தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
> Bro Came
> Hammered 16% GDP growth to his state
> Left
> Didn't interfere in Vijay’s govt formation
> No horse trading MLAs
> Came back to support Vijay for development
Tamilnadu people are extremely lucky.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
Power is temporary, but true statesmanship is eternal 🖤❤️
Through decades of relentless public life, you have shown the nation what it means to lead with dignity, resilience, and an uncompromising commitment to the people.
You are not just a political leader; you are the steadfast shield of the Dravidian ideology and the ultimate guardian of Tamil Nadu's rights.
#SalutingStalin
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐
95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!
#12thResults #ExamResult
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்கும் நான் முதல்வன் திட்ட ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்வோம் என மிரட்டுவது கடும் கண்டனத்திற்குரியது!
யுபிஎஸ்சி (UPSC) முதல்நிலைத் தேர்விற்குத் தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் கனவைச் சிதைக்கும் இந்த வஞ்சகச் செயலை திராவிட முன்னேற்றக் கழகமும், எங்கள் தலைவரும் ஒருபோதும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்!
மாணவர்களே, துளியும் கலங்காதீர்கள்! கழகம் உங்களுக்கு எஃகுக் கோட்டை அரணாக நிற்கும். தமிழ்நாட்டில் அறிவொளி பெறத் துடிக்கும் ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தையும், எந்தச் சூழலிலும் எங்கள் தலைவர் காப்பார்! இது உறுதி!
இதன் பின்னணியில் இருக்கும் சதிகாரர்களுக்கு எங்கள் பகிரங்க எச்சரிக்கை: தலைவர் தளபதியார் ஈன்றெடுத்த ஒற்றைத் திராவிட மாடல் திட்டத்தின் மீது கைவைக்க நினைத்தாலும், நாங்கள் கைகட்டி, வாய்மூடி வேடிக்கை பார்க்க மாட்டோம்! வீதிக்கு வந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்!
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் எங்கள் போர் எவ்வித சமரசமுமின்றித் தொடரும்!
#நான்_முதல்வன்
உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
Let the black flags rise!
#TNWillFightTNWillWin
🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid?
🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states.
🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire.
🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation.
🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy.
🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.
Till now, in politics, I have never addressed my comments at any individual contesting against me or our party in elections, be it 2016, 2019, 2021, 2022 or 2024.
Our approach has always been clear: who we are, what we do, and why people should vote for us.
However, after the continuous parroting of “nothing has been done for Madurai” by those devoid of principles, shifting across parties, lacking understanding of the constituency, unaware of how administration functions at various levels, and empty of data, history or analysis, I believe my primary duty now is to bring light and dispel the ignorance being spread through paid promotion (Among others, @SandhyaRavishan@VinodhArulappan Rahul of @UpdatesChennai – I will name and tag the brokers in due course).
Therefore, from now until the end of my campaign, every rally will serve as an “Introduction to Madurai” lesson for the “Cinema Sangi,” while also unmasking a caste-ist party run solely to provide political protection for one person with a disreputable (to say the least) background.
Chapter:1
இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக்கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை.
2016, 2019, 2021, 2022, 2024 என எந்தத் தேர்தலாக இருந்தாலும், எங்கள் அணுகுமுறை எப்போதும் தெளிவானதே: நாங்கள் யார், நாங்கள் செய்துள்ள பணிகள் என்ன, மக்கள் எதற்காக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பரப்புரைகளின் மையக் கருத்தாக இருந்து வருகிறது.
ஆனால் “மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை” என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சில கொள்கையற்றவர்கள், பல கட்சிகள் தாவியவர்கள், தொகுதியைப் பற்றிய புரிதல் அற்றவர்கள், நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதையே அறியாதவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் — பணம் செலவழித்து பரப்பும் அத்தகைய புரட்டுக்களை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது.
அதே போன்று, இத்தகைய அவதூறுகளுக்கு துணை நிற்கும் சந்தியா ரவிஷங்கர், வினோத் அருளப்பன், சென்னை அப்டேட்ஸ் - ராகுல் போன்ற பிற தரகர்களையும் உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவேன்.
அதனால், இனி என் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் “சினிமா சங்கிக்கு“ மதுரையைப் பற்றி அறிமுகப் பாடம் புகட்டப்படும்.
நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்குவதற்காக மட்டுமே இயங்கும் சாதியவாதக் கட்சியின் முகத்திரையும் கிழிக்கப்படும்!
அத்தியாயம் 1
வார்டு 56, பொன்னகரம் – பிராட்வே பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை.
தரவுகள் (Data PDF): https://t.co/woqH7oLGOp