"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பாடலை வெளியிட்டார்.
உன் தலை நிமிர
உன் நிலை உயர
Say No to Drugs
#CMJosephVijay
வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்கள்!
ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு
தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி இருக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் @lokbhavan_tn ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிதாக அமைந்துள்ள @CMOTamilnadu ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல் திட்டங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே.
மதசார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மீனவர் நலன் ,பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப சமத்துவம், சம தர்மக் கோட்பாடுகளை நிலை நிறுத்த புதிய அரசு உறுதியாக இருப்பதை ஆளுநர் உரையில் பிரகடனம் செய்திருப்பது நம்பிக்கை தருகிறது.
மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த பேரறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதி செய்திருக்கிறார்.
2031 இல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு “வெற்றி தமிழகம்“என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.
சமூக நீதியை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என்று அறுதியிட்டு கூறியிருப்பதும், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அழுத்தம் திருத்தமாக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசு நிர்வாகத்தில் புறையோடிக் கிடக்கும் லஞ்ச ஊழல்களை அடியோடு ஒழிக்கவும்,
நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தி அனைவருக்குமான அரசாக தமிழ்நாடு அரசு திகழும்.
கனிம வளக் கொள்ளைகள் தடுக்கப்படும்;
அரசின் வருவாய் அதிகரிப்பதற்கு மதுபான உற்பத்தியாளர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த வரித் தொகை சுமார் 1000 கோடிக்கு மேல் அரசின் கருவூலத்திற்கு கொண்டு வந்திருப்பது நிதி மேலாண்மையில் புதிய அரசின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.
ஒன்றிய அரசு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் நிலையில் நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு முனைப்பாக இருக்கிறது.
தமிழக அரசு இயந்திரம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்.
தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு எளிமையான வழிமுறைகள் உருவாக்கப்படும்.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்; போதைக் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும்.
இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
போன்ற அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
@TVKVijayHQ ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கதாகும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
18.06.2026
#vaiko #CMJosephVijay #governer #TamilnaduAssembly #mdmk
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்
#CMJosephVijay
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு அவர்களை இன்று (10.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay@rashtrapatibhvn
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட“சிங்கப்பெண்” திட்டத்தின் தொடக்க விழா நிகழ்வின் சிறப்புத் தருணங்கள்
Glimpses from the Inaugural Launch of Singappen by the Hon’ble Chief Minister
https://t.co/rzpOXOQPos
#CMJosephVijay#Singappen#TNPolice#DGPTamilNadu
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!
#CMJosephVijay
திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் அண்ணன் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
எனக்கு என்றும் உறுதுணையாக வழிகாட்டும் மாண்புமிகு அமைச்சர், அன்பு அண்ணன் @BussyAnand அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
என் மீது பேரன்பு கொண்ட திருச்சி மாவட்ட பொது மக்கள், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் தோழிகள் அனைவருக்கும் நன்றிகள்!
மலைக்கோட்டை மாநகரான திருச்சி மாவட்டம் தளபதி கோட்டையாக என்றும் திகழும்!
With the man who started it all for #Karuppu !!! ❤️❤️❤️
Wow…! Feels unreal to meet him now as the honourable Chief Minister of Tamil nadu !!!🔥🔥🔥
Same love, warmth, kindness and calmness…!!! 🙏🙏🙏
Thank you for everything dearest Vijay sir ❤️🤗🧿