குழந்தைகள் நலனுக்கான #Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
ஊதியம் இல்லாத நிலையில் Childline பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் இந்தப் பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம்.
எனவே Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மெட்ராஸ் மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி, 'தமிழ்நாடு' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய வரலாற்றுப் பெருமித நாள்!
தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வெல்க!
எண்ணில்லா போராட்டங்களாலும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களாலும், நம் அன்னைத் தமிழ் நிலத்தின் பெயரை மீட்டளித்திட்ட நாள் இது.
நம் கழகம் பெற்ற அதிகாரத்தால், நம் தாய்நிலம் தலைநிமிர்ந்து, தெற்கிலிருந்து தொடங்கும் இத்துணைக் கண்டத்தின் வரலாற்றை முழங்கும் இனமானச் சொல்லாக நிலைப்பெற்றுவிட்டது, நம் தமிழ்நாடு!
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநில உரிமைகளைக் காத்திட உறுதிகொள்வோம்.
“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
சமூக வலைத்தளத்தில் தவெக அரசின் ஊழல்களை பதிவிட்டால் அவர்களை கைது செய்வது, அரசியல் கண்ணோட்டத்துடன் எதிர்க்கட்சியினரை பழி வாங்குவது என்ற வரிசையில் இப்போது ஊடகவியலாளர் விஜயனை காவல்துறை குறி வைத்திருக்கிறது. கடத்தல் பாணியில் இழுத்துச் சென்று, அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு அலைக்கழிக்கிறது. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக உள்ள விஜயனின் செல்போனும் காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மதிக்காத இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
60 நாள் ஆட்சியின் அராஜக முகம் ஒவ்வொரு நாளும் கொடூரமாக வெளிப்படுகிறது. என் ஆட்சியில் ஜனநாயகத்திற்கும் மரியாதை கிடையாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்க வேண்டிய ஊடகங்களுக்கும் மரியாதை கிடையாது என்று சொல்லாமல் சொல்கிறாரா சி.எம் சார்?
Life la oru appa va @Udhaystalin na & oru Thatha va @mkstalin thalaivaruku semma proud ana moment 🔥💯♥️
Udanpirapugal TL ku indha photo ponum avangalum happy agattum 🕺🏻😅
#DMK | #MKstalin | #Udhayanidhistalin |