தமிழ்த்திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சாரின் திருவுடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம்.
சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், எப்படியும் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது மரணச் செய்தி இன்று காலை பேரிடியாக வந்தது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்திற்குரிய இயக்குநர். நம் கழகத் தலைவர் அவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர்.
எளிய மக்களின் வாழ்க்கையை – உணர்வைப் பிரதிபலித்து, தமிழ்ச் சினிமாவில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்திய பாரதிராஜா சாரின் மறைவு, கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அரங்கிற்குள் இருந்த சினிமாவை வயல்வெளிக்கும் – கடற்கரைக்கும் – கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற திரையுலக வித்தகர்.
எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் படைப்புகளைத் தந்து, திறமையான கலைஞர்கள் பலரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
பாரதிராஜா சாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் - அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'என் இனிய தமிழ் மக்களே' என்ற மண் வாசனை மிகுந்த அவரது குரல் நம் செவிகளில் என்றுமே ஒலித்துக் கொண்டு இருக்கும்.
பாராதிராஜா சார், அவர் படைப்புகளின் வழியே என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்.
#Bharathiraja
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
Warm birthday wishes to RJD National President Thiru. @LaluPrasadRJD.
Your consistent defence of secularism and #SocialJustice remains an inspiration to democratic and progressive forces across the country.
Wishing you good health and happiness.
@yadavtejashwi
உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் துணையிருப்போம்!
ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்த போது இதயம் கனக்கிறது.
உடன்பிறப்புகளே… உங்கள் ஒவ்வொருவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை! ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது: சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
உடன்பிறப்புகள் ஒவ்வொருவொருவர் மீது நானும்,உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்!
#DMK4TN
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
“கழகத் தலைவர் அவர்களது பேச்சைத் திரித்துப் பரப்புகிறார்கள்”
“ஆட்சிக் கலைப்பு - கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல; மக்கள்தான் களைத்துப் போய்விட்டார்கள்”
- விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. அவர்கள் அறிக்கை.
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர்.
ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது தூய சக்தி என்று கபட வேடம் போடும் அரசு.
“இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்” என்று எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாகப் போய்வரும் நிலையில் அவர் விமர்சனம் செய்தார். “ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது” என்று தலைவர் அவர்கள் பேசினார்கள். ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர் சொன்னதாகத் திரித்து செய்தி பரப்பப்படுகிறது.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க. தலைவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பேசி உள்ளனர். ஆட்சி கவிழும் என்று தலைவர் அவர்கள் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல!
“ஆறு மாதம் வரை, இந்த ஆட்சி பற்றி விமர்சித்துப் பேசப் போவதில்லை” என்று அவர் சொல்லியிருந்தார். ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதை மருந்துகள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என்று பொருள்படும்படிதான் சொன்னார்கள்.
ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால் இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூகவலைத்தளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளைத்தான் மக்கள் சொல்லி வருகிறார்கள்.
இதைத்தான் தலைவர் அவர்கள் தனது உரையில் சுட்டிக் காட்டினார்கள். கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்!
அவதூறுகள், ஆபாசப் பதிவுகள், பொய்ச் செய்திகள் பரப்புவோர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
பட்டப்பகலில் நட்டநடு வீதியில் ஓட ஓட விரட்டிப் படுகொலைகள் நடக்கின்றன. அவற்றைத் தடுக்கவும் துப்பில்லை, வக்கில்லை.
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மக்கள் நள்ளிரவு முழுவதும் சாலையில் அமர்ந்து போராடினால் கேட்க நாதியில்லை.
ஆனால், இவர்களின் ஊழல்களையும் உண்மை முகங்களையும் வெளிக்கொணர்ந்து பதிவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். விமர்சனத்தை முடக்குவதில் மட்டும்தான் இந்த அரசு proactive-ஆகச் செயல்படும் போல.
இது பாசிசமா, இல்லை பாயாசமா? ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திலேயே இப்படி அடக்குமுறைகளை அவிழ்த்து விடும் இவர்கள் போகப் போக இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறார்களோ?
என்ன CM Sir, உங்களை எதிர்த்தால் இதுதான் கதி என மிரட்டிப் பார்க்கிறீர்களா?
#TVKFails
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (08.06.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ஐ.யூ.எம்.எல். – அதிமுக – காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த வாலாஜா ஒருங்கிணைப்பாளர்கள் ரிபாய், ஏ.எஸ்.இல்யாஸ், முகமது முபாரக், அக்பர் பர்ஷா, ஏ.பாஷா, இம்ரான் ஜலீல், அக்பர், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் ஜகபர்சாதிக், வணிகர் அணி அமீர்பாபுகாஜா- குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நிஜாம், அல்அமீன், முகமது சபீர், குளைச்சல் பகர்தீன், தொண்டர் அணி நசீர்ஷா, மாணவர் அணி மா.முகமது அஸ்கர், குளைச்சல் அப்துல்கரீம், அஜமல்கான், ஜகபர்சாதிக், முகமது சபீர், புதுமடம் ஹலீம், ரஷித்அலி, நிசார்அலி, ஹாரிஷ்அல்யாசின், முகமது அசாருதீன், முகமது பைசல், முகமது இம்தியாஸ், இஃபான்கான், ஹாபில்அல்யாசின், ஆசிக் அலி நஜிமுதீன், அகமது, அலாஹ்வாத்அமீர்பாஷா, சபீர்அகமது, இன்பராஜ், சபீர்அகமது, இன்பராஜ், சீர்காழி வெங்கடேஷ், முகமது பைசல், மருத்துவ மணி அஃபான் அகமது, ஷாகுல்இம்தியாஸ், முகமது நவீத், முகமது சலீம், அஜ்மல்அஹமது, முகமது ரியாஸ் - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புகாரிகாஜா, அமீர்பாபுகாஜா, சீர்காழி வெங்கடேஷ், இராஜசேகர் - அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் சாகுல்அமீத், சாகுல் அமீது - விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குளைச்சல் அ.சித்திக், சந்தோஷ்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் சுபேர்கான் ஆகியோர் உடனிருந்தனர்.
#DMK
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது.
அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
@Subramanian_ma@PrabhakarRaja88
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பனையூர் பாபு அவர்கள் தனது ஆதரவாளர்கள், 1200 பேருடன் நமது தலைவர் @mkstalin அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது அதில் நாம் பங்கேற்றோம்.
கழகத்தில் இணைந்த தோழர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
கொள்கை அரசியலை, கவர்ச்சி அரசியலை வைத்து வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
ஒற்றுமையுடன் கரம் கோத்து தமிழ்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடச் செய்வோம்.
கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் அண்ணன் PTC G.செல்வராஜ் அவர்களின் பேரன் R.G.அபிஷேக் - S. கீர்த்தனா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெற்றபோது அதில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக் கூறினோம்.
அன்பும் இனிமையும் சூழ்ந்து, மணமக்களின் இல்லற வாழ்வு சிறப்பாக அமையட்டும்!
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம்.
திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
உடன்பிறப்புகளாய்
ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
#DMK @thamoanbarasan
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்!
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்றும் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
கட்சித் தலைவரா பொறுப்பில்லாமல் பேசிட்டு இருந்தவரு, ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகாவது பொறுப்போடு பேசுவார்ன்னு எதிர்பார்த்தா வழக்கம் போல, அந்த பொறுப்பிற்கு உரிய எந்த கண்ணியத்தையும் கடைப்பிடிக்காம வாந்தி எடுத்திருக்கிறார்.
“6 மாசம் அமைதியா இருப்போம்னு சொன்னவங்களால 6 நாள் கூட சும்மா இருக்க முடியல!” என நீங்க சொல்றீங்க @TVKVijayHQ ஆனா இந்த 20 நாட்கள்ல 25+ கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 20+ பாலியல் குற்றங்கள் நடந்திருக்கு.. ஒரு முதலமைச்சர் ஆ அதுக்கு கொஞ்சம் கூட பொறுப்பு எடுத்துக்காம இருக்கீங்க ஓகே.. ஆனா அதுக்கெல்லாம் கொஞ்சம் கூட வருத்தமோ, சோகமோ கூட உங்க மூஞ்சில இல்லையே சார்!
நடக்கற சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை பத்தி பேச கூட உங்களுக்கு வக்கு இல்லை, திராணி இல்லை - ஆனால் அதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டத்தான் செய்யும்! அது ஜனநாயக கடமையும் கூட!
செய்தியாளர்கள சந்திக்காம SCRIPT PAPER வச்சு நீங்க டையலாக் பேசறதும், சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாம திருதிருன்னு உம்முன்னு, கம்முன்னு நீங்க இருந்தத தமிழ்நாடே பாத்துச்சி CM SIR..
அப்புறம், மாதம் 200 UNIT மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடின்னு சொல்லிட்டு பாதி மக்களை ஏமாத்த வெக்கமா இல்லையா சார்! இதுக்கும் திமுகதான் காரணம்னு நீங்க கடிச்சி வைப்பீங்க - உங்க குணமே அதானே!
பிப்ரவரி மாத இடைக்கால பட்ஜெட்லயே வருவாய் பற்றாக்குறை, கடன்சுமை எவ்வளவுன்னு அரசு சொன்ன பின்னாடி தானே நீங்க தேர்தல் அறிக்கை வெளியிடீங்க? - அந்த அறிக்கையிலேயே “இந்த கடன் அளவை சாக்குப் போக்காக பயன்படுத்த மாட்டோம்”ன்னு சொல்லிட்டு இப்போ பல்டி அடிக்க உங்களுக்கு கேவலமா இருக்காதுதான்..
இனியாவது நசநசன்னு பொய்களை அரைவேக்காட்டுத்தனமா பேசாம, முதலமைச்சரா உண்மைகளை, ஒழுங்கா பேச கத்துகோங்க! நாட்ல என்ன நடக்குதுன்னு கண்ணத் திறந்து பாருங்க!
#TVKFails
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, உங்கள் இயலாமைக்கு என்ன காரணம்?
சட்டமன்ற பேச்சையும், வெளியுலக பேச்சையும் ஒப்பிட்டு பாருங்கள் அரசியல் அசிங்கம் புரியும்
-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. @dmk_raja எம்.பி அவர்கள்
#TVKFails