மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்
மாளிகையில் நடைபெற்று வருகிறது
#AIADMK
ஒரு நாள் இல்ல இரண்டு நாள் இல்ல…
20 நாளாக மின்வெட்டு!
தொடரும் மின்வெட்டால் போராட்டத்தில் மக்கள்!
மாற்றம் என்பது எளிய மக்களுக்கு ஏமாற்றம் தானா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
திருச்சி புறநகர் தெற்கு மற்றும் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
தர்மபுரி பேருந்து நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலேயே, இளம்பெண் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது என்று தம்பட்டம் அடிக்கும் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' என்ன செய்து கொண்டிருக்கிறது?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய மத்திய அரசும், தமிழகத்தை ஆளும் த.வெ.க. அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழகத்தில் குதிரை பேரம் நடைபெறுவதை அனுமதிக்க மாட்டேன் என்று சொன்ன மேதகு ஆளுநர் அவர்கள், தற்போது பொய்க்கால் குதிரை அரசு நடத்தி வரும் குதிரை பேரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்கள்
ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி அமைச்சரவைக் கூட்டத்தில் தவெக ஆதரவாளர்கள் கலந்துகொண்டது குறித்து விசாரணை மேற்கொண்டு, மேதகு ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்கள்
புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்டு, ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கிய அம்மா உணவகத்தை, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகச் சர்வநாசம் செய்து, கடந்த ஆட்சியின் நீட்சியாகச் செயல்படும் பொய்க்கால் குதிரை அரசு.
ஒரு பெண்ணை பொதுவெளியில் கொடூரமாகத் தாக்கும் அளவுக்கு தவெக நிர்வாகிகளுக்கு துணிச்சலைக் கொடுப்பது யார்? ஆளுங்கட்சி என்ற அதிகார போதையா, அல்லது சட்டத்தின் மீதான அச்சமின்மையா??
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஈரோட்டில் காதலிக்க மறுத்த 19 வயது இளம்பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்திய நபர்.
கல்லிடைக்குறிச்சி அருகே சிறுவன் உட்பட இருவர் கொலை.
தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு.
ஆற்காடு அருகே கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை!
திருச்சி அருகே கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு.
சட்டம் - ஒழுங்கு????
@CMOTamilnadu.
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
செங்கல்பட்டு கிழக்கு மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள் தலைமையில்,
தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு, மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
#AIADMK
“கல்லாப்பெட்டி கூட்டணி என்று தேர்தலுக்கு
முன் சொன்ன கட்சிகளை எல்லாம்
‘Sofa கூட்டணி' க்குள் நுழைக்க முயற்சி''
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#EdappadPalanisamy#CMVijay#TVKAlliance#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
“தங்கள் சுயலாபத்திற்காக திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்தது என்ற ஒரே பொய்யை திரும்ப, திரும்ப சொல்கின்றனர்”
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி
#admk#tvk#agrikrishnamurthy#vijay#News18TamilNadu
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதே திட்டத்தை, கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
அந்த தீர்மானத்தில் இத்திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது.
தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா @CMOTamilNadu ?
எதற்கு இந்த இரட்டை வேடம்?
மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரப்பூர்வமான கேள்விகளை அரசை நோக்கி கேட்டு மக்களுக்காக நின்றவன் நான். “மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம்” என்று சட்டப்பேரவையிலேயே முழங்கினேன் நான். இந்த வரலாறெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அடுத்த கட்சி MLA-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “Sofa கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா?
மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களுடன் நிற்பது மட்டும் தான் @AIADMKOfficial-ன் ஒரே பணி!
அது ஒருநாளும் மாறாது!
நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதலமைச்சர் விளக்க வேண்டும்; உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial