#BREAKING | “மக்கள் நலனில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிஞ்சி யாரும் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதே உண்மை” -ஓபிஎஸ்
#SunNews | @mkstalin | #OPS | #TNAssembly
இளைஞர்களின் நம்பிக்கை… நாளைய தலைமுறையின் வழிகாட்டி!
தமிழ்நாட்டு இளைஞர்களின் குரலாகவும், கழகத்தின் இளைய தலைமுறையின் எழுச்சியாகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அண்ணா அவர்களுக்கு என் அன்பான இளைஞரணி சகோதரர்களுக்கும் "இளைஞர் தின" வாழ்த்துக்கள் ❤️🖤 @dmk_youthwing
#internationalYouthday
எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி கைது!!
இது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை!
மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MLA., கண்டனம்!!
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள், மதியம் 12 மணி வரை இதுகுறித்து முக்கிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில்; அவர் 11 மணிக்கு கைது செய்யப்பட்டு தஞ்சை கொண்டு செல்லப்படுகிறார்.
அவர் தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிட்டு பேசாத நிலையில்; பொருத்தமற்ற வழக்குகளை பதிவு செய்து அவரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் உறுதியாக செயலாற்றுவோம் என அவர் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கூறியிருந்த நிலையில்; நாளை சட்டப்பேரவை கூடவிருக்கும் சூழலில்; அவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது இந்த அரசின் உள்நோக்கத்தை வெளிக்காட்டுவதாகவே இருக்கிறது.
அவரது பேச்சு மறைமுகமாக தங்களை தாக்குவதாக கருதினால்; அதை மறுப்பதற்கும், கண்டிப்பதற்கும், விமர்சிப்பதற்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் பொருத்தமற்ற வழக்குகளை பதிவு செய்து; அவசர அவசரமாக அவரை கைது செய்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த வேகத்தை ஆளுங்கட்சியினரின் மீது பொதுமக்களும், பாதிக்கப்பட்டவர்களும் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்களின் மீது ஏன் இந்த அரசு காட்டவில்லை?
தமிழ்நாடு அரசு இவ்விஷயத்தில் வரம்பு மீறியிறுக்கிறது என்பதில் ஐயமில்லை.
இவண்:
மு.தமிமுன் அன்சாரி MLA.,
தலைவர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
04.08.2026
காவிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் @UdhayStalin தலைமையில் தஞ்சையில் திரண்ட கழகம்!
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும்!
காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்!
விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் @Jawahirullah_MH, @ThamimunansariM, @nellai_mubarak ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை.
ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள் #விவசாயவிரோதிவிஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?
முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
#MekedatuDam கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதலமைச்சருக்கு நேரமில்லையா?
விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா?
நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார் திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.
விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும்!
அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்