த.வெ.க ஆட்சியமைந்த இந்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் நடக்கும் 4'வது ஆணவக்கொலை இது.. ஊடகங்களில் வராமலும் பல சம்பவங்கள் இருக்கலாம்..
கடந்த காலங்களில் ஸ்கிரிப்ட் பேப்பர் வைத்து படம் காட்டிய முதலமைச்சரோ இப்போது மௌனப்படம் போல கம்முன்னு, உம்முன்னு இருக்க கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?
7 தலித் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என மார்தட்டிக் கொண்டவர்கள் யாரும் ஏன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கூட சந்திக்கவில்லை. சமூகநீதித் துறை அமைச்சர் இதுகுறித்து வெளிப்படையாக பேச வேண்டும்.
முதலமைச்சர் இனியாவது விளம்பர அரசியல் செய்து உண்மைகளை மறைக்காமல் பொறுப்பானவராக செயல்பட வேண்டும்! அடுத்தவர்களின் மீது பழிபோடும் அல்ப அரசியலை கைவிட வேண்டும்!
#TVKFails
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
Script paper-ஐ மட்டும் படிக்கும் Dummy CM அவர்களே தினமும் News paper படிங்க.
Sofa model ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அனைத்து நியூஸ் பேப்பரும் இலட்சணத்தைச் சொல்கிறது.
#TVKFails
இந்த மாதிரியான அநாகரிக செயல்களை அரசுதான் கண்டிக்க வேண்டும் CM Sir.
ஆட்சி வேறு, கட்சி வேறு! மக்கள் பிரதிநிதிகள் வேறு, கட்சி பிரதிநிதிகள் வேறு என்பதை உங்கள் ஸ்டைலில் பேசி கொஞ்சம் புரிய வையுங்கள். அறிவைத் தேடி வரும் மாணவர்களிடம் எல்லை மீறக் கூடாது.
கருப்பு கோர்ட் போடுறது பெரியாரோட கொள்கையாம் இதைவிட ஒரு மோசமான உருட்டை யாராலயும் உருட்ட முடியாது.
சொந்த ஜோசியருக்கு அதிகாரப்பூர்வமா பதவி கொடுக்க முயற்சி பண்ணி பல்பு வாங்குன நீங்க ஒரு உண்மையான பெரியாரிஸ்ட்டா...
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க..
கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin#KalaignarForever
வேதா பண்ணதுலயே தரமான சம்பவம்னா அது இது தான்
வாக்கரசியல்ல இருக்கவங்க பாத்து தான் பேசணும்ங்கிற ruleலாம் என் தலைவன்கிட்ட கிடையாது
Always on rebel mode💥💥
#kalaingarforever#kalaingar103