Vishnu Reddy participated in the Tamil Nadu Government's consultation meeting with people representatives regarding the proposed extraction of atomic minerals
A photograph from the meeting was shared on the official X account of the Minister for Mines and Minerals
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்��ு சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் "பாப்பா" (Baby) என்று மிகத் தெளிவாகவும், மீண்டும் வலியுறுத்தியும் பேசிய பிறகும்,
அதை வேண்டுமென்றே சாதிய ரீதியாகத் திரித்து, 'விக்டிம் கார்டு' மூலம் சமூகப் பதற்றத்தை உண்டாக்கப் பார்க்கும் அரசியல் அப்பட்டமாகத் தெரிகிறது!
அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு, இவ்வளவு மலிவான அரசியலைச் செய்யும் உங்களுக்கு அந்த இருக���கையில் அமரும் தகுதிதான் இருக்கிறதா?
வாயைத் திறந்தாலே பச்சைப்பொய்களையும், வதந்திகளையும் கொட்டி மக்களைக் குழப்பும் இந்த 'தமிழக விக்டிம் கார்டு கழகத்தின்' (Tamilaga Victimcard Kazhagam) அழுகுனி நாடகங்கள் இனியும் எடுபடாது!
SRM விவகாரத்தில் நீங்கள் செய்ததாக அங்கும், உங்கள் வீடு அமைந்துள்ள மறைமலை நகர் பகுதி மக்களும் உங்களைப் பற்றித் துப்பிக் கொட்டும் உண்மைகளும் திமுகவுக்கு தெரிந்து விட்டதே என்பது உங்களுக்கு வலிக்கத் தானே செய்யும்!