அரசு பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் என் மகன் 👇👇
தெரிந்தாலும் வீட்டில் ஆங்கிலம் பேசுவதில்லை, அவனுக்கு சொல்லிக் கொடுத்ததும் இல்லை 🙏
அவனாகவே தேடி படித்தான் ஆங்கிலப் புத்தகங்கள் வாசித்தான், ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்தான். கற்றுக்கொண்டான் 💪
ஆங்கிலம் அறிவல்ல 🤧
மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கும் தவெக அரசு.
கன்னியாகுமரிமாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணை காலாவதி ஆகும் நிலையில்,அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கன்னியாகுமரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய செயற்குழு கூட்டத்தில்இதே தவெக, இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நாடகம் அரங்கேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான அழிவுத்திட்டங்களை திணிக்கும் பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறி நிற்கும் தமிழ்நாடு தவெக அரசின் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
முழு காணொளி மனிதி வலையொளியில்.
https://t.co/PhXtnCrTvr
ஜீன் 18 - World autistic pride day .
நாம் வாழும் உலகம் பல விதமான அளவுகோல்களையும், மைல்கற்களையும், சமூகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும், ஒரே மாதிரி வளர வேண்டும், ஒரே மாதிரி வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
ஒரு குழந்தை எப்போது பேச வேண்டும், எப்போது நடக்க வேண்டும், எப்போது கற்றுக்கொள்ள வேண்டும் என்று சமூகமே ஒரு கால அட்டவணையை உருவாக்கி வைத்திருக்கிறது. அந்தக் கட்டமைப்பிற்குள் பொருந்துபவர்களை மட்டுமே “சாதாரணமான(Normal) மனிதர்கள்” என்று ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் ஆட்டிசம் கொண்ட என் குழந்தை நித்திலா எனக்குக் கற்றுக்கொடுத்தது வேறொன்றை.
அன்பை அளவிட முடியாது. உணர்வுகளுக்கு ஒரு standard வடிவம் கிடையாது. வாழ்க்கையை இன்பமாய் அனுபவித்து வாழ சமூகத்தின் templateகள் தேவையில்லை. ஒவ்வொரு கண்களுக்கும் ஒவ்வொரு வகையில் இந்த உலகம் அழகுதான்.
என் குழந்தை நித்திலாவின் உலகத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது ஒரு வரம். அவளுடைய சிந்தனை, அவளுடைய உணர்வுகள், உலகத்தை அணுகும் அவளுடைய தனித்துவமான பார்வை – இவை அனைத்தும் என்னை தினமும் இன்னும் மனிதநேயமுள்ளவளாகவும், இன்னும் humble ஆன மனிதியாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன.
ஆட்டிசம் என்பது குறைபாடு அல்ல. அது உலகத்தை உணரும் ஒரு வித்தியாசமான வழி.
இந்தக் குழந்தைகள் நமது சமூகத்தின் ஓர் அங்கம் மட்டுமல்ல; அவர்களும் நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்.
தனித்துவத்தின் அழகை அவர்கள் தினந்தோறும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய நாளில், ஆட்டிசம் கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்.
அவர்களுக்கு வேண்டியது இரக்கமல்ல.... சம வாய்ப்புகள் வேண்டும்.
பரிதாபமல்ல, புரிதல் வேண்டும்.
தனிமைப்படுத்தலல்ல, இணைந்த வாழ்விற்கான பாதுகாப்பான இடம் வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் மதிப்புமிக்கது.
ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உலகில் சமமான இடம் உண்டு. அதை உறுதிசெய்வதும் அதற்கான குரலை வலிமையாக பதிவுசெய்வதும் கூட அரசியல் கடமை தான். அதை தொடர்ந்து முன்னெடுப்போம்
#WorldAutisticPrideDay
10 லட்சம் கோடி கடன்.
-- பாட்டாவே பாடினார் சீமான் அண்ணன்.
இலவசங்களால் தான் இவ்வளவு கடன்.
-- தேர்தல் பிரச்சாரத்தில் இதனால் நான் இலவசம் தரமாட்டேன் என சொன்னார் சீமான் அண்ணன்..
போக்குவரத்து துறையில் 75000 கோடி கடன்.
-- கடனில் துறை இருக்க யார் கேட்டார்கள் இலவச பேருந்து என கேட்டார் சீமான் அண்ணன்.
மின்சாரவாரியத்தில் 2.75 லட்சம் கடன்.
-- இவ்வளவு கடனில் எதற்கு இலவச மின்சாரம் என கேட்டார் சீமான் அண்ணன்.
பிறக்கும் குழந்தை தலையில் 1 லட்சம் கடன் இருக்கிறது.
-- நாமெல்லாம் பிறக்கும் பொழுதே கடனாளிகள் என சொன்னார் சீமான் அண்ணன்.
இதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை சீமான் அண்ணனின் தேர்தல் பிரச்சார காணொளிகள் பார்த்தாலே தெரியும்.
அண்ணன் சீமான் ஒரு ஒருங்கிணைந்த கூட்டுப் பண்ணை மாதிரி அமைக்க வேண்டுமென்று எண்ணுவார்கள் யார்?
அப்படி ஆரம்பித்தால் அதற்கு நான் 10,000/- நிதி அளிக்க தயாராக உள்ளேன் 🙌