கரூர் மரணங்களுக்கு மூலக் காரணம் முதல்வராக இருக்கும் விஜய்.
கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, உண்மையை மூடி மறைத்து ஆதவ் அர்ஜுனா பேசுவதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம்!
இயற்கைத் தாயின் செல்லப் பிள்ளையான கன்னியாகுமரிப் பகுதியில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது. தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் இந்த இன்னொரு முயற்சி உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றம்.
- தவெகவின் செயற்குழுவில் இயற்றப்பட்ட 21வது தீர்மானம் (03.11.24)
அன்றைக்கு தவெகவின் செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாறாக, அத்திட்டத்துக்கென முந்தைய காலத்தில் வாங்கப்பட்ட 5 ஆண்டுகால அனுமதி 10 நாட்களில் காலாவதி ஆக இருந்த நிலையில், ஓராண்டுக்கு அனுமதியை நீட்டித்து இருக்கிறது தவெக அரசின் இயற்கை வளத்துறை.
இதன்மூலம், அத்திட்டம் உயிர்பெற்று, செயலாக்கம் பெறும் அபாயம் இருக்கிறது.
அனுமதி கொடுத்த 'புண்ணியவான்' இயற்கை வளத்துறையின் அமைச்சர் பிரபு.
2017ஆம் ஆண்டு முதல் 2026 வரை ஆட்சி செய்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்திய ஓட்டைகளை அடைத்து வருகிறோம் என சட்டமன்றத்தில் பேசினார் முதல்வர் விஜய்.
அதாவது, அன்றைக்கு ஆட்சியாளர்களாக, அமைச்சர்களாக இருந்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் ஓட்டைகளை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார். அந்த ஓட்டை ஏற்படுத்தியவர்கள் சிலரைப் பார்க்கலாம்.
2017ஆம் ஆண்டு முதல் 2021வரை பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன்.
2016ஆம் ஆண்டு முதல் 2021வரை தொழில்துறை அமைச்சராக இருந்தவர் எம்.சி.சம்பத்.
2016ஆம் ஆண்டு முதல் 2021வரை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர் கடம்பூர் ராஜூ.
2016ஆம் ஆண்டு முதல் 2017 வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், 2027ஆம் ஆண்டு முதல் 2021 வரை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் இருந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன்.
2016ஆம் ஆண்டு முதல் 2021 வரை சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் வெல்லமண்டி நடராஜன்.
2016ஆம் ஆண்டு முதல் 2021 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர்.
2016ஆம் ஆண்டு முதல் 2021 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
இவர்கள் அத்தனைப்பேரும் தற்போது தவெகவில்தான் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்படுத்திய ஓட்டைகளை இவர்களைக் கொண்டே அடைக்கப் போகிறாரா விஜய்?
அதாவது, முள்ளை முள்ளால் எடுப்பது போல, வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, ஊழல்வாதிகளைக் கொண்டே ஊழலை ஒழிக்கப் போகிறார் ஆச்சர்யக்குறி ஆட்சியாளர் விஜய். இதனைத்தான் சட்டமன்றத்தில் தனது சைகை மூலம் நாட்டு மக்களுக்கும் உணர்த்தியிருக்கிறார்.
செமல்ல!
உடைகளில்கூட வர்க்க வேறுபாட்டைக் கண்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சீருடையை அறிமுகம் செய்தார் பெருந்தலைவர் காமராசர்.
அந்த காமராசரைக் கொள்கைத் தலைவர் என்று கூறிக்கொண்டே, அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்போம் எனக் கூசாது சொல்கிறது கேடுகெட்ட தவெக அரசு.
அமைச்சர் @imrajmohan அவர்களே! இம்முடிவைக் கைவிடாவிட்டால் மிகப்பெரிய விலையை தவெக அரசு கொடுக்க நேரிடும். எச்சரிக்கை!
விஜய்யை விமர்சித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் இட்டப் பதிவுக்காக மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தம்பி திண்டுக்கல் ஹுசைன் அவர்களைக் கைதுசெய்திருக்கிற தமிழக அரசிற்கு கடும் கண்டனங்கள்.
#ReleaseHussain