சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது.
அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
@Subramanian_ma@PrabhakarRaja88
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பனையூர் பாபு அவர்கள் தனது ஆதரவாளர்கள், 1200 பேருடன் நமது தலைவர் @mkstalin அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது அதில் நாம் பங்கேற்றோம்.
கழகத்தில் இணைந்த தோழர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
கொள்கை அரசியலை, கவர்ச்சி அரசியலை வைத்து வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
ஒற்றுமையுடன் கரம் கோத்து தமிழ்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடச் செய்வோம்.
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் அண்ணன் PTC G.செல்வராஜ் அவர்களின் பேரன் R.G.அபிஷேக் - S. கீர்த்தனா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெற்றபோது அதில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக் கூறினோம்.
அன்பும் இனிமையும் சூழ்ந்து, மணமக்களின் இல்லற வாழ்வு சிறப்பாக அமையட்டும்!
செங்கல்பட்டு தொகுதியில் மாற்றுக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சகோதரர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில் 1500 பேர் நமது தலைவர் @mkstalin முன்னிலையில் கழகத்தில் இன்று இணைத்துக் கொண்ட நிகழ்ச்சியில் நாமும் பங்கேற்றோம்.
திராவிடக் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதில் கழகமே உறுதியான இயக்கம் என்பதை உணர்ந்து நம்முடன் இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
உடன்பிறப்புகளாய்
ஒன்றிணைந்து செயலாற்றுவோம்!
#DMK @thamoanbarasan
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்!
தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்றும் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.