"30 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக சொல்லி ரசிகர்களை ஏமாற்றியவர் ரஜினி" - மூத்த பத்திரிக்கையாளர் மணி
ஒன்று, மணி 30 வருடங்களாக ரஜினி குறித்த பத்திரிக்கை செய்திகளையே படிக்காதவராக இருக்கவேண்டும்; அல்லது, ரஜினி வெறுப்பாளராக இருக்கவேண்டும். இந்த வீடியோ 👇பார்த்தால் உங்களுக்கு புரியும்.
"காலம் பதில் சொல்லிவிட்டதா?" என ரஜினியை பார்த்து நையாண்டி செய்யும் விஜய் ரசிகர்கள் உணராதது -
எந்த திமுகவின் மிரட்டலால் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜுனா சொன்னாரோ, அந்த திமுகவின் தலைமையில் வென்ற கூட்டணி கட்சிகளின் தயவில் விஜய் ஆட்சி அமைத்தபோதே காலம் பதில் சொல்லிவிட்டது.
எந்த திமுகவை தீயசக்தி என விஜய் சொன்னாரோ, அந்த திமுக தலைவரின் வீடேறிச் சென்று அவரை விஜய் கட்டியணைத்து (நம்பிக்கை வாக்கெடுப்புக்காக) குழைந்தபோதே காலம் பதில் சொல்லிவிட்டது.
எந்த காங்கிரஸை திமுக விலைக்கு வாங்கிவிட்டது என விஜய் சொன்னாரோ, அந்த காங்கிரஸை அமைச்சரவையில் சேர்த்தால்தான் ஆட்சி பிழைக்கும் என்ற நிலை வந்தபோதே காலம் பதில் சொல்லிவிட்டது.