தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் @SUDHARSANAM_S உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKWins2026
தி.மு.கழகத்தின் முதன்மை அணியான @dmk_youthwing-க்கு, தமிழ்நாடு முழுவதும் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைகளிலும், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகளிலும் மற்றும் அனைத்து பாகங்களிலும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, மிகப் பெரிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
சட்டமன்றத் தேர்தலில், கழக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆலோசனையின் பேரில், தலைமைக் கழக ஒப்புதலுடன், இளைஞர் அணியின் 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்டு '#களத்தில்_இளைஞர்_அணி' எனும் மாபெரும் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம்.
ஒவ்வொரு பாகத்திற்கும் உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சேர்த்து, அந்த பாகத்தில் கழகத்தின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட 10 இளைஞர்கள், பாக வாரியாக இளம் வாக்காளர்களை நேரில் சந்தித்து, கழகத் தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பார்கள். தேர்தல் நாளான 23.04.2026-க்குள் இரண்டு முறை வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார்கள்.
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்ற உறுதியுடன் நம் மாநிலத்தின் உரிமைகளை, டெல்லிக்கு அடகு வைக்கத் துடிக்கும் அடிமைகளின் எண்ணத்தை மக்களிடம் எடுத்துரைப்போம், அரசின் ஐந்தாண்டு கால சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்! கழகத் தலைவர் தலைமையில் #திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
4 நாட்களில் 8 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு - அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டங்கள் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், கழக நிர்வாகிகளுடனான சந்திப்புகள்!
இன்று திருப்பத்தூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணி நிர்வாகிகளுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
செல்லும் இடமெல்லாம் மக்கள் அளித்த வரவேற்பும் - அன்பும் - ஆதரவும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மீதும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்தியது.
தொடர்ந்து மக்களிடம் செல்வோம்! மக்கள் நலம் பெற, மாநிலம் வளம் பெற 2026-ல் மீண்டும் கழக அரசு அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்பத்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட்டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்நாட்டு அரசியலின் முதுபெரும் ஆளுமை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு மறைந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசத்தை அனுபவித்தார். அவரது மீசைமுடிகள் காவல்துறையால் சுட்டுப் பொசுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். என்றபோதும் பிரிட்டிஷ் ஏகாபத்திய எதிர்ப்புப் போரில் உறுதியாக நின்றார்.
விடுதலைக்குப் பின்பு விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக களத்தில் நின்றார். தென்மாவட்ட சாதிக்கலவரத்தில் தன் மாமனார் கொல்லப்பட்டபோதும் நல்லிணக்கப்பணிகளில் கவனம் செலுத்தினார். தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார்.
அவரது 60 ஆண்டுக்கால பொதுவாழ்க்கையை சிறப்பு செய்யும் வகையில், பாராட்டு விழா நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கோடி ரூபாயை அவருக்கு வழங்கியது. அதை அப்படியே கட்சி நிதிக்கு திருப்பித் தந்தார்.
பொதுவுடைமை இயக்கப் போராளியான தோழர் நல்லகண்ணு தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள்மீது பெரும் மதிப்பு கொண்டவர். முத்தமிழறிஞர் கலைஞருடன் ஆழமான நட்பு கொண்டவர். “எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று கலைஞரால் பாராட்டப்பட்டு, அம்பேத்கர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தோழர் நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி சிறப்பித்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட 10 லட்சத்துடன் தன் சொந்தப் பணமான ஐயாயிரம் ரூபாயையும் சேர்த்து, பத்து லட்சத்து ஐயாயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
பொதுவாழ்க்கையில் எளிமையும் போராட்டக் குணமுமே தோழர் நல்லகண்ணுவின் அடையாளங்கள். மக்களுக்காக உழைத்த மகத்தான தலைவருக்கு அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!
நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!
அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.
மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!
#AnnaForever #AnnaLivesOn #PerarignarAnna