலைவர் கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி தொடங்கி வைத்த போது.