மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ
சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்
#CMJosephVijay
"போலியோ இல்லாத உலகத்தை உருவாக்குவோம்" என்ற குறிக்கோளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்கேற்றேன்.
பிறந்த குழந்தைகள் தொடங்கி ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இதன்மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து பெறாத பெற்றோர்கள், உங்கள் அருகில் உள்ள முகாமுக்குச் சென்று தங்கள் குழந்தைகளுக்கான சொட்டு மருந்தினை கொடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, பொம்மைகளையும் வழங்கினார்.
#CMJosephVijay
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
The King of screenplay is no more.
Deeply saddened to hear about the sudden demise of #Kbhagyaraj sir.A huge loss to the film industry. Rest in peace dear sir.🙏🏻
My deepest condolences to his family,friends and fans. Stay strong @imKBRshanthnu Machi.
தலைமைச் செயலகத்தில் உள்ள எமது அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை, மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களிடம் வழங்குவதற்கு நேற்று (25.06.26) மாலை தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டேன்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள், 'நானே உங்கள் அறைக்கு வந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறேன்' என்று நேரில் வருகை தந்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் மக்கள் நலப்பணி சிறந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தினேன்.
@imrajmohan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை, பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் "ஸ்டார்ட் RUN, ஸ்டாப் DRUGS" போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பங்கேற்று, அதில் கலந்து கொண்டவர்களுடன் உரையாடினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @BussyAnand | @AadhavArjuna |
@AdvocateVenkatP | @MarieWilson_TVK | @R_Kumar_TVK |