2021 ம் ஆண்டின் சிறந்த நூலாக ‘இஸ்ரோவின் கதை’ தொழில்நுட்பவியல் பிரிவில் தமிழக அரசால் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது! இறைவியாகவே வாழ்ந்து, அண்மையில் இயற்கையுடன் இணைந்து விட்ட என் அம்மா கனகம் அவர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன். ❤️ #bestbook2021#TNGovernmentawards
இந்த ப்ராம்ப்ட், நிச்சயம் உங்கள் வாழ்வை மாற்றும். Dont miss. Thank me later. Just copy and paste in ChatGPT.
The “Future Me” Prompt
Title:
Predict My Future Based on My Current Actions
Prompt:
Analyze my current lifestyle, habits, finances, work, health, learning, and relationships.
Show me:
* Where I will likely be in 5 years if nothing changes.
* Where I could be in 5 years if I improve my habits by just 1% every week.
Compare both futures and identify the highest ROI actions I should take immediately.
ஆப்கானிஸ்தான் குன்துஸ் நகரத்தில் இருந்து தஜிகிஸ்தானை இணைக்கும் ஒரு கிராமப்புற சாலை. தாலிபான்களின் ஆட்சி, மொபைல்களை விட துப்பாக்கிகள் சாதாரணமாய் புழங்கும் ஒரு அசாதாரண சூழல். பொருளாதாரம் மிகவும் பின் தங்கியிருக்கிறது. நகரங்களுக்கு மட்டுமே சாலைகள்.
பிறது அனைத்தும் மண் மற்றும் மலைப்பாதைகள் தான். ஆனால் அங்கு ஓடும் பெரும்பான்மை ஆட்டோக்கள் டிவிஎஸ் தான். எல்லை, அரசியல், நிலப்பரப்பு என பல தடைகளை மீறி தமிழ்நாட்டை சார்ந்த ஒரு நிறுவனம் எவ்வளவு தூரம் சென்றிருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
இது ஒரு சாதாரண காட்சி அல்ல, உலக பிராண்டுகளே சிரமப்படும் இடங்களிலும் இந்தியப் பொறியியல் தன் பாதையை அமைத்துக் கொள்கிறது என்பதற்கான சான்று. வாழ்வதே சவாலாக இருக்கும் இடங்களிலும், தமிழ்நாடு தன் வழியைத் தேடி முன்னேறுகிறது என்பது நிச்சயம் ஒரு பெருமை தான் !
@kirubaakaran@claudeai Hi Kirubakaran. But how the claude edit the raw footage. You do by prompting and how feasible it is. Im using https://t.co/ralU8Epmbr for my edits. But its premium subscription.
வாழ்க்கை எவருக்கும் எதையுமே எளிதாகத் தந்து விடுவதில்லை. நேற்று நிகழ்ந்திருந்தால் அது ஒன்றோடு போயிருக்கும். இப்போது பாருங்கள். இந்த வலியில் இவன் உருவாக்கப் போகும் புதிய சாதனைகள் ஏராளம். 20 ஓவர் க்ரிக்கெட்டில் இருநூறும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 300ம் அடித்த முதல் பேட்ஸ்மேனாய் நீ வருவாய் வன்சி. இது நிகழ்ந்தே தீரும். #suryavanshi
என் பிள்ளை என் கண்ணு முன்னாடி, வீட்டுக்குள்ளதானே உட்கார்ந்திருக்கான்... அவனுக்கு என்ன ஆபத்து?" என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இன்றைய நிஜம் வேறாக இருக்கிறது. வெளியே இருக்கும் ஆபத்துகளை விட, உங்கள் குழந்தை கையில் வைத்திருக்கும் மொபைல் திரைக்குள் இருக்கும் ஆபத்துகள் மிக அதிகம்
ஆன்லைனில் குழந்தைகள் சந்திக்கும் முக்கிய ஆபத்துகள்:
• அந்நியர்களுடன் அரட்டை (Stranger Chatting): ஆன்லைன் கேம்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் முகம் தெரியாத நபர்களுடன் பழகும் வாய்ப்பு.
• கேமிங் மிரட்டல்கள் (Gaming Blackmail): விளையாட்டில் லெவல் தாண்டுவதற்கு உதவுவதாகக் கூறி, குழந்தைகளை மிரட்டிப் பணம் அல்லது விவரங்களைப் பறிப்பது.
. போலிப் பரிசுகள் (Fake Giveaways): "உங்களுக்கு ஐபோன் கிடைத்துள்ளது" என்பது போன்ற லிங்க்களை நம்பி ஏமாறுவது.
• தவறான உள்ளடக்கங்கள் (Inappropriate Content): வயதுக்கு மீறிய ஆபாச அல்லது வன்முறை சார்ந்த வீடியோக்களைப் பார்ப்பது.
• புகைப்படங்களை பகிரக் கோரும் அழுத்தம் (Secret Photo Sharing): அன்பாகப் பேசி, தங்களின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுப்பச் சொல்லி வற்புறுத்துவது.
பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ன?
Youtube - என்ன வீடியோக்கள், பாடல்கள், ஷார்ட்ஸ் பார்க்கிறார்கள் என்பதை யூட்யூப் ஹிஸ்டரியில் கவனிக்கவும். நாம் பயன்படுத்தும் யூட்யிபில் கூட குழந்தைகள் மனதை சிதைக்கும் ஆபாசம், வன்முறை, உடற்கேலி (Body Shaming ) உயிருக்கு ஆபத்தான சவால்கள், LGBT பாலின அடையாளம் என பல அதிர்ச்சிகள் இருக்கின்றன. முடிந்த வரை குழந்தைகளுக்கான ‘கிட்ஸ் யூட்யூப்’ மட்டுமே பயன்படுத்த அனுமதியுங்கள்.
உங்கள் குழந்தையுடன் தினமும் 10 நிமிடங்கள் சகஜமாகப் பேசுங்கள். ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைத் தோழமையோடு கேளுங்கள்.
ஆன்லைனில் யாராவது உன்னை சங்கடமாக உணர வைத்தாலோ, பயமுறுத்தினாலோ உடனடியாக எங்களிடம் சொல்ல வேண்டும் என்று தைரியம் கொடுங்கள்.
அறையில் தனியாக, கதவை மூடிக்கொண்டு நள்ளிரவு வரை அன்லிமிட்டெட் இன்டர்நெட் பயன்படுத்துவதை அனுமதியாதீர்கள்.
உங்கள் குழந்தையின் மொபைலில் தேவையில்லாத செயலிகள் டவுன்லோட் செய்வதைக் கட்டுப்படுத்துங்கள். மொபைல் செட்டிங்ஸை எப்போதும் சரிபாருங்கள்.
— ஹரிஹரசுதன் தங்கவேலு.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1982 இல் தொடங்கப்பட்டு, இன்று தனது 44 ஆண்டுகால அரசியல் பயணத்தில் முதன்முறையாக தமிழக அமைச்சரைவையில் இடம் பிடித்திருக்கிறார்கள். என்னது முதன் முறையா என அதிர வேண்டாம். பிற கட்சிகள் விசிகவை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் இந்த ‘முதன்முறை’ சொல்லும் செய்தி.
இத்தனை ஆண்டு காலம் வெறும் வாக்கு வங்கி யாக மட்டுமே சுருக்கப்பட்ட ஒரு இயக்கம், இன்று அதிகாரப் பங்கீடு என்ற சமத்துவத்தில் இணையக் காரணம், தவெக.
நாற்பது ஆண்டுகள் களப் போராட்டங்கள் நிகழ்த்திய ஒரு கட்சியை, கோரிக்கை தளத்தில் இருந்து அதிகாரப் பகிர்விற்குள் வாங்க, என கைபிடித்து அழைத்திருப்பது ஒரு வரலாற்று அங்கீகாரம். விசிகவிற்கு வாழ்த்துகள். முதல்வர் விஜய் மக்கள் மனங்களில் தொடர்ந்து உயர்கிறார். தமிழகம் சிறக்கட்டும்.
கெனிஷா பற்றித் தெரியவில்லை.
ஆனால் ரவி கெனிஷாவுடன் வரும் எல்லா வீடியோக்களிலும் மிக மகிழ்ச்சியாகத் தெரிகிறார். இவ்வளவு நாள் தேடிக் கொண்டிருந்த ஒரு விடுதலையை, நிபந்தனைகளற்ற ஆறுதலை கெனிஷாவிடம் கண்டடைந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
பரஸ்பர விவாகரத்திற்கு ரவி கடந்த மூன்று வருடமாக முயன்று வருகிறார் எனவும், அதற்கு அவரது மனைவி ஒத்துக் கொள்ளவில்லை என்பதும் செய்தி. ரவி அடக்கப்பட்டிருக்கிறார், ஒடுக்கப்பட்டிருக்கிறார் எல்லாம் சரி. அவர் நினைத்தால் கெனிஷா இல்லாமலே இந்த சிக்கலை எதிர் கொண்டிருக்க முடியும். உலகளவில் பார்த்தால் ஆண் எதிர் கொள்ளும் சிக்கல்களில் இது மிக சாதாரண ஒன்று. இதற்கு தீர்வு விவாகரத்து. இல்லையேல் தனித்து வாழ்தல். ஒரு ஆணின் வாழ்க்கைக்கு உறங்குவதற்கு ஒரு அறை, உடுத்துவதற்கு ஒரு துணி. பேச ஒரு நண்பன். அவனும் இல்லையென்றால் ஒரு நாய்குட்டி, இது போதும்.
ரவி நினைத்தால் இந்த தனித்திருந்தலை செய்திருக்கலாம். தனித்திருந்து கெனிஷா, மனிஷா என யாருடன் வேண்டுமானாலும் திரைமறைவில் வாழ்ந்திருக்கலாம். அது நமக்கு பெட்டி செய்தி கூட இல்லை.
ஆனால் மனைவியை வைத்துக் கொண்டே, கெனிஷாவுடன் ஊர் அறிய சுற்றி வந்தது, காதல் பறவைகளாக கைகோர்த்து திரிந்தது, மீடியா அட்டென்ஷன் எல்லாம் மனைவி மீதான ப்யூர் வன்மம். அவரைக் காயப்படுத்த வேண்டும் என்றே செய்த கீழ்த்தரம். ஆகவே தான் இவர்கள் அசந்த நேரம் பார்த்து சைபர் புலியிங்கில் இறங்கி வெற்றியும் கண்டிருக்கிறார் ஆர்த்தி. வாழ்த்துகள்.
இது சாதாரண கணவன், மனைவி மன சிக்கல். ஆனால் இதில் யார் எனத் தெரியாத கெனிஷாவிற்கு நட்சத்திர அடையாளம், ரவி பக்கம் ஒரு சாரர். ஆர்த்தி பக்கம் அவர் ஆர்மி என களமிறங்கி, இவர்கள் மூவர் வாழ்க்கைக்கு ஒரு தீடிர் மீடியா வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கும் லூசாண்டிகள் யார் தெரியுமா.
நாம் தான் !!
2/2
என ஐந்து ஆளுமைத்திறன்கள் மூலம் அமெரிக்கர்கள் அனைவரையும் வகைப்படுத்தி ஒருவர் ட்ரம்பின் ஆதரவாளரா, எதிர்ப்பாளரா அல்லது நடுநிலையாரா என இறுதி வகைப்படுத்தியது.
ஆதரவாளரையும், எதிர்ப்பாளரையும் விட்டுவிட்டு நடுநிலை எனப்படும் ‘தி பெர்சுவேடபிள்’ஸைக் (The Persuadables) குறி வைத்தது. மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக, நகரம் வாரியாக, வளாகம் வாரியாக இந்த நடுநிலைகளைக் கட்டம் கட்டி தனது டிஜிட்டல் தாக்குதலைத் துவங்கியது அனாலிட்டிக்கா நிறுவனம்.
பரவும் பொய்ச் செய்திகள் -
‘ஹிலாரி நம்மை ஏமாற்றிவிட்டார்’ என ஒரு காணொளியைப் பரப்பிய சில நொடிகளில் டிரம்ப் நம்மைப் பாதுகாப்பார், இழந்த அமெரிக்காவை மீட்பார் என வேறொரு காணொளியை அனுப்புவார்கள். எல்லைகளில் தீவிரவாதிகள் நுழைகிறார்கள் என பயம் காட்டிய அதே நொடி, இதைத் தடுக்க சக்தி உள்ள ஒரே ஆள் என ட்ரம்பின் புகைப்படத்தை வைத்து மரியாதை செய்வார்கள்.
நம்மைக் காக்க வந்த அசகாய சூரன், தேவதூதன், அதிரடிக்காரன் என்றெல்லாம் ட்ரம்பின் பிம்பம் கட்டமைக்கப்பட்ட அதேவேளை, ஹிலாரியை, அவர் தனிப்பட்ட வாழ்வை, அவரது ஆதரவாளர்களைக் கடுமையாக சித்தரித்து தாக்கினார்கள்.
ஒரு கட்டத்தில், ஹிலாரியின் சிறிய இருமலைக்கூட அவர்கள் விடவில்லை.
ஹிலாரி தனது நியூயார்க் பரப்புரையின்போது சில நொடிகள் தொடர்ந்து இருமினார், தண்ணீர் குடித்து தனது உரையை மீண்டும் துவக்கிய அவர், ‘எனக்கு ட்ரம்ப் என்றாலே அலர்ஜி’ என நகைச்சுவையாகப் பேசி நிலைமையை சமாளித்தார். ஆனால், அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களைக் கிளப்பியது அனாலிட்டிக்கா நிறுவனம்.
இப்படி பலவீனமாக இருப்பவர்தான் உங்கள் அதிபரா என மக்களைப் பேச வைத்துப் பரபரப்பைக் கிளப்பியது.
இப்படிக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளிலும் உண்மை பொய் எல்லாம் பார்க்காமல், பத்திரிகைகள், கட்டுரைகள், காணொளிகள், புகைப்படங்கள் என அனைத்து வாயிலாகவும் இந்த நடுநிலைகளைத் தொடர்ந்து அணுகியது அனாலிடிக்கா. அவர்கள் மனதில் மெல்ல மெல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு நடுநிலையாக இருப்பவர் டிரம்ப் ஆதரவு பதிவுகளுக்கு லைக் போட்டு தன்னை அவரது ஆதரவாளர் என வெளிப்படுத்தும் வரை நடுநிலைகள் மீதான டிஜிட்டல் தாக்குதலை இரவு பகலாகத் தொடர்ந்தது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா.
விளைவு, தங்களை நோக்கி குறி வைத்துச் செலுத்தப்பட்ட அனைத்துப் போலிகளையும், சித்தரிக்கப்பட்டவற்றையும் உண்மை என நம்பி வாக்குகளை மாற்றிச் செலுத்தினார்கள் நடுநிலைகள். அவரே எதிர்பாராமல் அமெரிக்காவின் 45ஆவது அதிபரானார் ட்ரம்ப். அவர் அதிபரான சில நாட்களிலேயே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் முக்கிய பணியாளர் இந்த உள்ளடி விவரத்தை ‘கார்டியன்’ மற்றும் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைகளுக்குத் தெரிவிக்க, மோசடி அம்பலமானது.
இந்தத் தகவல் திருட்டு நிகழக் காரணமான ஃபேஸ்புக் நிறுவனமோ, ‘ஒரு கடவுச்சொல் களவாடப்படவில்லை, எங்கள் சர்வர்கள் திறக்கப்படவில்லை, ஆகவே இது வெறும் ‘நம்பிக்கை மோசடி’யே (Breach of Trust) தவிர எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என நழுவிக்கொண்டது. பிரச்சினை இன்னும் பெரிதாக வெடித்து அமெரிக்க நீதிமன்றம் வரை செல்ல கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மூடப்பட்டது, மார்க் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அபராதத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், ட்ரம்ப் தனது ஆட்சிக்காலம் முழுவதும் அதிபராகத்தான் தொடர்ந்தார். அதுதான் தகவல்களின் சக்தி.
ஆகவே நண்பர்களே! அமெரிக்கத் தேர்தலில் மட்டும் டிஜிட்டல் தாக்குதல்கள் நிகழவில்லை, இந்தியத் தேர்தலில்களிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகவே நமக்கு வரும் அனைத்து டிஜிட்டல் தகவல்களையும் கண்மூடித்தனமாக நம்பாமல், சற்று நிதானித்து, ஒருமுறைக்கு இரு முறை சோதித்துவிட்டு உண்மை என்னவென்று அறிந்து பிறகு செயலாற்றுவோம்.
ஹரிஹரசுதன் தங்கவேலு.
சைபர் பாதுகாப்பு மற்றும் AI நிபுணர்.
2016 அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் தரப்பில் தேர்தல் பணிகளைக் கவனித்துக்கொள்ள உருவாக்கப்பட்ட அமைப்பு ‘ப்ராஜக்ட் அலமோ’ (Project Alamo).
அவரது தேர்தல் பரப்புரைகள், பேட்டிகள், மக்கள் சந்திப்புகள், இன்னபிற என அவரது வெற்றிக்குத் தேவையான அனைத்தையும் கவனித்துக்கொண்டது ப்ராஜெக்ட் அலமோதான். இதை ட்ரம்பின் ‘டிஜிட்டல் கை’ (Digital Arm) என்றே குறிப்பிடுவார்கள்.
அந்த அளவு நினைத்துப் பார்த்திரா பணத்தை டிஜிட்டல் விளம்பரங்களுக்காக செலவுசெய்தது இந்த அமைப்பு.
பேஸ்புக் விளம்பரத்திற்கு மட்டும் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்திருக்கிறது ப்ராஜெக்ட் அலமோ.
அலமோவின் மூளையாகச் செயல்பட்டது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம், ‘பிக் டேட்டா’ எனப்படும் அதிகப்படியான தகவல்களைச் சேகரித்து, பின்னர் அதைத் தேவைக்கேற்ப பயன்படுத்தும் தகவல்களாக மாற்றித் தருவது இந்நிறுவனத்தின் பணி. இப்போது அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்பை வெல்ல வைப்போம் எனப் பெருந்தொகைக்கு வேலையை ஒப்புக்கொண்டாயிற்று.
ஆனால், அமெரிக்க மக்களின் மனநிலையை எப்படிக் கணிப்பது? அதுகுறித்த தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் எப்படி எடுப்பது?
இதற்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலெக்சாண்டர் கோகனை வைத்து 120 கேள்விகளை உருவாக்கியது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா. நீங்கள் யார்? உங்கள் மனம் இப்போது எப்படி இருக்கிறது? மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இப்படி 120 உளவியல் கேள்விகளை, ‘இது உங்கள் டிஜிட்டல் வாழ்வு, ஒரு கிளிக் ஆளுமைத் தேர்வு’ (This is your digital life, One Click personality Test) என ஒரு மதிப்பாய்வாக (Survey) பேஸ்புக்கில் பரப்பினார்கள்.
இப்படி 120 கேள்விகளைக் கொண்ட பெரிய மதிப்பாய்வுக்கு நேரம் ஒதுக்கி யாரும் பதில் தருவார்களா என்ன?
அதனால், இந்த மதிப்பாய்வைப் பூர்த்திசெய்பவர்களுக்கு ஐந்து டாலர்கள் சன்மானம் தந்தார்கள். இதற்காக மக்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான்! பேஸ்புக்கில் லாகின் செய்து பதில்களை நிரப்பினால் போதும் என்றார்கள். ஆனால், அதேநேரம் பயனர்கள் பேஸ்புக்கில் இடும் நிலைத்தகவல், புகைப்படங்கள், அவர்களது விருப்பங்கள், அவர்கள் பயோ விபரங்கள் ஆகியவற்றை உபயோகித்துக்கொள்ள எங்களுக்கு அனுமதி அளிக்கிறீர்கள் எனும் உள்ளடி வேலையை மக்களிடத்தில் அனலிடிக்கா சொல்லவில்லை.
இந்த ஐந்து டாலர் வெகுமானத்திற்கு ஆசைப்பட்டு சுமார் 28,000 பேர் இந்த மதிப்பாய்வை பூர்த்திசெய்தார்கள். அதைக் கொண்டு 8.7 கோடி அமெரிக்க மக்களின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா வசம் வந்தது. நில்லுங்கள்! 28,000 பேர் மதிப்பாய்வைப் பூர்த்திசெய்தால் அவர் குறித்த தகவல் மட்டும்தானே செல்ல வேண்டும். எப்படி அனைவர் தகவலும் சென்றது எனும் உங்களது கேள்வி நியாயமே!
மதிப்பாய்வை நிரப்புபவரின் தகவல்களை மட்டும் கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா எடுக்கவில்லை, இவர்களது நட்பு வட்டத்திலிருந்த அனைவரது தகவல்களும் அவர்கள் அனுமதிக்கிறார்கள் என்பதுதான் அந்த ஐந்து டாலர் பொன்முடிக்கான பின்னணி. சுருங்கச் சொன்னால் பேஸ்புக்கில் இருக்கும் ஒருவரை மதிப்பாய்வை நிரப்பவைத்து அவரது நட்பு வட்டத்திலிருக்கும் ஐந்தாயிரம் பேர் பேஸ்புக்கில் இடும் நிலைத்தகவல், புகைப்படங்கள், விருப்பங்கள், கணக்கு குறித்த தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுத்தது கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா.
தகவல்களை என்ன செய்தனர்?
இப்படி எடுத்த தகவல்களை அமெரிக்க வாக்காளர் பட்டியலுடன் இணைத்து, ஒவ்வொருக்குமான தனித்தகவல்கள் எவ்வளவு எனப் பார்த்த அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு ஆச்சர்யம் தாளவில்லை. ஒருவர் குறித்த ‘தரவுப் புள்ளிகள்’ (Data Points) மட்டுமே 4,200 கிடைத்திருந்தது,
அதாவது, எதிர் வீட்டு ராமசாமி அண்ணன் இந்த நிறம், குணம், இந்த நேரம் காலை எழுவார், அதன் பிறகு இந்த வேலை செய்வார், அவர் பணிபுரியும் இடம் இது, அவர் விருப்பமான உணவு இது, உணவகம் இது, அவர் வீடு திரும்பும் நேரம் இது என ஒரு தனிமனிதன் குறித்த 4,200 தரவுப் புள்ளிகள்போல, 8.7 கோடி அமெரிக்கர்கள் ஒவ்வொருக்குமாக இத்தரவுப் புள்ளிகளைக் கைவசம் வைத்திருந்தது அனாலிட்டிக்கா.
இந்த தரவுப் புள்ளிகளைக் கொண்டு மக்களை உணர்வுரீதியாக ஐந்து பிரிவுகளில் அடக்கி மதிப்பீடுகள் தந்து வகைப்படுத்தியது.
அவை ‘ஓசன்’ (OCEAN) என அழைக்கப்பட்டது. அதாவது, ‘ஓப்பன்னஸ்’ (Openness - வெளிப்படைத்தன்மை), ‘கான்சைன்டியஸ்னஸ்’ (Conscientiousness - நேர்மையுணர்வு), ‘எக்ஸ்ட்ராவெர்ஸன்’ (Extraversion - வெளியுலக ஈடுபாடு), ‘அக்ரியபில்னஸ்’ (Agreeableness – ஏற்றுக்கொள்ளும் தன்மை), ‘நியூரோட்டிசிஸம்’ (Neuroticism - உணர்ச்சிமயம்) - 1/2 - Read below.
AI கையில் சிக்கிய ஜீரோ டே ஆயுதம்!
நேற்று வரை மனித மூளைகளுக்கு மட்டுமே சவாலாக இருந்த சைபர் குற்றங்கள் இன்று AI எனும் தொழில்நுட்பத்தின் கைகளுக்கு மாறியிருக்கிறது. கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள நேற்றைய அறிக்கை, இணையப் பாதுகாப்பில் ஒரு புதிய இருண்ட காலத்தின் தொடக்கத்தை அறிவித்துள்ளது.
பொதுவாக ஒரு மென்பொருளில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிப்பது என்பது கடலில் ஊசியைத் தேடுவது போல. பெரும் சிரமம். திறமையான ஹேக்கர்களுக்குக் கூட பல வாரங்கள் அல்லது மாதங்கள் தேவைப்படும். ஆனால், இந்த முறை ஒரு ஜீரோ-டே பலவீனத்தை, அதாவது அந்த மென்பொருளை உருவாக்கிய நிறுவனத்திற்கே தெரியாத ஒரு ரகசிய ஓட்டையை AI-ன் உதவியோடு ஹேக்கர்கள் கண்டறிந்துள்ளனர்.
வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு தாக்குதலுக்கான திட்டமிடல் முதல் அதைச் செயல்படுத்துவதற்கான 'பைதான்' கோட் வரை அனைத்தையும் உருவாக்க AI பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் மிகவும் பாதுகாப்பானது என்று நம்பும் 'இருபடி சரிபார்ப்பு' (2-Factor Authentication - 2FA) முறைதான் இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்கு. வங்கிக் கணக்கு முதல் சமூக வலைதளங்கள் வரை நாம் பயன்படுத்தும் இந்த 2FA முறையை, ஹேக்கர்கள் Ai உதவியுடன் உருவாக்கிய அந்த மால்வேர் மிக எளிதாகத் தாண்டிச் செல்கிறது. இணையதளங்களை நிர்வகிக்கும் ஒரு முக்கிய தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், ஒட்டுமொத்த இணையக் கட்டமைப்பிற்கும் விடப்பட்ட சவாலாகும்.
இது வெறும் ஒரு ஹேக்கிங் சம்பவம் மட்டுமல்ல, ஒரு புதிய போரின் தொடக்கம் என்கிறது கூகுள். #Cyber #google.
சட்டமன்றத்தில் இன்று சௌமியா அன்புமணி அவர்களின் உரை கவனம் ஈர்த்தது. ஒரு டாஸ்மாக் கடையை மூடினால், அதன் அருகிலேயே நாலு சந்துக் கடைகள் திறக்கிறார்கள், இதைத் தடுக்க வேண்டும் என்றார். இதுதான் கள ரியாலிட்டியை ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவது.
இந்த திடீர் சந்துக் கடைகள் போலீஸ் அறியாததல்ல. ஆனால் முதல்வருக்கு தெரியாது. அவரைப் பொறுத்த வரை கொடுத்த ஆர்டரை செயல்படுத்தியிருப்பார்கள் என்றே நம்புவார். ஆனால் அது வேறு வடிவில் மீண்டும் முளைப்பதை சௌமியா அவர்கள் உணர்த்தியது பாராட்டுக்குரியது. முதல்வரும் இதை உடனே குறித்துக் கொண்டார். இது தான் மக்கள் நலன்.
கடந்த ஆட்சியில் இந்தக் கள நிலவரம், ரியாலிட்டி, மக்கள் உணர்வு இது எதுமே ஸ்டாலினிடம் சென்று சேராமல் கவனமாக பார்த்துக் கொண்டார்கள், அதுவும் தோல்விக்கு ஒரு காரணம்.
கவலைப்படாத ஒருஅரக்க கூட்டமாக மாறுகிறார்கள். கலைமுக்கியம், ஒழுக்கம் தேவையில்லை என்றவாதம் ஒரு பண்பாட்டின் வேரை அறுக்கும் செயலாகும்.அதிகாரத்தின் நிழலில் வளர்ந்த ஒருபடைப்பால், அதிகாரத்தை நோக்கிய கேள்விகளை எழுப்பமுடியாது.வைரமுத்து எப்போதும் ஆளும் வர்க்கத்தின் கவிஞனாகவே இருந்தார் 12/16
ஆனால் தன்மீதான குற்றச் சாட்டுகளை குறைந்தபட்சம் அவர் மறுக்கக் கூட இல்லை. சிரித்தபடி கடக்கிறார்என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை பெருவலியைத் தரும். குற்றச்சாட்டுகளை மறுக்காத ஒருவரை மொழியின் முகமாக மாற்றும்போது, அந்த மொழியைப் பேசுபவர்கள், சமூகம் மற்கும் அறநெறிகளைப் பற்றிக்
11/16