"தமிழ்நாடு சிந்திக்க கூடிய ஒரு மாநிலம் என்பதெல்லாம் மாறிவிட்டது; இன்று அந்தக் கூட்டம் தியேட்டரில் இருக்கிறது"
இயக்குநர் அமீர் பேச்சு
#Egmore#DirectorAmeer#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
தற்குறிகள் நிரம்பி வழியும் காலக்கட்டத்தில் களத்தில் நின்று போராடும் தோழர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.
புரட்சி ஓங்கட்டும் ✊❤️
பாசிசம் ஒழியட்டும்...
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம்கோடாலி மதுபான கடை மூட சொன்ன தால் ஸ்கூல் பிள்ளைகளை போலீஸ்காரங்க அடித்த நான்கு குழந்தைகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ளார்😭
தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு 😢
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.
சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
@CMOTamilnadu
நூற்றுக்கணக்கான மக்கள் நடமாடும் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் ஒரு பெண்ணின் கழுத்தை அறுக்கும் கொடூர சம்பவம் நடந்துள்ளது!
ரீல்ஸ் ஆட்சியாளர்களின் அலட்சியத்தில் மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விகுறியாகியுள்ளது! "உங்களுக்கு ஒன்னுன்னா நான் வருவேன்" என்று சொன்ன முதல்வர் @TVKVijayHQ இதைப் பற்றி பேசுவாரா?
#TVKVijayFails
"நான் தெளிவா தான் இருக்கேன்" என்று விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் ஒரு மேடையில் பேசியதை பார்த்தேன். அவர் சொன்ன கருத்துக்கு நான் உடன்படுகிறேன்!
@thirumaofficial
1999 ல் திருமாவை தேர்தல் அரசியலுக்கு கொண்டு வந்தவர் அய்யா மூப்பனார். தனது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருமாவை வேட்பாளராக நிறுத்தியவர் மூப்பனார். அரசியலில் தனக்கு முதல் வாய்ப்பு தந்த மூப்பனாரை இரண்டே ஆண்டுகளில் முதுகில் குத்திவிட்டு பாஜக அங்கம் வகித்த திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார். பாஜக தன்னுடைய கொள்கை எதிரி என்று வீரவசனம் பேசிய திருமா ஒரு எம்எல்ஏ சீட்டுக்காக அங்கே ஒட்டிக்கொண்டார். திமுக தயவில் எம்எல்ஏ ஆகிவிட்டு மூன்று ஆண்டுகளில் வந்த நாடாளுமன்ற தேர்தலில் உடனே எம்பி ஆக வேண்டும் என்ற ஆசையில் முத்தமிழறிஞர் கலைஞரிடம் சீட்டு கேட்டார். திருமாவளவனை போன்ற எத்தனை "தெளிவான" ஆட்களை கலைஞர் பார்த்திருப்பார். எம்பி சீட்டு கிடைக்கவில்லை என்றவுடன் தான் வகித்த மங்களூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு 2004 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்து 2006 தேர்தலுக்கு ஜெயலலிதாவிடம் சரண்டராகிவிட்டார். தேர்தல் அரசியலுக்கு வந்த 7 ஆண்டுகளில் 4 கூட்டணி தாவிய தெளிவான மனிதர் திருமா! தமிழ்நாடு அரசியலில் இந்த record ஐ யாரும் break பண்ணல!
அடுத்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். தன்னை தீவிரமான விடுதலைப்புலிகள் ஆதரவாளராக காட்டிக்கொண்டவர் தானே திருமா! அடங்க மறுப்பவர் தானே, அத்து மீறுபவர் தானே பிறகு எப்படி காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தார்? ஒரே ஒரு எம்பி சீட்டுக்கு தானே!
அப்படினா தேர்தல் அரசியலை லாப கணக்கில் தனது சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திய தெளிவானவர் திருமா!
திருமாவின் சந்தர்ப்பவாத உச்சம் என்பது 2016 மக்கள் நலக்கூட்டணி தான். திமுக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியில் main bowler ஆக திகழ்ந்தார். கழகத்தலைவரை விமர்சித்து ஆனந்த விகடனில் பேட்டி எல்லாம் கொடுத்திருப்பார். பிறகு 2019 ல் மீண்டும் எம்பி ஆசை துளிர் விட திமுக கூட்டணியில் இணைந்து எம்பி ஆனார். அந்த தேர்தலில் திருமாவளவனை எப்படியாவது வெற்றி பெற வைத்தே ஆகவேண்டும் என்று கழகத்தலைவர் கட்டளையை ஏற்று கடுமையாக உழைத்தவன் திமுக தொண்டன். பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு நான்கு எம்எல்ஏக்கள் கிடைத்தது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களான சிந்தனை செல்வன், ஆளூர் ஷாநவாஸ், எஸ்எஸ் பாலாஜி, பனையூர் பாபு போன்றவர்களுக்கு தமிழ்நாட்டில் political recognition கிடைத்தது. இதனை ஏற்கும் பக்குவமோ அரசியல் முதிர்ச்சியோ திருமாவுக்கு கிடையாது அதனால் இவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் தாய் சிறுத்தை முடிவுரை எழுதியது. எவ்வளவு தெளிவானவர் திருமா என்பது புரியும்! இங்கே நீங்கள் இன்னொரு கேள்வி கேட்கலாம் இத்தனை சிறுத்தைகளின் எதிர்காலத்தை முடித்த திருமா ஏன் ரவிக்குமாரை அவ்வாறு செய்யவில்லை என்று! அதற்கு காரணம் ரவிக்குமார் ஆர்எஸ்எஸ் ஆட்களோடு நல்ல தொடர்பில் இருப்பவர். டெல்லி அரசியலுக்கு அவரது தேவை முக்கியம் என்பதால் அவரை கைக்குள்ளே வைத்திருப்பார்!
விஜயை ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த குழந்தை என்று 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிவிட்டு தேர்தலில் திமுக கூட்டணிக்கு வேலை செய்யாமல் தேர்தல் முடிவு வந்தவுடன் ஆதவ் அர்ஜுனா என்ற கள்ள லாட்டரி காட்டிய SOFA க்காக ஓடியவர் திருமா! தனது கட்சிக்கு மாநில அரசியல் கட்சி என்ற அந்தஸ்து கிடைக்க காரணமான திமுகவை விட்டு கேவலம் SOFA க்காக ஒடிவிட்டார் தெளிவான திருமாவளவன்!
எப்போதும் தனது பேச்சில் புரட்சியாளர் அம்பேத்கரை மேற்கோள் காட்டியே பேசும் திருமா அவர்களே, நேரு போன்ற பெரிய ஆளுமையை தனது உறுதியான கொள்கை நிலைப்பாட்டிற்காக எதிர்த்து ஒன்றிய சட்ட அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். நேருவோடு உடன்பட்டிருந்தால் சட்ட அமைச்சராக இருந்திருக்கலாம், நேருவோடு அனுசரணையாக நடந்திருந்தால் பின்னாளில் குடியரசு தலைவர் ஆகியிருக்கலாம்! ஆனால் அவர் அப்படி செய்யவில்லை! இந்திய சட்ட அமைச்சர் இந்திய குடியரசு தலைவர் போன்ற உயர்ந்த பதவிகளையே தனது கொள்கைக்காக தூக்கி எறிந்தவர். அடங்க மறுத்தவர், அத்துமீறியவர் அதனால் தான்
அவர் புரட்சியாளர். நீங்கள் யார்? வெறும் SOFA மற்றும் ஒரு மாநில அமைச்சர் பதவிக்காக ஆர்எஸ்எஸ் குழந்தைக்கு தாய்மாமனாக ஓடியவர். அரசியலை சுயலாபத்திற்கு பயன்படுத்தும் நீங்கள் எப்போதும் தெளிவானவர் தான்!
@sinthanaivck@PanaiyurBabu@aloor_ShaNavas@VckBalaji
தவெக என்கிற கட்சி தொடங்கி 55 பேரை பலி போட்டுட்டானுங்க 😤
கரூர்ல 41 மரணத்திற்கு முதன்மை காரணம் விஜய் தான் 💯
நீ வழக்கு போடு இல்ல மைர போடு 💥
~இடும்பாவனம் கார்த்தீ 🔥