வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி சென்னையின் மையத்தில் இருந்தாலும், எந்தவித வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பார்க்காத தொகுதியாக இருந்தது. அதிகம் எளிய உழைக்கும் மக்கள் வாழும் தொகுதி இது. ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட நிலையிலேயே வாழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே திமுக வில்லிவாக்கம் தொகுதியை வைத்திருந்தது.
இந்நிலையில், கழகத் தலைவர் அவர்கள் என்னை வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளராக அறிவித்தார். வில்லிவாக்கத்தில் அதிகம் சாதாரண மக்கள் வாழும் அன்னை சத்யா நகரிலிருந்து என் முதல் பிரசாரத்தைத் தொடங்கினேன். தொடர்ந்து, செல்லும் இடங்களில் எல்லாம் வில்லிவாக்கத்தின் தாய்மார்கள், அக்காக்கள், தங்கைகள் என அனைவரும் என்னை அவர்கள் வீட்டுப் பிள்ளையாக வாழ்த்தி அரவணைத்தார்கள்.
பிரசாரம் செல்லும் எங்கும் இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்துக் கலந்துரையாடினார்கள். மூத்த குடிமக்கள் தொகுதியின் பல்வேறு குறைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்தார்கள். உழைக்கும் மக்கள், சிறுகுறு வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் தேவைகளை எடுத்துக் கூறினார்கள்.
அனைவரும் கேட்ட ஒரே விஷயம் - "தங்களுக்கு மாற்றம் வேண்டும்; மன்னர், இளவரசர் என்ற ஆதிக்க அரசியல் ஒழிந்து அனைவருக்குமான அரசியல் உருவாக வேண்டும்; மக்களிலிருந்தே மக்களுக்கான தலைவர்கள் உண்டாக வேண்டும்; மக்கள் அரசு நிலைபெற வேண்டும்" - என்பதாகவே இருந்தது.
இன்று, தமிழக மக்கள் தங்கள் தலைமகனை தமிழ்நாடு முதல்வராக்கியிருக்கிறார்கள். வில்லிவாக்கம் மக்கள் அவர்கள் வீட்டுப் பிள்ளையை தங்கள் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
இன்று, அவர்கள் பிரதிநிதியாக மட்டும் அல்ல, அவர்கள் குடும்ப உறுப்பினராக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினேன்.
வில்லிவாக்கம் பெருமக்கள் எனக்கு அளித்திருக்கும் பொறுப்பு பெரிது. அதனை "நன்றி" என்ற ஒருவார்த்தையில் என்னால் சுருக்கிவிடமுடியாது. அவர்கள் அளித்த பொறுப்பைக் கடமையாக ஏற்று, அவர்களுக்கான நன்றியை எனது செயலில் காட்டுவேன்.
இயற்கையும் காலமும் இங்கு நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. நமக்கான காலம் நம் கையில் உள்ளது. இனி, நமக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.
1/2