எனது பிறந்த நாளை (ஆக 17) முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்த -
மாண்��ுமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய்,
மாண்புமிகு மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி,
மாண்புமிகு மேனாள் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்,
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,
மதிமுக தலைவர் திரு. வைகோ,
சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர்
தோழர் பெ.சண்முகம்,
சிபிஐ(எம்) மூத்த தலைவர் தோழர் கே.பாலகிருஷ்ணன்,
சிபிஐ மாநிலச் செயலாளர்
தோழர் மு. வீரபாண்டியன்,
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்,
தமிழ்நாடு காங்கிரசு தலைவர்
திரு.மாணிக்கம் தாகூர்,
காங்கிரஸ் மேனாள் தலைவர்
திரு. கே.எஸ்.அழகிரி,
இனமுரசு சத்தியராஜ்,
மரியாதைக்குரிய வி.கே.சசிகலா அம்மையார்,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,
நாடாளுமன்ற உறுப்பினர்
கனிமொழி கருணாநிதி,
சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பி��பாகர்,
வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்
உலகநாயகன் கமல்ஹாசன்,
மேனாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
மேனாள் அமைச்சர் பி கே சேகர்பாபு,
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்
தலைவர் ஜி.கே.வாசன்,
மேனாள் அமைச்சர் எச். வி. ஹண்டே,
புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்,
இயக்குநர் பா.ரஞ்சித்,
இயக்குநர் மாரி செல்வராஜ்,
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி,
நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ,
மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,
மாண்புமிகு அமைச்சர் பெ .விஸ்வநாதன்,
மாண்புமிகு அமைச்சர் அருண்ராஜ்,
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள்,
தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது,
இயக்குநர் சீனு ராமசாமி,
சட்டமன்ற உறுப்பினர்
திருமதி சவுமியா அன்புமணி,
சட்டமன்ற உறுப்பினர் ஜோஷ் சார்லஸ் மார்டின்,
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஓ. பி.ரவீந்திரநாத்,
சாமித்தோப்பு அய்யா பால பிரஜாதி அடிகளார்,
பேரா. கு. சொக்கலிங்கம்,
அதிமமுக தலைவர் பசும்பொன் பாண்
டியன்,
திரைப்பட பாடலா��ிரியர் கவிஞர் சினேகன்,
நடிகர் தாடி பாலாஜி,
திருமதி சர்மிளா பாலாஜி ஆகியோருக்கும்;
தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், இன்னபிற நண்பர்கள், எமது கட்சியின் முன்னோடிகள் மற்றும்
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
விபசாரம் பண்ணி காசு பாக்குறவ பத்தினிய பாத்து ஏகத்தாளமா சிரிப்பாளாம் அந்த மாதிரி இருக்கு உன் பதிவு ஆ.ராசா அவர்களே…
@thirumaofficial | @dmk_raja | @AIHighlight
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் திரு. வன்னி அரசு அவர்கள், சமூக நீதித்துறை அமைச்சராக இன்று தலைமைச் செயலகத்தில் அலுவல் பணியைத் தொடங்கினார்.
எனது அரசியல் ஆசான் - அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்களின் முப்பதாண்டுக்���ால அரசியல் போராட்டம் இன்று வெற்றியடைந்திருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர் கண்ட சமூகநீதிக் கனவு இன்று சாத்தியமாகியிருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தம்பி வன்னிஅரசு அவர்கள் இன்று அமைச்சராகப் பொறுப்பேற்றார். மாண்புமிகு அமைச்சர் வன்னிஅரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
@Flipkart I ordered an HP Deskjet 2080 on June 2. It won’t power on. HP engineer says motherboard issue—needs replacement. HP needs a correct invoice, but Flipkart has sent 3 invoices with the WRONG serial number. I’ve contacted support 50+ times. Still no fix. Help! @_Kalyan_K
@Flipkart I ordered an HP Deskjet 2080 on June 2. It won’t power on. HP engineer says motherboard issue��needs replacement. HP needs a correct invoice, but Flipkart has sent 3 invoices with the WRONG serial number. I’ve contacted support 50+ times. Still no fix. Help! @_Kalyan_K
#தாய்ச்சொல் - 03
-------------
உதிரிகளா நமது எதிரிகள்?
-------------
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம் !
களமிறங்கிச் செயல்படுவோர் யாவராயினும் அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாவது தவிர்க்க இயலாதது. அதன்படியே கருத்தியல் தளங்களிலும் செயற்பாட்டுக் களங்களிலும் தொடர்ந்து மக்களோடு நின்று பாடாற்றிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
விமர்சனங்கள் எவ்வாறாயினும் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் பொறுமையையும் பின்னர் அவற்றினடிப்படையில் சுய விமர்சனம் செய்துகொள்கிற துணிவையும் பெறுவதுதான் வெற்றிகரமான அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் முற்போக்கான வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும்.
அப்படியே நாம், நம் மீதான
விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டு, அவை நேர்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இருந்தால், அவற்றிலிருந்து
நம்���ை நாமே சுய விமர்சனங்களுக்கு உட்படுத்திக் கொள்வதை நடைமுறையாகக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கேற்ப தேவையான மாற்றங்களையும் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், நம்மைப் பற்றிய விமர்சனங்கள் எத்தகையவையாக உள்ளன?
அவை, பெரும்பாலும் திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுகளாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன.
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகவே நமது களப்பணிகள் மற்றும் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப, நமக்கு எதிரானவர்கள் விமர்சனங்கள் என்னும் பெயரால் மிகவும் அப்பட்டமான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அவை, மிகவும் கேடான உள்நோக்கம் கொண்டவை.
சமூகம், பண்பாடு, மற்றும் அரசியல் தளங்களில், நாம் கைக் கொண்டுள்ள கருத்தியல் மற்றும் நிலைப்பாடுகள், நமது களம் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக வெவ்வேறு வகையிலான பகைவர்கள் அவ்வப்போது உருவாகி வருகின்றனர். அவர்கள் நம்மை வீழ்த்துவதற்குக் கையாண்டுவரும் உத்திகள் ஏராளம். அவற்றுள் முதன்மையான ஒன்றுதான் அவதூறு பரப்புதலாகும்.
விமர்சனம் என்பது வேறு!
அவதூறு என்பது வேறு!
வி��ர்சனம் என்பது ஒருவரின் அல்லது ஒரு இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகள் மற்றும் களப்பணிகள் ஆகியவற்றில் காணும் நிறை- குறைகளை மதிப்பீடு செய்வதாகும். குறைபாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல் நிறைகளையும் வரவேற்றுப் பாராட்டுவதும்தான் விமர்சனமாகும். ஆனால், அவ்வாறின்றி வாய்க்கு வந்தபடி வன்மத்தைக் கக்குவது விமர்சனமல்ல; அவதூறாகும்!
நம்மை விமர்சிப்பவர்களில்
இருவகை உண்டு.
நம் மீது நம்பிக்கையும்,
நமது வளர்ச்சியில் அக்கறையும் கொண்டவர்கள் ஒருவகை.
நம்மை ஏற்க மனமில்லாத, நம் வளர்ச்சியை முற்றிலும் விரும்பாத, நம்மை வீழ்த்தி மகிழ்ந்தாட காத்திருக்கும் சதிகாரர்கள்
இன்னொரு வகை.
முதல் வகையினர்,
கொள்கை- கோட்பாடுகள் சார்ந்து குறைகளைச் சுட்டிக்காட்டினாலும், அதில் ஆக்கப்பூர்வமான அறிவுறுத்தல்கள் இருக்கும். அவர்களின் விமர்சனங்களில் கடுமையான காய்தல் இருந்தாலும் காயப்படுத்துதல் இருக்காது. அவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கும் சுயவிமர்சனம் செய்து நம்மை நாமே சீர்செய்து கொள்வதற்கும் அவை இடமளிக்கும்.
ஆனால், இரண��டாம் வகையினர், கொள்கை சார்ந்து விமர்சிப்பதைவிட, வெறுப்பை உமிழ்வதிலேயே குறியாய் இருப்பர். அருவருப்பான சுடுசொற்களை அள்ளி வீசுவர். உணர்ச்சிகளைத் தூண்டி, உள்ளத்தைக் கீறி நம்மை நிலைகுலை�� வைப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பர்.
நாகரிகம் என்பது அவர்கள் அறியாத ஒன்று. அண்டப் புளுகுகளே அவர்களுக்கான தொழில் முதலீடு. நீதி, நேர்மை போன்ற அறம்சார் பண்புகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பிருக்காது. அவதூறு பரப்புதலே அவர்களின் சாதனைகள். அவர்கள் அமைப்புசாரா உதிரிகள். ஏதேனும் அமைப்பைச் சார்ந்திருந்தாலும் அவ்வமைப்புக்கு எவ்வகையிலும் கட்டுப்படாத தான்தோன்றிகள்.
அவர்கள் தனிநப��ாயினும் அல்லது ஓர் அமைப்பைச் சார்ந்தவராயினும் அவர்களிடம் கருத்தியல் தெளிவில்லையேல்; களமாடும் திறமில்லையேல்; அவர்களால் எவரோடும் எதனோடும் இணைந்தோ இணங்கியோ இயங்கிட இயலாது.
இவர்கள் தமக்குத்தாமே தனிமைப்பட்டு தற்பெருமைப் பேசி தம்பட்டமடிப்பதில் தனிசுகம் காண்பர். 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என ஏறுக்கு மாறாய் செயல்பட்டு இறுமாப்புக் கொள்வர். இடக்கு முடக்காய் இட்டுக்கட்டிப் பேசுவர���. எடுப்பார் கைப்பிள்ளைகளாய் ஏவல்களைச் செய்வர். எளியோரை இகழ்ந்து ஏகடியம் பண்ணுவர். வலுத்தோரின் பார்வைக்கேற்ப வாலாட்டி மகிழ்வர். நிலைகெட்ட மாந்தர். நெறிகெட்ட வீணர்.
மக்களோடு தொடர்பில்லாத இவர்களா நம்மை மதிப்பீடு செய்வது? எவர் நம்மை விமர்சிப்பவர்கள் என்பதையறிந்தே நம் எதிர்வினைகள் அமையவேண்டும்.
கொண்ட கொள்கைக்கென தம் வாழ்வைத் தொலைத்தவர்கள், வலியைச் சுமப்பவர்கள், மக்களை நேசிக்கும் மாந்தநேயம் உள்ளவர்கள் செய்யும் விமர்சனங்களை நாம் புறம்தள்ள இயலாது. அவர்கள் கொள்கை அடிப்படையில் நம் எத��ரிகள் என்னும் நிலையில், அவர்களின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு.
அது தவிர்க்கமுடியாதது.
ஆனால், எதிலும் உறுதியில்லா உதிரிகளா நமது எதிரிகள்? ஆதாரம் ஏதுமின்றி இவர்கள் பரப்பும் அவதூறுகளா நம்மை அசைக்கும் ஆயுதங்கள் ?
காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரைக் கண்டும் காணாமல் கடந்து செல்வோம்!
காலமெல்லாம் மக்களுக்காகக் கடமையாற்றுவதில் கவனம் குவிப்போம்!
��க்கபூர்வமான விமர்சனங்கள எதிர்கொள்வோம்!
ஆதாரமில்லாத அவதூறுகளைப் புறம்தள்ளுவோம்!
இவண்:
தொல்.திருமாவளவன்.
21-11-2024 @பழநி
யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. 😁😁😁
"கடைசி மனிதனுக்கும் சனநாயகம்!
எளிய மக்களுக்கும் அதிகாரம்!
ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! - என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி " -
என்று கடந்த செப்-12 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவி���் ஆற்றிய உரையின் சு��ுக்கம்..
முழு காணொளி இணைப்பு: https://t.co/zzcYTSyE6K