ஆமாம்...
கிழப்பன்றிதான்.
சாக்கடை சாக்கடையாய்
தேடிப் பயணித்தவன்தான்.
நாறும் இடங்களில் எல்லாம்
மூக்கை நுழைத்தவன்தான்.
உங்கள் கழிவுகளை சுத்தம் செய்தபடி
தன்னை வருத்திக் கொண்டவன்தான்.
தன் மூத்திரத்தைக் கூட
எந்தச் சாக்கடையிலும் கலக்காதவன்
எனச் சரியாய்த்தான் வரைந்திருக்கிறீர்கள்.
ஒன்றுதான் பிழை.
அவர் சொகுசாய் வாழ்ந்த
வெள்ளைப் பன்றியல்ல.
அப்புறப்படுத்துவதற்காய்
அழுக்குகளிலேயே வாழ்ந்த
கருப்புப் பன்றி.
அதை மட்டும்
மாற்றி வரைந்து தாருங்கள்.
பழ.புகழேந்தி
தமிழ்நாட்டின் ஒப்பற்ற தலைவன்
"நான்– மூன்று ஆண்டுக்கோ,
பத்து ஆண்டுக்கோ நாடு கடத்தலுக்கோ, தூக்குத் தண்டனைக்கோ, ஆளாக்கப்பட்டாலும், மற்றும், பிரிட்டிஷ்காரன் காங்கிரசுக் கிளர்ச்சியின்மீது கையாண்ட எந்த விதமான கொடிய, தீவிரமான அடக்கு முறைகளை நம்மீதும், கழகத்தின்மீதும் பிரயோகித்தாலுங்கூட, அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ, திட்டத்தையோ, மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை, பயந்துவிட மாட்டீர்கள்! சட்டத்தைப் பார்த்துப் பயந்து விட்டதாகப் பெயர் வாங்காதீர்கள்! ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற - பெயர் கொடுங்கள்!
-#பெரியார் 🔥
(‘விடுதலை’ - 11.11.1957)
The first look of #Manangatti was very fresh and interesting.💐💐Dudevicky will surely make it a great final out 👍👍My best wishes to @dudevicky_dir@iYogiBabu bro @lakku76 sir and team 🌺🌺