இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
இது கரூர் தொகுதி மக்களின் வெற்றி.. !
என் கரூர் சட்டமன்ற தொகுதி மக்களே மற்றும் என் உயிர் மூச்சான கழகத் தொண்டர்களே...
இந்தத் தேர்தலில் நான் பெற்ற வெற்றி என்பது தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த வெற்றியல்ல,
இது உண்மைக்கும்,
நேர்மைக்கும்,நீங்கள் என் மீது கொண்ட மாறாத அன்புக்கும் கிடைத்த வெற்றி.
கடந்த காலங்களில் அமைச்சராகப் பணியாற்றிய போது,மக்கள் நலனே என் பணி என்று உழைத்தேன். இடையில் சில காலங்கள் அதிகாரத்தில் இல்லாத போதும்,உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களோடு நின்றேன்.இன்று மீண்டும் என்னை நம்பி,உங்கள் பிரதிநிதியாகப் பணியாற்றும் மாபெரும் வாய்ப்பை வழங்கியிருக்கிறீர்கள்.
ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உங்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில்,
வரவுள்ள ஐந்து ஆண்டுகளும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும்,
நம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் நான் அயராது பாடுபடுவேன் என உறுதி அளிக்கிறேன்.
வெயிலையும்,மழையையும் பொருட்படுத்தாமல் எனக்காகக் களத்தில் நின்று பணியாற்றிய என் ரத்தத்தின் ரத்தமான தொண்டர்களுக்கும், தோழமை கட்சிகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
உங்கள் உழைப்பு வீண் போகாது..!
#கரூர் #AIADMK_ForeverForTN
தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் தான் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்!
மாநிலத்தின் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி, தமிழ்நாட்டைச் சுரண்டித் தின்றுக் கொழுத்த ஒரு குடும்பத்தை உங்கள் வாக்குகளால் விரட்டியடிக்கப் போகும் தேர்தல் இது!
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து, தமிழ்நாட்டை போதை மற்றும் வன்முறைக் காடாக மாற்றிவிட்டது திமுக அரசு!
இந்த அராஜக ஆட்சியில் இருந்து உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆயுதம் உங்கள் வாக்கு தான்!
ஒரு குடும்பத்தின் காட்டாட்சியை ஒழித்து, குற்றமற்ற நல்லாட்சியை வழங்க @AIADMKOfficial எனும் மக்கள் இயக்கத்தால் மட்டுமே முடியும்.
தொற்று நோய் தடுத்து,
விவசாயம் செழிக்கச் செய்து,
கல்வியில் புரட்சி செய்து,
தமிழ்நாட்டைச் சரியான திசையில் வழிநடத்திய அஇஅதிமுக-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான நமது தேர்தல் அறிக்கை மூலம் வளமான ஒரு எதிர்காலத் தமிழ்நாட்டை நாம் கட்டமைக்க உள்ளோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறவும்,
@AIADMKOfficial தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திடவும்,
உங்கள் பொன்னான வாக்குகளை
#இரட்டைஇலை சின்னத்திலும்,
#தாமரை சின்னத்திலும்,
#மாம்பழம் சின்னத்திலும்,
#குக்கர் சின்னத்திலும்
அளித்திட வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
“அமைதி- வளம்- வளர்ச்சி” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுப் பாதையில் மீண்டும் தமிழகம் பயணிக்கப் போகும் நன்னாள் வந்துவிட்டது!
சந்தோஷமாக, மனநிறைவோடு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அடுத்த 5 ஆண்டுகள் உங்கள் மனம் நிறையும் காலமாக இருக்கும்.
அதற்கு உங்கள் எடப்பாடி K பழனிசாமி ஆகிய நான் உறுதியளிக்கிறேன்!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில், பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு,குப்பை கிடங்கு உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டு,நவீன முறையில் மேலாண்மை செய்யப்பட்டன.
ஆனால்,விடியா திமுக ஆட்சியில் பராமரிப்புப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.
குப்பைகள் மலையென தேங்கிக் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மாநகராட்சி நிர்வாகம்,தூய்மைப் பணிகளில் மெத்தனமாக இருப்பது ஏன்?
அஇஅதிமுக ஆட்சியில் செயல்திறன் இருந்தது..
இன்று அலட்சியம் மட்டுமே மிஞ்சுகிறது..!
மாண்புமிகு திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையிலான அரசு அமைந்ததும் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
போக்குவரத்துத்துறையை நவீனமயமாக்கி, பாதுகாப்பான மற்றும் சீரான பயண சேவைகளை உறுதி செய்து, மக்களின் நம்பிக்கையை உயர்த்தி செயல்பட்டது அதிமுக அரசு.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK
எந்தத் துறையில் அமைச்சராக இருந்தாலும் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருப்பவர் தான் செந்தில் பாலாஜி!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
எதிர்க்கட்சியாக இருந்தபோது,
மதுவிலக்கு கொண்டு வரப்படும் எனக் கூறிவிட்டு,
ஆட்சிக்கு வந்த பின்,
மனமகிழ் மன்றம் என்ற பெயரில், தனியார் மதுபான கடைகள் அதிக அளவில் சத்தமே இல்லாமல் திறக்கப்படுவதற்கு அனுமதி அளித்து வருகிறது இன்றைய விடியா திமுக அரசு,
அதனை எதிர்த்து போராடும் மக்களையும், அராஜக போக்குடன் காவல்துறை மூலம் கைது செய்கிறது.
மதுக்கடைகளை விட அதிக எண்ணிக்கையில் மனமகிழ்மன்றங்களை திறந்து வைத்துக் கொண்டு, படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றும் failure model ஸ்டாலின் அரசு.
#DMKFailsTN #ByeByeStalin
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை ராஜகம்பள தொட்டிய நாயக்கர் சமூக சங்கங்களின் நிர்வாகிகளான, வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜகம்பள சமுதாய நலச் சங்க மாநிலச் செயலாளர் திரு. செந்தில்குமார், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு. P.S. மணி, வீரபாண்டிய கட்டபொம்மன் சமுதாய அறக்கட்டளைத் தலைவர் திரு. N.M. பழனிச்சாமி, ராஜகம்பள மகாஜன சங்க துணைத் தலைவர் திரு. காசிராஜன், வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் பேரவைத் தலைவர் திரு. சத்தியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது சங்கங்களின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தனர்.
நம்முடைய கரூர் மாவட்டம்,
வெண்ணைமலை மற்றும் இதர பகுதிகளில் உள்ள இனாம் வகைப்பாட்டு நிலங்கள் தொடர்பான பிரச்சனையில்,தங்களின் உரிமைகளுக்காக உறுதியோடு போராடிய
என் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் முதல் நபராக நான் அவர்களுடன் களத்தில் இருப்பேன் என்பதனை தெரிவித்து, 2026-இல் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையிலான நம் மக்களின் அரசு அமைந்ததும் இனாம் வகைப்பாட்டு நிலங்கள் தொடர்பானபிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
#கரூர்
#இனாம்_நிலங்கள்
சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவி ஆங்கிலேயரின் வியூகத்தை உடைத்தெறிந்தவர்,இந்திய நாட்டுப்பற்றுக்கும் விடுதலைப் போராட்டத் தியாகத்துக்கும் அடையாளமாய் விளங்கிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினமான இன்று, அவரது உன்னத தியாகத்தை இதயம் நெகிழ்ந்து போற்றி வணங்குவோம்.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKFailsTN#ByeByeStalin
தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது.
ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத "ஸ்டாலின் அரசின் சாதனை" என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKFailsTN #ByeByeStalin
சென்னை பாரிமுனை பகுதியில்,
கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?
தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது.
ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத "ஸ்டாலின் அரசின் சாதனை" என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம்.
தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்
@AIADMKOfficial
இரட்டை வாக்குகள்,போலி வாக்குகள், இறந்தவர்களை நீக்கியது போன்ற முறைகேடான வாக்குகளை வாக்காளர் பட்டியலில் இருந்து S.I.R. வாயிலாக நீக்கியது தான், உண்மையான வாக்குகளுடன் நடைபெற்ற பீகார் தேர்தலில் NDA கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என,
கழகப் பொருளாளர்,முன்னாள் அமைச்சர் திரு. @Srinivasanoffl அவர்கள் பேசியதை,
தங்களுக்கு ஏற்றாற் போல தேவையானதை மட்டும் எடுத்து அதனை வெட்டி, ஒட்டி பதிவிட்டு 200 ரூபாய் பரிசு பெற முயல்வதுதான் கொத்தடிமைத்தனம். @DMKITwing
இவ்வளவு வேகமாக பதிவிட்டவர்கள், "உங்கள் தலைவர் @mkstalin அவர்களுக்கு S.I.R - ஐ கண்டால் ஏன் நடுங்கிறது?" என்ற எங்கள் கழகப் பொருளாளரின் கேள்விக்கான பதிலையும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
மீண்டும் கேட்கிறோம்.
#SIRனா_பயமா_ஸ்டாலின்SIR