ஆனி 13ஆம் நாள் 27-06-2026 அன்று சென்னை தி.நகரில் உள்ள பென்ஸ் பார்க் (Benzz Park)அரங்கத்தில் நடைபெற்ற சமூக ஊடக ஆளுமைகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு.
அண்ணன் சீமான் மீது பரப்பிய பொய்களையும், அவதூறுகளையும் கொஞ்சம் கூட மனச்சான்று இல்லாமல் ஊடகத்தில் காட்டிய கூட்டம் இது😡
அண்ணன் சீமான் பேசிய மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பெரிதாக காட்டாமல், அவரை விமர்ச்சிக்கும் வகையில் உள்ள விடயங்களை மட்டும் காட்டிய ஊடங்கங்களுக்கு இது தேவைதான்💯
@Seeman4TN@_ITWingNTK
நீங்க அனை கட்டுங்க சார் எங்களுக்கு அதை விட மகிழ்ச்சியான செய்தியாக இனி தியேட்டர்ல படம் லாம் 5 முறை போட எங்க முதல்வர் அனுமதி கொடுத்துட்டாரு அது போதாதா எங்களுக்கு...🤣🤣🤣 #TVKVijay#TVKVijayHQ#TVKVijayFails#TVK
@_ITWingNTK இந்த மாதிரி டெய்லி பத்து வீடியோ சுத்தல்ல விட்டாலே போதும் மக்களை சென்றடையும்
ஏதாவது effictive step எடுங்க... எங்கள மாதிரி ஆட்கள் அதை முடிந்தவரை கடத்துகிறோம்
@Seeman4TN@NaamTamilarOrg@ntkstalin
இன்று 24.05.2026 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் பெண்கள் மீதான தொடர் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தமிழ் நாடு அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
700 TASMAC மூடல் எனும் SCAM ⚠️
1000+ புதிய FL2 & 11to11 பார்களுக்கு அனுமதி
கட்சி ஆட்களுக்கு மட்டுமே License
முதல் மாதத்திலேயே வேலையைக்காட்டிய விஜய் @TVKVijayHQ#TVK_Fails
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
என்ன விஜய் கோவில் பக்கத்துல இருக்க கடையெல்லாம் மூடுனேன் சொன்னிங்களே அது உண்மை தானா..??
கோவில் மசூதி சர்ச் மூணும் இருக்க இடத்துல் இருக்க இந்த டாஸ்மாக் ஏன் மூடல...
இந்தக் காணொளியை வெளியிட்ட சில மணி நேரங்களில் இவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது
எந்தக் காணொளி யாரையும் சென்று சேரக்கூடாது என நினைத்தார்களோ அதை பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர்க்க வேண்டியது நமது கடமை 💯
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ
Rajkamal_Thalapathy என்ற தவெக தொண்டரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்கள் அண்ணன் சீமானைப்பற்றி பேசியதாக ஒரு காணொளி பொய்யாக எடிட் செய்து பரப்பப்படுகிறது... இதே காணொளி பல இடங்களில் தவெகவினரால் பரப்பப்படுகிறது...
உண்மையில் அந்த காணொளியில் பேசப்பட்டிருப்பது தமிழா தமிழா பாண்டியன் என்ற நபரைத்தான்...
அண்ணன் சீமானுக்கு எதிராக ஆதாரமில்லாமல் பல பொய்யான தகவலை பேசிய தமிழா தமிழா பாண்டியனின் உண்மை முகத்தைப்பற்றி அண்ணன் சாட்டை துரைமுருகன் பேசியிருப்பார்...
திருமாவளவன் 500 நாடுகளுக்கு சென்றதாக அடிப்படை அறிவு இல்லாமல் பேசக்கூடிய நபர்தான் தமிழா தமிழா பாண்டியன்...
உண்மை இப்படியிருக்க தவெக தொண்டர்கள் திட்டமிட்டு பொய்யாக வெட்டி ஒட்டி காணொளிகளை பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...
அரசியல் நாகரீகம் இல்லாமல் மற்ற அரசியல் தலைவர்கள் மீது அவதூறு பரப்புவதை தமிழக வெற்றிக் கழக IT WING நிறுத்திக்கொள்ள வேண்டும்...